Sunday 10 January 2016

ஸாம்பாஷ்டகம்

ஸாம்பாஷ்டகம்
மஹான்கள் எனப்படுவோர் இதர உயிர்கள் அனைத்தையுமே உய்விக்கச் செய்ய வேண்டுமெனும் இயற்கையான அவா மிகுந்தவர்களாவர். சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் 34-ஆவது ஜகத்குருவான ஸ்ரீஸ்ரீ சந்திரசேகர பாரதி மஹாஸ்வாமிகள் இத்தகைய மஹானுபாவர் ஆவார். இறைவனைச் சரணடைந்தால் மட்டுமே இம்மைக்கும் மறுமைக்கும் நன்மை கிட்டும் என்பதை இடைவிடாது ஜனங்களுக்கு உபதேசித்து வந்தவர் இவர். பற்பல தெய்விக ஸ்தோத்திரங்களைப் புனைந்தருளிய இவரது "ஸாம்பாஷ்டகம்" எனும் ஸ்தோத்திரமானது மிக அற்புதமான ஒன்று. ஸம்ஸாரப் பிணியினின்று விடுபட விழையும் அனைவராலும் தவறாது பாராயணம் செய்யப்பட வேண்டிய இவ்வுயர்ந்த ஸ்லோகம் கீழே தரப்பட்டுள்ளது.

ஸந்த: புத்ரா: ஸுஹ்தே உத வ: ஸத்களத்ரம் ஸுகேஹம்
வித்தாதீசப்ர திமவஸுமான் போபவீது ப்ரகாமம் |
ஆசாஸ்வாஸ் தாமம்ருதகிரண ஸ்பர்த்தி கீர்த்திச்சடா வா
ஸர்வம் வ்யர்த்தம் மரண ஸமயே ஸாம்ப ஏக: ஸஹாய: ||

நல்ல புத்திரர்கள், நண்பர்கள், அனுகூலமான மனைவி, எல்லாப் பொருள்களும் நிறைந்த அழகிய வீடு, குபேரனுக்குச் சமமான ஐஸ்வர்யம், எண் திசைகளிலும் பரவிய நற்கீர்த்தி ஆகியவை உள்ள போதிலும் மனிதனுக்கு உயிர் போகும் தறுவாயில் அவற்றால் பயனில்லை. இவற்றில் ஒன்றாவது இவனைக் காப்பாற்றாது. அக்காலத்தில் மிருத்யுஞ்ஜயரான ஸாம்ப பரமேச்வரர் ஒருவரால்தான் உதவிபுரிய முடியும். ஆயுள் காலத்தில் எத்தனை பொருள்களைச் சேகரித்த போதிலும் சாகும்பொழுது எல்லாவற்றையும் விட்டுப்பிரிந்து தனியாகத்தான் செல்லவேண்டும்.
தான் கஷ்டப்பட்டு ஸம்பாதித்த பொருள்கள் மூலம் ஸத்கதியை அடையமுடியாது. முன்னதாகவே பக்தியுடன் ஸாம்ப பரமேசுவரனைச் சரணடைந்தால் அவர் தமது கருணையினால் மரண சமயத்தில் உனக்கு உதவி செய்து ஸத்கதியை அடையச்செய்வார். எப்பொழுதும் ஸாம்பனை பஜிக்கவேண்டும்.
ஸாம்ப என்ற பதத்திற்கு அம்பிகையுடன் கூடியவர் என்று பொருள். ஸாம்ப பரமேசுவரனை நாம் ஸ்மரித்தால் கருணையே வடிவம் கொண்ட ஜகன்மாதா குழந்தைகளான நாம் படும் துன்பங்களைப் போக்கி சாவற்ற நிலையளிக்கும்படி பரமேசனிடம் சிபாரிசு செய்வாள்.

