Tuesday 30 December 2014

உண்மையான நண்பன் பந்து யார்? - ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள்

உண்மையான நண்பன் பந்து யார்?

நாம் எல்லோரும் நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவன் இவன் நமக்கு பந்து, நண்பன் என்று சிலரை நினைத்துக் கொண்டு இருக்கிறோம். எல்லோரையும் நினைத்துக் கொள்வதில்லை. எத்தனையோ பேர் இருந்தாலும் மாபிள்ளை, சித்தப்பா பிள்ளை என்று சில ஆட்களை நினைத்துக் கொண்டு இருக்கிறோம். அதாவது அப்படி நினைத்துக் கொள்ளும் போது நம்முடைய மனதில் என்ன வருகிறது என்று கேட்டால் இவர்களால் நமக்கு ரொம்ப உதவி கிடைக்கும் என்கிற பாவம். கஷ்ட காலத்தில் ரொம்ப உதவி செய்வான். இவன் என் பிள்ளை. என் பிள்ளை எனக்கு கஷ்ட காலத்தில் ரொம்ப உபகாரம் செய்வான். அந்த மாதிரி நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் வாஸ்தவமாக கஷ்ட கலாத்தில் உபகாரம் செய்வது யார்? சாஸ்த்ரம் என்ன சொல்கிறது தெரியுமா? “ஆத்மைவஹ்யாத்மனோ பந்து:” உனக்கு நீ தான் பந்து. வேறு யாரும் இல்லை. அப்படி என்றால் அர்த்தம் புரியவில்லையே என்று பலபேர் கேட்கலாம். கஷ்டத்தில் உதவி செய்கிறவன்தான் பந்து என்று நாம் சொல்கிறோம். உனக்கு அந்த கஷ்ட காலத்தில் நீங்கள் முன்பு செய்திருந்த (தர்மம்) கர்மா உங்களுக்கு சுகத்தை உண்டாக்கும். அப்போது அந்த தர்மத்தை செய்தது யார்? நீங்கள்தான். நீங்கள் செய்த தர்மம்தான் உங்களுக்கு சுகம் கொடுக்குமே தவிர வேறு யாரும் கொடுக்க முடியாது. நாம் யாரை நமக்கு வேண்டப்பட்டவர்கள் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோமே அவர்களால் நாம் இந்த சரீரத்தை விட்டுப்போன பின்பு நம்மை ஏதாவது கவனிக்க முடியுமா? கவனிப்பார்களா? அதனால் நம்முடைய நிலைமை என்ன? நமக்கு என்ன ஆகப் போகிறது என்பது இவர்கள் யாருக்காவது தெரியுமா? அதில் இவர்கள் யாராவது உதவி செய்வார்களா, ஒன்றும் செய்ய மாட்டார்கள்; செய்யமுடியாது. இவர்கள் எது முடிய வருவார்கள்? நம்முடைய சரீரம் இருக்கும் வரைதான் நம்மோடு பேசுவார்கள்; பேசமுடியும். இந்தச் சரீரத்தை நாம் விட்டுப் போன பின் அவர்கள் தங்கள் வேலையை பார்க்கப் போய் விடுவார்கள். நாம் இந்தச் சரீரத்தை விட்டு போன பின்பு கூட நம் கூட வரும் ஒரே ஒரு பொருள் நாம் செய்த தர்மம்.

எல்லோரும் நம் உயிர் போனதும் நம்மைத் திரும்பிப் பார்க்காமல் போய் விடுவார்கள். ஆனால் தர்மம் ஒன்று மட்டும் நம்மோடுவரும். அந்த தர்மத்தினால்தான் நாம் அடுத்த ஜன்மத்தில் சுகத்தை அனுபவிக்க முடியும். அதனால் மனிதனுக்கு உண்மையான ஸ்நேகிதன் தர்மம்தான். அந்த தர்மத்தை செய்ய வேண்டியது நாம் தான். வேறு யாருமில்லை. அதனால் உனக்கு நீ தான் பந்து என்று சொல்கிறோம்.

அதே மாதிரி தொந்தரவு செய்யக்கூடியது அதர்மம். அதர்மத்தையும் நீ தான் செய்வாய். அதனால் உனக்கு நீ தான் சத்ரு. நீ அதர்மம் பண்ணினால் உனக்கு நீ தான் சத்ரு. நீ தர்மம் பண்ணினால் உனக்கு நீ தான் மித்ரன்.

ஆத்மை வ ஹ்யாத்மனோபந்து:
ஆத்மைவ ரிபுராத்மன: ||

வேறு யாரோ நமக்கு சத்ரு, பந்து, மித்ரன் என்று நினைத்துக் கொள்ள வேண்டியது இல்லை. நாம் சரியான ரீதியில் இருந்தால் நமக்கு நாம்தான் பந்து. நாம் சரியான ரீதியில் இல்லாவிட்டால் நமக்கு நாம்தான் சத்ரு. இந்தத் தத்வத்தை நாம் சரியாக புரிந்து கொள்ளவேண்டும். சாஸ்த்ரம் என்ன சொல்கிறது? என்றைக்கும் தர்ம மார்க்கத்தில் இரு. அதர்ம மார்க்கத்தில் போகாதே. அதர்ம மார்க்கத்தில் போனால் உனக்கு நீயே தொந்தரவு பண்ணிக்கொண்ட மாதிரி ஆகிவிடும். நீ அதர்மத்தை செய்து அதனுடைய பலனை அனுபவிக்கும்போது இன்னொருவனை ஆக்ஷேபித்து ப்ரயோஜனம் இல்லை. அதனால் யாரும் பொறுப்பில்லை. நீ பண்ணின பாபத்தினால்தான் உனக்கு இந்த துக்கம் கிடைத்து இருக்கிறது.

சுகமோ துக்கமோ நீ செய்த தர்மத்தினாலேயும், அதர்மத்தினாலேயும் கிடைக்கிறதே தவிர அதற்கு இன்னொருவனை காரணமாக சொல்வது ரொம்ப அவிவேகம். அதற்கு யாரும் காரணமில்லை. உனக்கு சுகம் வேண்டுமானால் தர்மத்தில் இரு. துக்கம் வேண்டாமானால் அதர்மம் பக்கம் போகாதே. இராமாயணம் பார்க்கிறோம் ஏன் இராமர் அப்படி ஒரு தர்மத்தை ஆசரணம் பண்ணினார். அந்த தர்மாசரணத்தால் அவருக்கு ஆக வேண்டியது என்ன உண்டு? அவருக்கு ஆக வேண்டியது ஒன்றுமில்லை. பகவான் பகவத் கீதையிலே சொன்னார்.