வாதே ஸர்வானபி விஜயதாம் ஸத்ஸபாயாம் ந்ருபாக்ரே
போகான் ஸர்வான் அநுபவது வா தைவதைரப்யலப்யான் |
பூமௌ நீரே வியதி சரிதும் வர்ததாம யோகசக்தி:
ஸர்வம் வ்யர்த்தம் மரணஸமயே ஸாம்ப ஏக: ஸஹாய: ||

மஹாராஜாவின் முன்னிலையில் பெரிய வித்வத் ஸதஸ்ஸில் வாதத்தில் எல்லாப் பண்டிதர்களையும் ஜயிக்கும் படியான கல்வித்திறமை பெற்றும் பலனில்லை. ஸ்வர்க்க லோகத்தில் தேவதைகளுக்கும் கிடைக்காத அரிய போகங்களை இவ்வுலகில் அனுபவித்ததனாலும் பலனில்லை. நினைத்த மாத்திரத்தில் பூமியில் எங்கும் செல்வதற்கும், தண்ணீரின் மேலே நடப்பதற்கும், ஆகாசத்தில் சஞ்சரிப்பதற்கும், யோக சக்தியால் திறமை பெற்றிருந்தாலும் பலனில்லை. அந்த்யகாலத்தில் இவை காப்பாற்றாது. ஸாம்பன் ஒருவன்தான் மிருத்யுவிடமிருந்து காப்பாற்றுவான்.

ரூபம் வாஸ்தாம் குஸும விசிகாகர்வ கர்வாபஹாரி
சௌர்யம் வாஸ்தாமமாபதி ஸம்க்ஷோப தக்ஷம் நிதாந்தம் |
ப்ருத்வீபால ப்ரவர மகுடாகட்டணம் ஸ்யாத் பதே வா
ஸர்வம் வ்யர்த்தம் மரணஸமயே ஸாம்ப ஏக: ஸஹாய: ||

தானே அழகிற் சிறந்தவன் என்று புஷ்ப பாணனான மன்மதன் கொண்டுள்ள கர்வத்தைப் போக்கும்படியாக, அவனைவிட மேலான அழகைப் பெற்றும் பயனில்லை. பலசாலிகளில் சிறந்தவனான தேவேந்திரனுடைய மனத்தையும் கலங்கச்செய்யும்படியாக, அதிகமான வீர்யம் அடைந்தும் பயனில்லை. மரணகாலத்தில் இவை உதவி செய்யாது. ஸாம்பன் ஒருவன்தான் உதவி செய்வான்.

கேஹே ஸந்து ப்ரவரபிஷஜ: ஸர்வரோகாபநோதா:
தேசே தேசே பஹுதநயுதா பந்தவ: ஸந்து காமம் |
ஸர்வே லோகா அபி வசநதோ தாஸவத் கர்ம குர்யு:
ஸர்வம் வ்யர்த்தம் மரணஸமயே ஸாம்ப ஏக: ஸஹாய: ||

எந்த வியாதி வந்தாலும், உடனே அதைப் போக்குவதில் திறமை வாய்ந்த சிறந்த வைத்யர்கள் வீட்டிலேயே இருந்தாலும் மரணத்திலிருந்து தப்பமுடியாது. எல்லா தேசங்களிலும் ஏராளமான ஐசுவர்யம் படைத்த உறவினர்கள் இருந்தாலும் அவர்களாலும் காப்பாற்ற முடியாது. தான் வாய் அசைத்த மாத்திரத்தில் உலகில் உள்ள எல்லா ஜனங்களும் வேலைக்காரர் போல் ஊழியம் செய்தாலும் பலனில்லை. அந்த்ய காலத்தில் இவையெல்லாம் பிரயோஜனப்படாது. ஸாம்பன் ஒருவன்தான் உதவி செய்வான்.

அத்யாஸ்தாம் வா ஸுமணிசுசிதம் திவ்யபாரீண (ந்த்ர) பீ
ஹஸ்த்யச்வாத்யைரபி பரிவ்ருதோ த்வாரதேசோsஸ்து காமா |
பூஷ்யந்தாம் வாபரணநிவஹைரங்ககான்யர்க்க சூன்யை:
ஸர்வம் வ்யர்த்தம் மரண ஸமயே ஸாம்ப ஏக: ஸஹாய: ||

நவரத்னங்கள் இழைத்த திவ்ய ஸிம்மாசனத்தில் அமர்ந்து மஹாராஜாவாக விளங்கினாலும் தன் அரண்மனை வாசலில் எப்பொழுதும் யானைகள், குதிரைகள் முதலிய ஸைன்யங்கள் நின்றாலும், தனது சரீரத்தில் எல்லா அங்கங்களிலும் விலைமதிக்கமுடியாத ஆபரணங்களை அணிந்திருந்த போதிலும் மரணசமயத்தில் யமனிடமிருந்து தப்ப முடியாது. அப்பொழுது ஸாம்ப பரமேசுவரன்தான் உதவி செய்வார்.