ந மே பார்தாஸ்திகர்தவ்யம் த்ரிஷுலோகேஷு கிஞ்சன |
நாநவாப்தமவாப்தவ்யம் வர்த ஏவ சகர்மணி ||

அர்ஜுனா! இந்த மூன்று லோகங்களிலேயும் பகவானுக்குச் செய்ய வேண்டியது அல்லது அடைய வேண்டியது ஒன்றும் இல்லை. பகவானுக்கு எதை அடைய வேண்டும்? மொட்டை மாடியில் உட்கார்ந்து இருக்கிறவனுக்கு பின் எங்கே மாடி ஏற வேண்டும்? கீழே உட்கார்ந்து இருக்கிறவன் தான் மொட்டை மாடிக்கு ஏறிப் போக வண்டும். மொட்டை மாடியில் உட்கார்ந்து இருப்பவன் மேலும் ஏற வேண்டாமே. அந்த மாதிரி பகவான் நித்யத்ருப்தனாய் இருக்கிறவனுக்கு எதுவும் அடைய வேண்டியது செய்யவேண்டியது இல்லை. ஏன் இராமர் பகவானாக இருந்தும் வனத்திற்குச் சென்று கஷ்டப்பட்டார். நமக்கு எல்லாருக்கும் வழி காட்டுவதற்காக அவர் தர்ம மார்க்கத்தில் இருந்து சாதாரணமான மக்களைப் போல் எல்லாவித இன்னல்களையும் அனுபவித்தார். ஏனெனில் ஓர் இயற்கை ஸ்வபாவம் என்ன என்றால் நாம் யாரைப் பெரியவர்கள் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோமோ அவர்கள் எப்படி ஆசரணம் பண்ணுகிறார்களோ அது மாதிரி நாமும் ஆசரணம் பண்ணுவோம்.

நாம் பெரியவர்கள் என்று யாரை நினைத்துக் கொண்டு இருக்கிறோமோ அவர்கள் ஒழுங்காக இருந்தால் நாமும் ஒழுங்காக இருப்போம். அவர்கள் சரியாக இல்லையென்றால் அவரே சரியாக இல்லை. நான் இனி சரியாக இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன என்று நினைத்து கொண்டு இருப்போம். அதனால் நம் எல்லோரையும் தர்ம மார்க்கத்தில் இருக்க வைப்பதற்காக அவ்வாறு இருந்தார். அவருக்கு தர்மத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஆகப் போவது ஒன்றுமில்லை. ஆனால் இராமர் அன்று தர்ம மார்க்கத்தில் இருந்ததனால் இன்று நாம் என்ன சொல்கிறோம் இராமர் அன்று தர்ம மார்க்கத்தில் இருந்ததினாலே நாம் இன்று இருக்க வேண்டும். இராமர் ஆதர்ஸம். இராமயாணத்தினால் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது இரண்டே இரண்டு விஷயங்கள். இராமர் போல் இருக்க வேண்டும். இராவணன் போல் இருக்கக்கூடாது. இரண்டு உபதேசம்தான் நாம் இராமாயணத்திலிருந்து தெரிந்து கொள்ள வேண்டியது இராமர் போல் வாழ்க்கையை நடத்து. இராவணன் போல் வாழ்க்கையை நடத்தாதே. ஏன் நடத்தக் கூடாது. கடைசியில் இராவணனுக்கு என்ன பலன் கிடைத்ததோ அது மாதிரி நமக்கும் கிடைக்கும். அவனுக்கு என்ன ஆயிற்று? ஸர்வநாசம் ஆகிவிட்டது. அவனுக்கு நெருங்கியவர்கள் ஒருவன் கூட பக்கத்தில் இருக்கவில்லை. இராமருக்கு என்ன ஆயிற்று கடைசியில் உலகம் பூராவும் அவரை ப்ரஸம்ஸை பண்ணியது (புகழ்ந்தது).

எங்கே போனாலும் இராமர், இராமர், இராமர் என்று ஜனங்கள் வாயில் வந்து கொண்டு இருந்ததே தவிர வேறு எதுவும் வரவில்லை. அதனால் நாம் தர்மம், அதர்மம் பற்றி சொன்னால் அதெல்லாம் பழைய காலத்து சமாசாரம் அப்பா என்று சிலபேர் சொல்லுவார்கள். பழைய காலத்து சமாசாரம் இல்லை எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் கூட தர்மம்தான் ஜயிக்கும். அதர்மம் ஜயிக்காது. தர்மம் செய்கிறவனுக்குத்தான் நன்மை கிடைக்கும். அதர்மம் செய்கிறவனுக்கு நன்மை வராது. இப்போது அதர்மம் பண்ணுகிறவன்தான் முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறான். முன்னுக்கு இப்போது வந்து கொண்டிருப்பவன் எல்லாம் தார்மீகன் என்று நாம் சொல்ல முடியுமா? எல்லா அக்கிரமும் பண்ணிக் கொண்டுதானே முன்னுக்கு வருகிறான். இப்போது தர்ம அதர்மத்தைப் பற்றிப் பேசி என்ன ப்ரயோஜனம் என்று சிலர் கேட்பார்கள். இந்த கேள்விக்கு முன்பே நம் தர்ம சாஸ்த்ரங்களில் ஜவாப் சொல்லி இருக்கிறார்கள்.

அதர்மம், அக்ரமம் செய்பவர்கள் முன்னுக்கு வருவார்கள். ஆரம்பத்தில் ரொம்பவும் முன்னுக்கு வருவார்கள். தன் எதிரிகளையெல்லாம் தோற்கடிப்பார்கள். அவர்கள் பெரிய பெரிய மாளிகைகள் எல்லாம் கட்டுவார்கள். ஆனால் கடைசியில் அவர்கள் கதி எப்படி இருக்கும்? அதற்கு இராவணனே ப்ரமாணம். மஹாபாரத்ததில் துரியோதனனே சாக்ஷி. கௌரவர்கள் அக்ரமமாகப் பாண்டவர்களுடைய இராஜ்யத்தை எல்லாம் அபகரித்தார்கள். 14 வருஷங்கள் எப்படி இருந்தான் துரியோதனன்? அந்த துரியோதனனுடைய இராஜ்யம் ரொம்ப ப்ரமாதமாகத்தான் இருந்தது. அந்த 14 வருஷம் ஆன பிற்பாடு பாண்டவர்களுடன் யுத்தம் நடந்தது. துரியோதனன் சமாசாரம் என்ன ஆயிற்று. அவனுடைய சகோதரர்கள் 99 பேரும் போய்விட்டனர். அவனும் போய்விட்டான். அவனுக்கு சம்பந்தப் பட்டவர்கள் எல்லோரும் போய்விட்டனர். துரியோதனன் பெயர் சொல்வதற்கு ஓர் ஆசாமி கூட இருக்கவில்லை. அதர்மம் செய்கிறவன் முன்னுக்கு வருவது வாஸ்தவம்தான். ஆனால் கடைசியில் என்ன ஆயிற்று அவனுக்கு. ஸர்வநாசம் ஆகிவிட்டது. இராவணனுக்கும் அதே மாதிரி. ஹனுமார் இலங்கைக்குப் போய் சீதாமாதாவை தர்சனம் பண்ணி இராவண சபையில் இராவணனைப் பார்க்கிற போது ஹனுமார் மனதில் என்ன வந்தது என்பதை வால்மீகி இராமாயணத்தில் எழுதி இருக்கிறார்.

அந்த இராவணனின் தோற்றம், அவனுடைய ஐஸ்வர்யம், அவனுடைய ப்ரபாவம், அவனுடைய அட்டஹாஸம் எல்லாம் பார்க்கிறபோது ஹனுமாருக்கு தோன்றியதாம் இவனுடைய பெர்ஸனாலிட்டியைப் பார்த்தால் இவன் மூன்று லோகங்களையும் பரிபாலனம் பண்ணக் கூடிய தகுதி இருக்கிறவனாய் இருக்கிறான். ஆனால் இவனிடம் அதர்மம் ரொம்ப இருந்து அதுவே இவனை நாசமாக்கப் போகிறது. அந்த அதர்மத்தினால் இவன் நாசமாகப் போகிறான். இந்த அதர்மம் ஒன்று இவனிடம் இல்லையென்றால் இந்த மூன்று உலகங்களிலேயும் யாரும் இவனைப் பிடிக்க முடியாது. ஜகன்மாதாவான சீதாமாதாவை தப்பான திருஷ்டியால் பார்த்தானே அதுதான் அவன் பண்ணின அதர்மம். நான் யாத்திரை பண்ணியபோது ஒருவன் என்னிடம் கேட்டான். நீங்கள் இராவணனை ரொம்பவும் துச்சமாகப் பேசுகிறீர்களே அவன் என்ன தப்பு பண்ணினான் சொல்லுங்கள் என்றான். சீதையைக் கடத்தினான் என்று இருக்கிறது அது தவிர அவன் என்ன தப்பு பண்ணினான் என்று கேட்டான். என்னடா? சீதையைத் தூக்கிச் சென்றான். வேறு என்ன தப்பு பண்ணினான் என்று கேட்கிறாயே? சீதையைக் கடத்தினான் என்பது சாதாரணமான தவறா? அது எவ்வளவு பெரிய விஷயம் என்பது உனக்கு புரியவில்லையா? நம்முடைய கலாசாரத்திற்கு நம்முடைய தர்மத்திற்கு ரொம்ப விபரீதமான காரியம்டா அது. நம் தர்மம் என்ன சொல்கிறது. நம் கலாசாரம் என்ன? நம் ஸம்ஸ்க்ருதி என்ன சொல்கிறது? நம் கல்சர் என்ன?

உலகத்தில் எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் தாயார் மாதிரி என்று நினைக்க வேண்டும். தாயாரைப் பார்த்தால் உன் மனதில் எந்த விகாரமும் உண்டாகாதே அதே போல் எந்த ஸ்த்ரீயைப் பார்த்தாலும் நம் மனதில் எந்த விதமான விகாரமும் உண்டாகக் கூடாது. இது முதல் விஷயம். நாம் எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் “அம்மா! அந்தப் பக்கம் போங்கோ” என்போம் அம்மா என்ற சப்தம்தான் வரும் வேறு எந்த சப்தமும் நம் வாயில் வராது. நம் முன்னோர் சொல்லிக் கொடுத்து இருக்கிறார்கள். எந்த ஸ்திரீயைப் பார்த்தாலும் “அம்மா இங்கே வாருங்கோ! அம்மா அங்கே போங்கோ” என்று. ஒரு வேளை திட்டவேண்டி வந்தாலும் “அம்மா உங்களுக்கு புத்தி இல்லையா?” அப்போதும் அம்மா என்றே சொல்லுவோம். ஏனென்றால் “மாத்ருவத் பரதாரேஷு” இதற்கு விருத்தமாக வர்த்தனம் பண்ணின இராவணனை என்ன தப்பு பண்ணினான் என்று கேட்கிறாயே? உனக்கு புத்தி உண்டாடா? என்று நான் கேட்டேன். அதனால் என்ன சொல்வதற்கு வருகிறோம் என்று கேட்டால் மனிதன் அதர்மம் பண்ணி முன்னுக்கு வருகிறான் என்று நீங்கள் சொல்வது தாற்காலிகமானதுதான். அதர்மம் பண்ணி முன்னுக்கு வரக்கூடியது தாற்காலிகம். தாற்காலிகம் என்றால் டெம்பரரி. கடைசியில் அவனுக்கு ஸர்வநாசம் என்பது தப்பாது. அதனால் நாம் யாரும் அதர்மம் பண்ணி முன்னுக்க வர நினைத்தல் கூடாது.

தர்ம மார்க்கத்தில் நியாய மார்க்கத்தில் நாம் முன்னுக்கு வந்தால் நமக்கு என்றைக்கும் கெடுதல் வராது. ஆனால் அதர்ம மார்க்கத்தில் முன்னுக்கு வந்தால் மட்டும் அது நிற்காது. அந்த ஐஸ்வர்யமோ, அந்த அதிகாரமோ எதுவும் நிற்காது. இந்த விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் உண்மையான நம்முடைய நண்பன் நாம் செய்கிற தர்மம் தான். அதே மாதிரி நமக்கு சத்ரு என்பது யார் என்று கேட்டால் நாம் செய்கிற அதர்மம்தான்.