தத்தாம் மூர்த்னி ப்ரவரமணிபிர் ஜுஷ்டதீவ்யத் கிரீடம்
வஸ்தாம் தேஹம் விவிதலஸனைர் ஹேமஸூத்ராவபத்தை: |
ஆருஹ்யாஸௌ விசரது புவம் திர்யகாந்தோனிகாம் வா
ஸர்வம் வ்யர்த்தம் மரணஸமயே ஸாம்ப ஏக: ஸஹாய: ||

நவரத்னங்கள் இழைத்த மிகுந்த ஒளியுடன் கூடிய திவ்ய கிரீடத்தை சிரஸில் அணிந்திருந்தாலும், ஸ்வர்ண ஜரிகைகளாலேயே நெய்யப்பட்ட பல தினுஸான பொன்னாடைகளை சரீரத்தில் தரித்திருந்த போதிலும், அட்டப்பல்லக்கில் ஏறி பூமி முழுவதும் சுற்றிவந்த போதிலும், சாகுந்தறுவாயில் இவையெல்லாம் உதவி செய்யாது. ஸாம்பன்தான் உதவி செய்வான்.
பட்டணப்பிரவேசத்தில் பல்லக்கைக் குறுக்காக எடுத்துச் செல்வது ஒரு விசேஷ மரியாதை. இது சிருங்கேரி பீடாதிபதிகளுக்கு மஹாராஜர்களால் அளிக்கப்பட்ட அஸாதாரண மரியாதையாகும்.

ஸர்வாசாந்த ப்ரகடிதரவைர் பந்திபி: ஸதூயதாம் வா
பேரீ டக்கா ப்ரமுகபிருதம் திக்ஷூ தந்த்வன்யதாம் வா |
ப்ருத்வீம் ஸர்வாமவது ரிபுபி: க்ராந்தபாதாக்ரபீட:
ஸர்வம் வ்யர்த்தம் மரணஸமயே ஸாம்ப ஏக: ஸஹாய: ||

ஸ்துதி பாடகர்கள் பூமியில் எல்லா திசைகளிலும் கடைசி வரை சென்று எங்கும் இவன் புகழைப் பாடினாலும் பலனில்லை. இவனுடைய திக்விஜயத்தைக் காட்டுவதற்காக எங்கும் பேரி டக்கா முதலான வாத்யங்கள் முழங்கினாலும் பிரயோஜனமில்லை. சத்ருக்கள் யாவரும் யுத்தத்தில் தோல்வியடைந்து இவன் பாதங்களை வைக்கும் பீடத்தில் சிரஸ் உராயும்படி வணங்கினாலும், பூமி முழுவதையும் ஆண்டாலும் எல்லாம் வியர்த்தமே. சாகும் தறுவாயில் ஸாம்பன் ஒருவனே உதவிசெய்வான்.

ஹ்ருத்யாம் பத்யாவளிமபி கரோத்வர்த்த சித்ரம் ஸுகாவ்யம்
ஷட்சாஸ்த்ரேஷ்வப்யமித திஷணோ க்ரந்த ஸந்தோஹ கர்த்தா |
ஸர்வேஷாம் ஸ்யாதமித ஹ்ருதயாநந்ததோ வாங்முகைர் வா
ஸர்வம் வ்யர்த்தம் மரண ஸமயே ஸாம்ப ஏக: ஸஹாய: ||

மனத்தை இன்புறச் செய்கின்ற சுலோகங்களையும் பாட்டுகளையும் விசித்திரமான கருத்துகள் நிறைந்த காவியங்களையும் இயற்றினாலும், ஆறு சாஸ்திரங்களிலும் எல்லையற்ற அறிவுத்திறனுடன் பற்பல நூல்களை இயற்றினாலும், கேட்பவர் யாவருடைய மனத்திலும் அளவற்ற ஆனந்தத்தை உண்டுபண்ணும்படியாக சொற்பொழிவு ஆற்றினாலும் பலனில்லை. மரணத்தறுவாயில் ஸாம்ப பரமேசுவரர் ஒருவரே உதவி செய்பவர். இந்த ஸ்தோத்திரத்திலிருந்து உலக போகங்களிலும் பீடாதிபத்யத்திலும் உபசரணைகளிலும், கௌரவத்திலும் ஸ்ரீ ஜகத்குருவின் மனம் கொஞ்சமும் ஈடுபடவில்லை என்பது நன்கு புலனாகிறது.