நாம் இப்போது எவ்வளவோ கஷ்டங்கள் அனுபவிக்கிறோம் என்று சொன்னால் நாம் முன்பு செய்த அதர்மத்தினுடைய பலன். அதர்மத்தை முன்பு செய்து இப்போது துக்கத்தை நாம் அனுபவிக்கிறோம். இதற்கு நாம் யாரையும் நித்தித்துப் ப்ரயோஜனம் இல்லை. நாம் பண்ணின கர்மாவிற்கு நாம் யாரை நிந்திக்க வேண்டும்? இனிமேலாவது இனி அதர்மத்தை செய்யக் கூடாது என்று ஒரு தீர்மானத்திற்கு வரவேண்டும். செய்தது போதும். அனுபவித்தது போதும். இனிமேல் நாம் அதர்மத்தை செய்யக்கூடாது. இனிமேல் நாம் ஒழுங்காக இருக்க வேண்டும். தார்மீகனாக இருக்கவேண்டும் என்கிற பாவம் வநால் அவன்தான் சரியான மனிதன். ஆகையினால் நாம் நம்முடைய ஜீவனத்தில் உண்மையான நம்முடைய நண்பன் நம்முடைய பந்து என்று நினைத்துக் கொள்ள வேண்டியது தர்மத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. உண்மையான பந்து என்பது தர்மம்தான். இந்த சத்யத்தைப் புரிந்து கொண்டு நாம் தார்மீகர்களாக இருந்தால் அப்போதுதான் நம்முடைய இந்த வாழ்க்கை சார்த்தகமாகும். இல்லாவிடில் நாமும் இருக்கிறோம், ஏதோ வருகிறது, போகிறது எப்படியோ வாழ்க்கை நடந்து கொண்டு இருக்கிறது என்றால் அதெல்லாம் ஒரு வாழ்க்கையா? ப்ராணிகளும் வாழ்கின்றன. அதுவும் எங்கேயோ ஆகாரத்தைத் தேடி சம்பாதிக்கிறது. ராத்திரி எங்கேயோ போய் தூங்குகிறது. யாராவது அடிக்க வந்தால் ஓடிவிடுகிறது. யாராவது ஒரு பழத்தைக் கையில் வைத்துக் கொண்டு வந்தால் நெருங்கி வருகிறது. ப்ராணிகள் மாதிரி நாமும் இருந்தால் அந்த ப்ராணிகளுக்கும் நமக்கும் என்ன வித்யாசம்? தர்மம் என்று சொன்னால் முக்கியமாக பிறருக்கு உதவி செய்வது. அதர்மம் என்று சொன்னால் பிறருக்கு தொந்தரவு செய்வது. இந்த இரண்டு விஷயங்களை நாம் சரியாக புரிந்து கொண்டால் போதும்.
நான் என் வாழ்க்கையிலே யாருக்கும் தொந்தரவு பண்ணமாட்டேன். முடிந்த அளவுக்கு இன்னொருத்தருக்கு உபகாரம் செய்வேன். முடிந்த அளவுக்கு சாஸ்த்ரத்தில் தர்மம் பண்ணு, தர்மம் பண்ணு என்று சொன்னால் எல்லாரும் கோவில் கட்டு, சத்திரம் கட்டு, பாடசாலை கட்டு என்று சொல்ல வில்லை. அது எல்லோராலும் முடியாது. கோவில் கட்டுவதற்கும் சத்திரம் வைப்பதற்கும், பாடசாலை வைப்பதற்கும் எல்லோராலும் முடியாது; முடியுமா? கோவில் கட்ட முடியவில்லை என்றால் தர்மம் செய்வதற்கு வழியில்லை என்று அர்த்தமா? அவகாசம் இல்லை என்று அர்த்தமா? அதெல்லாம் கிடையாது. உனக்கு கோவில் கட்டக் கூடிய சக்தி இருந்தால் கோவில் கட்டு. உனக்கு அந்த சக்தி இல்லையென்றால் கோவில் கட்டித்தான் தார்மீகன் ஆக வேண்டும் என்பது இல்லை. அந்தக் கட்டியிருக்கிற கோவிலுக்கு தினமும் போய் பகவானை ஒரு ப்ரார்த்தனை பண்ணி நமஸ்காரம் பண்ணி விட்டு வாயேன். அதுவே ஒரு தர்மம் இல்லையா? யாரோ ஒரு மஹான் கோவில் கட்டி வைத்து இருக்கிறார் நீ தினமும் அந்தக் கோவிலுக்குப் போய் ஸ்வாமி சந்நிதியில் சிவனே என்று உட்கார்ந்து கொண்டால் அது ஒரு பெரிய தர்மம் உனக்கு. ஆனால் அது கூட செய்ய முடிவதில்லை நமக்கு. நம்முடைய நேரத்தை ஏதோ வேண்டாத விஷயங்களில்தான் கழிக்கிறோமே தவிர அந்தப் பகவத் ஸ்மரணத்திலேயோ, பகவத் கைங்கர்யத்திலேயோ கழிக்க நாம் தயாரில்லை.

பகவானுடைய நாமத்தை வாயினால் சொல்வது ஒரு பெரிய தர்மம். பகவான் நாமத்துக்கு எவ்வளவு மகிமை உண்டு என்பதை சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறது. பாகவதத்தில் அஜாமிள உபாக்யானம் கேட்டு இருப்பீர்கள் அஜாமிளன் என்பவன் ஒரு ராக்ஷஸன் அவன் செய்யாத தப்பிதமே கிடையாது. சமஸ்தமான அபராதமும் செய்தான் அவன். ஆனால் அவன் தன் பிள்ளைக்கு நாராயணன் என்று பெயர் வைத்தான். அது எதற்காக வைத்தானோ தெரியாது. நாராயணன் என்று வைத்தான் கடைசியில் அவன் ப்ராணன் போகிற சமயத்தில் அவன் பிள்ளையைப் பெயர் சொல்லி அதாவது நாராயணா என்றான். ப்ராணன் போய்விட்டது பகவான் பெயரைச் சொல்ல நினைத்து அவன் சொல்லவில்லை. பிள்ளை பெயரைச் சொன்னான். அவனுக்குப் பகவானுடைய ஸாரூப்யம் கிடைத்து விட்டது என்று பாகவதம் சொல்கிறது. பாகவதமோ, பாரதமோ, இராமாயணமோ இதெல்லாம் நமக்கு ஒரு ஸன்மார்க்கத்தைச் சொல்லக் கூடிய க்ரந்தங்களே தவிர, வெறும் கதை சொல்ல வந்த க்ரந்தங்கள் இல்லை. கதைப் புஸ்தகங்கள் என்று நாம் நினைத்துக் கொள்ளக் கூடாது. அவை நமக்கு ஒரு நல்வழியைக் காண்பிக்க வந்த புஸ்தகங்களே. அந்த பாகவத சரித்திரத்தில் அஜாமிளன் தனக்கு அவன் அறியாமலே பிள்ளையைக் கூப்பிடுவதற்காக நாராயணா என்ற நான்கு அக்ஷரங்கள் வாயில் வந்து விட்டது. ப்ராணன் போய்விட்டது. அவனுக்கு பகவத் ஸாந்நித்யம் கிடைத்து விட்டது என்கிறபோது பகவானுடைய நாமத்தை, மகிமையைத் தெரிந்து கொண்டு நாமத்தை சொன்னால் எவ்வளவு புண்ணியம் கிடைக்கும். அவன் பகவான் நாமத்தை தெரியாமல் சொல்லி அவ்வளவு நல்லது கிடைத்தபோது பகவான் நாமத்தினுடைய மகிமையைத் தெரிந்து கொண்டு சொன்னால் எவ்வளவு நல்லது நமக்கு. அதனால் பகவான் நாமத்தை சொல்லக் கூடியது என்பது அவ்வளவு பெரிய தர்மம். பகவானுடைய பூஜை செய்வது என்பது எவ்வளவு பெரிய தர்மம் பகவத் கதாகாலக்ஷேபத்துக்குப் போய் உட்காருவது ஒரு பெரிய தர்மம்.

பக்தி அநேகவிதமாக சொல்லப்பட்டிருக்கிறது. பகவத் கதை கேட்கக் கூடியது ஒரு பக்தி. பகவான் நாமத்தை உச்சாரணம் செய்வது ஒரு பக்தி. பகவானுக்கு நமஸ்காரம் செய்வது ஒரு பக்தி. பகவானை நினைத்து மனதில் த்யானம் பண்ணிக் கொண்டே இருப்பது ஒருபக்தி. ஆகையினால் இந்த பகவந் நாமஸ்மரணமோ பகவத் கதா ஸ்மரணமோ, பகவத் ஆராதனையோ பகவத் ஸ்மரணமோ இவையெல்லாம் தர்மங்கள்தான். இந்தத் தர்மங்களை நீ ஆசரணம் பண்ணினேயானால் உனக்கு அடுத்த ஜன்மத்திலேயும் இன்னும் உத்ர்க்ருஷ்டமான ஜன்மம் கிடைக்கும். இதைவிட்டுவிட்டு நம்முடைய ஜீவனத்தில் நாம் பிராணிகள் மாதிரி வாழ்க்கை நடத்தினோமானல் அதனால் நமக்கு எந்த விதமான ஒரு ஸ்ரேயஸ் என்பது கிடைக்காது. நம்முடைய உண்மையான நண்பன் தர்மபுத்திரன் என்பதை புரிந்து கொண்டு நம்முடைய வாழ்க்கையில் தர்மத்தை ஆசரணம் பண்ணி ஸ்ரேயஸை அடைய வேண்டும் என்பதுதான் சாஸ்த்ரத்தினுடைய உபதேசம். பகவத்பாத சங்கரரும் நமக்கு அதுதான் உபதேசம் பண்ணினார்.

கேயம் கீதாநாமஸஹஸ்ரம்
த்யேயம் ஸ்ரீபதிரூபமஜஸ்ரம் |
நேயம் ஸஜ்ஜனஸங்கேசித்தம்
தேயம் தினஜனாயச வித்தம் ||

பகவானுடைய நாமத்தை எப்போதும் சொல்லிக் கொண்டுவா. பகவானுடைய ரூபத்தை எப்போதும் மனத்தில் த்யானம் பண்ணிக்கொண்டுவா. உன்னுடைய வாழ்க்கை பவித்ரமாகும். இந்த விஷயத்தை நன்றாக புரிந்து கொண்டு ஜீவனத்தில் யாருக்கும் தொந்தரவு பண்ணமாட்டேன் கூடுமானவரை மற்றவருக்கு உபகாரம் செய்வேன் என்கிற தீர்மானத்தோடு இருந்து கிடைத்த சமயத்தை எல்லாம் பகவானுடைய ஸ்மரணத்திலேயே விநியோகம் செய்து வாழ்க்கையை நடத்தினால் ரொம்ப புண்யசாலியான மனிதன் ஆகிவிடுவான். அவன் க்ஷேமத்தை அடைவான். இந்த ஜன்மத்தில் மட்டும் இல்லை அடுத்த ஜன்மத்திலேயும் அவன் க்ஷேமத்தை அடைவான்.


Tuesday 23 December 2014

NIRVANA SHATAKAM :

==== Adi Shankaracharya's Experience of Self-realization ====

Sri Adi Shankaracharya recorded his own intimate experience of the Bliss of Self-realization in mellifluous six verses entitled Nirvana Shatakam. While the verses represent Shankara’s direct and close experience in his deep meditative state, they are of much spiritual profit for all seekers.
Nirvana Shatakam :

मनोबुद्ध्यहङ्कार चित्तानि नाहं
न च श्रोत्रजिह्वे न च घ्राणनेत्रे ।
न च व्योम भूमिर्न तेजो न वायुः
चिदानन्दरूपः शिवोऽहम् शिवोऽहम् ॥१॥

" Neither am I the Mind nor Intellect or Ego, Neither am I the organs of Hearing (Ears), nor that of Tasting (Tongue), Smelling (Nose) or Seeing (Eyes), Neither am I the Sky, nor the Earth, Neither the Fire nor the Air, I am the Ever Pure Blissful Consciousness ; I am Shiva, I am Shiva, The Ever Pure Blissful Consciousness."

Mind (manah), intellect (buddhih), ego (ahamkara),and memory (chittani) together are referred to by the technical term 'antah karana' or internal instrument. Ear, tongue, nose, eyes, and skin together are the five jnana indriyas. Space, earth, fire, air, and water are the five elements (pancha bhutas).

न च प्राणसंज्ञो न वै पञ्चवायुः
न वा सप्तधातुः न वा पञ्चकोशः ।
न वाक्पाणिपादं न चोपस्थपायु
चिदानन्दरूपः शिवोऽहम् शिवोऽहम् ॥२॥

"Neither am I the Prana, nor the Five Vital Airs, Neither am I the Seven Ingredients (Sapta Dhatuh) of the Body, nor the Five Koshas of the Body,Neither am I the organ of Speech, nor the organs for Holding ( Hand ), Movement ( Feet ) or Excretion, I am the Ever Pure Blissful Consciousness; I am Shiva, I am Shiva, The Ever Pure Blissful Consciousness."

Five vital airs are:
Prana (controls respiratory system),
Apana (controls excretory system),
Vyana (controls circulatory system);
Samana (controls digestive system), and
Udana (controls ejection of the prana from the physical body).

Seven basic elements (sapta dhatuh) consist of: skin, flesh, fat, bone, blood, bone marrow, and semen. Five sheaths (Pancha kosha) are believed to veil our understanding of the Atman.

न मे द्वेषरागौ न मे लोभमोहौ
मदो नैव मे नैव मात्सर्यभावः ।
न धर्मो न चार्थो न कामो न मोक्षः
चिदानन्दरूपः शिवोऽहम् शिवोऽहम् ॥३॥

" I have neither aversion nor attachment, neither greed nor delusion; I have neither arrogance nor jealousy; I have no duty (to perform) nor any wealth (to acquire); neither desire nor liberation; I am the Ever Pure Blissful Consciousness; I am Shiva, I am Shiva, The Ever Pure Blissful Consciousness."

Greed, delusion, pride and jealousy together with lust and anger constitute shad ripu (also called ari shad varga), the six-fold internal enemies of a human being. Dharma (righteousness), artha (wealth), kama (desire), and moksha (liberation) are together known as purusharthas, the four objectives of a human being.

न पुण्यं न पापं न सौख्यं न दुःखं
न मन्त्रो न तीर्थो न वेदो न यज्ञ ।
अहं भोजनं नैव भोज्यं न भोक्ता
चिदानन्दरूपः शिवोऽहम् शिवोऽहम् ॥४॥

" Neither virtue (punyam) nor sin (papam) nor happiness nor sorrow; nor a holy chant nor a holy place of pilgrimage nor the Vedas nor sacrifice; I am neither enjoyment, nor enjoyable object, nor the enjoyer; I am the Ever Pure Blissful Consciousness; I am Shiva, I am Shiva, The Ever Pure Blissful Consciousness."