7 comments:

  1. ஸ்ரீ குருப்யோ நம: நல்ல புதிய செய்தி. ஸ்ரிங்கேரி ஆச்சார்யாள் ஆசீர்வதித்து கொடுக்கிற சிவபஞ்சாயதன பூஜையில் சிவன் பெயர் 'சாம்ப பரமேஸ்வரன்". அப்படி ஆச்சார்யாரால் ஆசீர்வாதம் அருள்ப்பட்டவர்களில் அடியேனும் ஒருவன்.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீ குருப்யோ நமஹ தங்களது கருத்து மிக அருமை நன்றி

      Delete
    2. ஸ்ரீ குருப்யோ நம:

      Delete
  2. Dear FRiend, You are doing a great job.Can I find the lyrics in SAnskrit any where on line.

    ReplyDelete
    Replies
    1. ​Namaste ji


      I am very happy to know that you had visited this blog. My Namaskarams to you sir. You did a great service in this. Through your works i am learning. The sanskrit text is given below.
      ॥ साम्बाष्टकम् ॥

      सन्तः पुत्राः सुहृद उत वा सत्कळत्रं सुगेहं
      वित्ताधीशप्रतिमवसुमान् बोभवीतु प्रकामम् ।
      आशास्वास्ताममृतकिरणस्पर्धिकीर्तिच्छटा वा
      सर्वं व्यर्थं मरणसमये साम्ब एकः सहायः ॥ १ ॥

      वादे सर्वानपि विजयतां सत्सभायां नृपाग्रे
      भोगान् सर्वाननुभवतु वा दैवतैरप्यलभ्यान् ।
      भूमौ नीरे वियति चरितु वर्ततां योगशक्तिः
      सर्वं व्यर्थं मरणसमये साम्ब एकः सहायः ॥ २ ॥

      रूपं वास्तां कुसुमविशिखाखर्वगर्वापहारि
      शौर्यं वास्ताममरपतिसंक्षोभदक्षं नितान्तम् ।
      पृथ्वीपालप्रवरमकुटाघट्टनं स्यात्पदे वा
      सर्वं व्यर्थं मरणसमये साम्ब एकः सहायः ॥ ३ ॥

      गेहे सन्तु प्रवरभिषजस्सर्वरोगापनोदाः
      देशे देशे बहुधनयुता बन्धवस्सन्तु कामम् ।
      सर्वे लोका अपि वचनतो दासवत्कर्म कुर्युः
      सर्वं व्यर्थं मरणसमये साम्ब एकः सहायः ॥ ४ ॥

      अध्यास्तां वा सुमणिखचितं दिव्यपारीणपीठं
      हस्त्यश्वाद्यैरपि परिवृतो द्वारदेशोऽस्तु कामम् ।
      भूष्यन्तां वाभरणनिवहैरङ्गकान्यर्घशून्यैः
      सर्वं व्यर्थं मरणसमये साम्ब एकः सहायः ॥ ५ ॥

      धत्तां मूर्ध्नि प्रवरमणिभिर्जुष्टदीव्यत्किरीटं
      वस्तां देहं विविधवसनैर्हेमसूत्रावबद्धैः ।
      आरुह्यासौ विचरतु भुवं तिर्यगान्दोलिकां वा
      सर्वं व्यर्थं मरणसमये साम्ब एकः सहायः ॥ ६ ॥

      सर्वाशान्तप्रकटितरवैर्वन्दिभिः स्तूयतां वा
      भेरीढक्काप्रमुखबिरुदं दिक्षु दन्ध्वन्यतां वा ।
      पृथ्वीं सर्वामवतु रिपुभिः क्रान्तपादाग्रपीठः
      सर्वं व्यर्थं मरणसमये साम्ब एकः सहायः ॥ ७ ॥

      हृद्यां पद्यावलिमपि करोत्वर्थचित्रं सुकाव्यं
      षट्छास्त्रेष्वप्यमितधिषणो ग्रन्थसन्दोहकर्ता ।
      सर्वेषां स्यादमितहृदयानन्ददो वाङ्मुखैर्वा
      सर्वं व्यर्थं मरणसमये साम्ब एकः सहायः ॥ ८ ॥

      Namaskarams.


      Delete
  3. I saw this only today.Thanks. God bless you

    ReplyDelete
  4. Anantha kodi namskarams for wonderful work

    ReplyDelete