न मृत्युर्न शङ्का न मे जातिभेदः
पिता नैव मे नैव माता न जन्मः ।
न बन्धुर्न मित्रं गुरुर्नैव शिष्यं
चिदानन्दरूपः शिवोऽहम् शिवोऽहम् ॥५॥

" Neither am I bound by Death and its Fear, nor by the rules of Caste and its Distinctions, Neither do I have Father and Mother, nor do I have Birth, Neither do I have Relations nor Friends, neither Spiritual Teacher nor Disciple, I am the Ever Pure Blissful Consciousness; I am Shiva, I am Shiva, The Ever Pure Blissful Consciousness. "

अहं निर्विकल्पो निराकाररूपो
विभुत्वाच्च सर्वत्र सर्वेन्द्रियाणाम् ।
न चासङ्गतं नैव मुक्तिर्न मेयः
चिदानन्दरूपः शिवोऽहम् शिवोऽहम् ॥६॥

" I am Without any Variation, and I am Formless, I am Present Everywhere as the underlying Substratum of everything, and behind all Sense Organs, Neither do I get Attached to anything, nor get Freed from anything,I am the Ever Pure Blissful Consciousness; I am Shiva, I am Shiva, The Ever Pure Blissful Consciousness. "

Saturday 6 December 2014

தேவி உபாஸனை வழிபாடு

தேவி உபாஸனை வழிபாடு


அம்பாளை ஆராதிப்பதற்கு ரொம்ப உத்க்ருஷ்டமான சாஸ்த்ரத்திலே சொல்லி இருக்கிற சம்ப்ரதாயத்தை அனுசரித்து எல்லோரும் அனுஷ்டானம் செய்து கொண்டு வருகிறோம். அம்பாளை நாம் சாதாரணமாக ஸஹஸ்ர நாமங்கள் சொல்லி ஆராதிப்பது உண்டு. ஸஹஸ்ர நாமங்கள் என்று சொன்னால் நாம் சொல்லி வருவது சாதாரணமாக லலிதா ஸஹஸ்ர நாமம்தான். அந்த லலிதா ஸஹஸ்ர நாமத்தைச் சொல்லி நாம் அம்பாளை ஆராதிப்போம். நிஜமாக அந்த ஸஹஸ்ர நாமத்தினுடைய அர்த்தத்தை நாம் புரிந்து கொண்டால் அது ஒரு ரொம்பப் பெரிய விஷயம். அது புரிந்து கொண்டு அதன்படி நாம் நடந்துகொண்டால் நாம் அம்பாளுடைய பரிபூரண க்ருபைக்குப் பாத்ரமாவோம். ஸஹஸ்ர நாமங்களில் அம்பாளுடைய மகிமை எவ்வளவு? என்பதைச் சொல்லியிருக்கிறது. அம்பாளுடைய பூஜை பண்ணக் கூடியவன் எப்பேர்ப்பட்டவனாக இருக்க வேண்டும் என்பதையும் சொல்லியிருக்கிறது.
வேதாந்தத்து சித்தாந்தம் என்ன என்பதையும் இங்கு சொல்லியிருக்கிறது. எல்லாமே சொல்லி இருக்கிறது. அம்பாளுடைய மகிமை என்ன என்பதன் விஷயம் வரும்போது “பவதாவ ஸூதா வ்ருஷ்டி: பாபாரண்ய தவானனா
தௌர்பாக்ய தூல வாதூனா
ஜராக் வாந்த ரவிப்ரபா
பாக்யாப்தி சந்த்ரிகா
பந்த சித்த கேகி கனாகனா
போக பர்வத தம்தூளி;
ம்ருத்யு தாரு குடாரிகா

என்று சொல்லியிருக்கிறது. அவளை (அம்பாளை) பூஜித்தால் என்ன வெல்லாம் கிடைக்கும்? என்றால் கிடைக்காதது ஒண்ணுமில்லை. “பவதாவ ஸுதா வ்ருஷ்டி; ‘பவம்’ என்று சொன்னால் இந்த ஒரு சம்சார சக்கரம். சம்சார சக்ரம் என்று சொன்னால் ஜனன மரணாத்மக ஒரு ப்ரவாகம். பிறக்கிறோம். கொஞ்சம் வருஷம் இந்தப் பூமண்டலத்தில் இருக்கிறோம். திரும்ப இந்த சரீரத்தை விட்டு விடுகிறோம். இன்னொரு சரீரம் வருகிறது. அந்த சரீரத்துலே கொஞ்சம் சுகமோ, துக்கமோ அனுபவிக்கிறோம். போய் விடுகிறோம். திரும்ப இன்னொரு சரீரம். இந்த ஒரு சக்ரம், இது தான் சம்சார சக்ரம் என்பது. எத்தனை காலம் இந்த சக்ரத்தில் சுற்றிக் கொண்டு இருப்பது? இதில் என்ன சௌக்யம் இருக்கிறது? பார்த்தால் இதில் ஒரு சௌக்யமும் இல்லை. இந்த சக்ரத்திலிருந்து விடுதலை கிடைக்க வேண்டும் என்று சொன்னால் அம்பாளுடைய தயவு வேண்டும். அதிலிருந்து விடுதலை கொடுக்கக் கூடியவள் அம்பாள். “பவதாவ ஸூதா வ்ருஷ்டி;” அதாவது அந்த நாமத்துக்கு நேரடியாக அர்த்தம் சொல்ல வேண்டும் என்று சொன்னால் காட்டிலே தீப்பிடித்து விட்டால் அந்தத் தீ அணைய வேண்டும் என்று சொன்னால் நாம் ஒரு குடம் ஜலம் கொண்டு போனால் அது ஒண்ணும் அணையாது. ஆனால் ஆகாசத்துலேருந்து பெரிய வ்ருஷ்டி: (மழை)வந்தால்தான் அந்தக் காட்டுத் தீ அணையும். இந்த சம்சார சக்ரம் என்கிற இந்த காட்டுத் தீக்கு அவளுடைய அனுக்ரஹம் என்பது ஒரு பெரிய மழை. அப்பேர்ப்பட்டவள் என்று சொன்னால் இந்த சம்சார பயத்தை போக்கக் கூடியவள்.

இரண்டாவதாக “பாபாரண்ய தாவன லா” என்று சொல்லி இருக்கிறது. பாபங்கள், பாபங்கள் செய்து கொண்டே இருக்கிறோம். பாபங்கள் செய்யாதவன் யார்? என்று கேட்டால் யாருமே இல்லை. எல்லாரும் ஏதோ ஒரு விதமாக பாபங்கள் செய்து கொண்டே இருக்கிறோம். சிலர் சொல்வார்கள். நான் ஒரு பாபமும் செய்யவில்லை என்று சொல்வார்கள். அது சும்மா நீங்கள் சொல்வதோடு சரி. செய்கையிலே உங்களுக்கு அப்படி இருக்க முடியாது. அது தான் பகவத் பாதாள் ஓர் இடத்திலே, மனிதன் பிறந்த அன்றிலிருந்து சாகிற வரையிலும் ஒரு விதமான பாபமும் செய்யவில்லை என்று நெஞ்சு தட்டிக் கொண்டு சொல்ல முடியுமா? சொல்ல முடியாது.

“வாசா’ ஜன்ம ப்ராயண யோஹோ
அந்த ராளே காம்ய ப்ரதி ஸித்த போஹோ
ஸர்வாத் மனா வர்ஜனம்
கேனி சித் ப்ரதிக்ஞாதம் அசக்யம்”

பகவத் பாதருடைய வாக்யம் இது. “ஸ்வநிபுணானாம் அபி ஸுஷ்மா பராத தர்சனா”

அதாவது சம்ஸ்க்ருதத்துலே அவருடைய வார்த்தைக்கு அர்த்தம். எவனுமே பிறவியிலிருந்து சாவதற்குள்ளே அந்த சமயத்துலே எந்த விதமான ஒரு காம்ய கர்மத்தையோ, நிஷித்த கர்மத்தையோ அதாவது பாபத்தையோ செய்யவில்லை என்று “ப்ரதிக்ஞா’ செய்ய முடியாது. எவ்வளவு பெரிய கெட்டிக்காரர் என்று நினைத்துக் கொள்ளும் நபர்களுக்கும், தனக்குத் தெரியாமலே சில தப்பிதங்கள் நடந்து போய் விடும். அதனாலே நம்மால் பாபங்கள் நடக்கவில்லை என்று நாம் சொல்லவே முடியாது. பின்பு என்ன சொல்லலாம்? நான் தெரிந்து ஒரு தப்பிதமும் செய்யவில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். தெரியாமல் எவ்வளவு தப்பிதங்கள் நடக்கிறதோ தெரியாது. தெரியாமல் தப்பிதம் நடந்தால் அதை கணக்கில் எடுத்துக் கொள்ளலாமோ என்று யாரும் சொல்லக் கூடாது. ஏனென்றால்

“அனிச்ச யாபி ஸம்ஸ்ப்ருஷ்டோ
தஹத்யே விஹி பாவத:

நெருப்பு இருக்கிறது. ஒரு சின்னக் குழந்தை நெருப்பைத் தொட்டால் சுடும் என்பது தெரியாது. நெருப்பைத் தொட்டு விட்டது. அப்போது அந்த நெருப்பு அந்தக் குழந்தையின் கையில் சுடாமல் விடுமா? சுடும். அப்போது நாம் போய் அதுகிட்ட “என்ன குழந்தை தெரியாமல் தொட்டு விட்டால் அதையே நீ சுட்டு விட்டாயே!” என்று நாம் யாராவது அந்த நெருப்பை சத்தம் போடலாமா?

அதே போல் நாம் தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் பாபத்துக்குப் பலன் இருக்கவே இருக்கிறது. அதேபோல் புண்யத்துக்கும் பலன் இருக்கிறது.

ஒருவனுக்குத் தெரியவில்லை. அது புண்யம் என்று சொல்லி பண்ணி விட்டான். ஆனாலும் அந்த புண்யத்துடைய பலன் கிடைக்கத்தான் செய்யும்.
அதாவது ஓர் இடத்துலே இந்த மாதிரி ஒரு  ஸத்காலட்சேபம் நடந்து கொண்டு இருந்தது. ஒருவன் வந்தான். இங்கு காலட்சேபம் நடக்கிறது என்பதே தெரியாது. அந்த இடத்துலே உட்கார்ந்தான். ஸ்வாமிதர்சனம் பண்ணினான். போய் விட்டான். அவனுக்கு அந்த பலன் இருக்கவே இருக்கும். பஜனை நடந்து கொண்டு இருந்தது. அவனும் அவர்களோடு சேர்ந்து அந்த பஜனை நாமத்தை உச்சரித்தான். அதனுடைய பெருமை என்ன என்பது தெரியாது. எல்லாரும் பகவான் நாமா சொல்கிறார்கள். அவனும் சொல்லிவிட்டான். அந்த பலன் அவனுக்கு இருக்கவே இருக்கும். அதுதான் பூர்வார்த்தத்துலே சொன்னார்,

 “தஹரர் ஹரதி பாபானே
திஷ்ட தித்மதர விஸ்ம்ருத:

என்று சொன்னார். அதனால் நாம் பாபங்கள் தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் பாபம் பாபம்தான். அதற்கு பலனை அனுபவிக்க வேண்டியது உண்டு. அப்போது எத்தனையோ பாபங்கள் நடக்கிறதே இந்த எல்லாப் பாபங்களுக்கும் நாம் ப்ராயச்சித்தத்துக்கு  எங்கே போவது? அந்த ப்ராயச்சித்தங்கள் நமக்குத் தெரியவும் தெரியாது. அதனால் இந்த இத்தனை பாபங்களுக்கும் ப்ராயச்சித்தம் தேவியினுடைய நாமத்தை உச்சாரணம் செய்தால், தேவியினுடைய மகிமையைச் சொல்லும் போது ஏகஸ்ய நாம்ணே

ஞா சக்தி:
பாப கானான் நிவர்த்தயே
தன் நிவர்த்ய மதே கர்த்தம்
மானன் லோகாய் ஸதுர்தசே”

இந்தப் பதினான்கு லோகங்களிலே இருக்கக் கூடிய ஜனங்கள் அத்தனை பேரும் செய்த பாபங்கள் எல்லாவற்றையும் தேவியுடைய ஒரு நாமமே போக்கும் என்று அதற்கு அர்த்தம். அப்பேர்ப்பட்ட மகிமை பகவன் நாமாவுக்கு இருக்கிறது. அதெல்லாம் வெறும் கதை. நாம் எப்படி நம்ப முடியும் என்று சொன்னால் நாம் எப்படி நம்ப முடியும் என்று சொல்லிக் கொண்டு இருப்பவன் அப்படியே உட்கார்ந்து கொண்டு இருக்க வேண்டியதுதான். வந்து இவன் விஞ்ஞானம் ரொம்ப வராத சந்தர்ப்பத்துலே இந்த காலத்திலே ரேடியோ என்று ஒரு கருவி இருக்கிறதாமே! அதிலே பேச்சு வந்து கொண்டிருப்பதைப் பார்த்துட்டு அந்த பழைய காலத்து ஆட்கள் சொல்லிக் கொண்டு இருந்தார்களாம், ஏய்! அதிலே எவனோ உட்கார்ந்து கொண்டு பேசறாண்டா! இல்லாவிட்டால் எப்படி சப்தம் கேட்கும்? இல்லை ஓய்! அது எங்கேயோ டெல்லியிலோ எங்கோ என்றால் டேய்! டெல்லியிலே பேசுவது இதற்குள் எப்படி கேட்கமுடியும்? அதற்குள்ளே எவனோ உட்கார்ந்து பேசுகிறான். நீ நம்பா விட்டால் நான் என்ன பண்ணுவது ஐயா! அது விஷயம் அப்படித்தான். என்று இவன் சொல்கிறான். அதே போல் சாஸ்த்ரம் சொல்கிறது.அதில் நமக்கு சந்தேக ப்ரவிருத்தி இருந்தால் நமக்குத்தான் அதனுடைய பலத்தை அடைய முடியாதே தவிர சாஸ்த்ரத்தினுடைய தப்பு ஒண்ணும் இல்லை.

அதனால் பகவன் நாமத்துக்கு இவ்வளவு மகிமை இருக்கு என்று சாஸ்த்ரம் சொல்கிறது. இருக்கிறது வாஸ்தவம்தான். நாம் தினமும் பூஜை எல்லாம் செய்து முடித்தபிறகு கடைசிலே ஒரு ஸ்லோகம் சொல்கிறோம். ஏதோ அவர்கள் சொல்லிக் கொடுத்து இருக்கிறார்கள். நாம் சொல்கிறோம் என்பதைத் தவிர அர்த்தத்தை யாரும் கவனிப்பது கிடையாது.

“யஸ்ய ஸ்ம்ருத்யாச நாமோத்யா
தபப் பூஜா க்ரியா திஹு
மோனம் சம்பூர்ணதாம்
யாதி சத்ய வந்தே தவஸ்யதம்

அந்த பரமாத்மாவின் ஸ்மரண மந்திரத்திலேயும் எந்த பரமாத்மாவின் நாமத்தை உச்சாரணம் செய்த மாத்திரத்திலேயே நாம் செய்யக் கூடிய கர்மாவில் ஏதோவகையில் ஒரு சிறிய கம்மி இருந்தாலும் அதாவது மந்த்ரம் சரியாக சொல்லவில்லை, அல்லது சரியாக அந்த தந்த்ரம் செய்யவில்லை. அல்லது பதார்த்தங்கள் சரியாகக் கொண்டுவரவில்லை. அல்லது தப்புத் தப்பாக நடந்து விட்டது, என்று எந்த ஒரு குறை இருந்தாலும், அந்தக் குறை அவ்வளவும் எந்த பரமாத்மாவின், நாமோச்சாரணத்தினாலேயே எந்த பரமாத்மாவின் ஸ்மரணத்தினாலேயே நீங்குமோ அப்பேர்ப்பட்ட பரமாத்மாவை நமஸ்கரிக்கிறேன் என்று அந்த ஸ்லோகத்தில் இருக்கிறது. “ஸ்ம்ருதி:” என்றால் ஸ்ரேணம் = நினைவு, பரமாத்மாவின் நாமத்தை உச்சரிப்பு = நாமோத்யா, நாமோத்தி: என்பதற்கு, உச்சரிப்பினாலேயும், தபப் பூஜா க்ரியா திஷு = நாம் செய்யக் கூடிய பூஜையிலே நாம் செய்யக் கூடிய இன்னும் எல்லா ஸத்கர்மாக்களிலேயும் ஊனம், அதில் என்னவெல்லாம் குறைவு வருகிறதோ அது எல்லாம் சம்பூர்ணமாகிறது. அது எப்போது? சத்ய = உடனே. தவச்சிதம் வந்தே = அந்தப் பரமாத்மாவை நமஸ்கரிக்கிறேன்.

பகவானுடைய மகிமையைச் சொல்வதற்கு இப்பேர்ப்பட்ட ஸ்லோகங்களை முன்னோர்கள் நமக்கு நிறைய சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அந்த அர்த்தத்தை நாம் அனுசந்தானம் செய்வதில்லை. அப்பேர்ப்பட்ட மகிமை பகவானுடைய நாமோச்சாரணத்துக்கு இருக்கிறது என்பதைச் சொல்கிறபோது இனி நாம் அதில் சந்தேகப்பட்டால் என்ன ப்ரயோஜனம்? ‘ஸம்சயாத்மா வினஸ்ய தி’ என்று பகவான் சொன்னார். சந்தேகம், சந்தேகம் என்று இருப்பவனுக்கு நாசம் தான். அவனுக்கு எதற்கெடுத்தாலும் சந்தேகம் தானே!

“நாயம் லோபோஸ்தி
நபரோ ஸம்சயா த் மன”

அந்த ஸம்சயாத்மா ஆனவனுக்கு இக பரலோகத்துலேயும் சுகம் கிடையாது. பரலோகத்துலேயும் சுகம் கிடையாது. இனி எதற்கெடுத்தாலும் அவனுக்கு சந்தேகம் ஆனதினாலே நீ சாப்பிடு! சாப்பிட்டால் வயிறு நிறையும் என்றால் நிறையுமோ, நிறையாதோ நான் எப்படி சாப்பிடுவது? இதில் என்ன போட்டிருக்குகிறார்களோ என்னவோ? நான் எப்படி சாப்பிடுவது? பால் கொண்டு கொடுத்தால் பாலில் என்ன சேர்த்திருக்கிறார்களோ? நான் எப்படி சாப்பிடுவது? நீ ஸ்கூலுக்கு போ! ஸ்கூலில் அங்கே பாடம் சொல்லிக் கொடுப்பார்களோ, மாட்டார்களோ, நான் ஏன் போகணும்? இந்த மாதிரி ஆரம்பித்துவிட்டால் அவனுக்கு இங்கேயும் சுகமில்லை. ஜன்மாந்தரத்திலேயும் சுகமில்லை என்பது தீர்மானம். அதனாலே நாம் இந்த விஷயத்துலே பகவானுடைய நாமத்துக்கு அபாரமான மகிமை உண்டு என்கிற விஷயத்துலே சந்தேகப்படக் கூடாது. அதற்காகத்தான் அங்கே தேவியைச் சொல்கிற போது,”பாபாரண்ய தவானலா” எப்படி காட்டுக்கு ஒரு தீ பிடித்து விட்டால் அந்தக் காட்டை முழுவதும் பஸ்பமாக்கி விடுமோ, அதேபோல் நம்முடைய பாபங்கள் எல்லாவற்றையும் பஸ்மமாக்கக் கூடிய பவித்ரமான நாமம் தேவியினுடையது. அதேபோல் “தௌர்பாக்ய தூல வாதூலா” நம்முடைய தாரித்ரியத்தை மரணம் பண்ணக்கூடிய சக்தி அவருக்கு இருக்கிறது. “ஜராத்ராந்த ரவிப்ரபா” வயசு ஆகி ரொம்ப முடியாத நிலைமை இருந்து அந்த அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்கிற சமயத்துலே அந்த தேவியுடைய ஸ்மரணம் அந்த தேவியுடைய நாமோச்சாரணம் மனத்திற்கு வந்தால் நாம் சௌக்யமாக இருக்க முடியும். “பாக்யாப்த சந்த்ரிகா” = சகல சௌபாக்யங்களும் அவருடைய தயவினாலே ப்ராப்த்திக்கும். ‘பக்தி சித்த கேகி கனா கனா” = பக்தர்களுடைய மனத்திற்கு அந்த தேவியினுடைய ஸ்வரூபம் வந்தால் அத்யந்த ஆனந்தமாக இருக்கும்.

“ரோக பர்வததம் போளிர் மீருத்யு” தாரு குடாரிகா = சகல ரோகங்களையும் தேவி நிவர்த்தி ஆக்குவாள். எந்த விதமான அப ம்ருத்யுக்களும் தேவி உபாசகர்களுக்கு வராது.
இப்பேர்ப்பட்ட மகிமை பரதேவதைக்கு இருப்பதனாலே நாம் அந்தப் பரதேவதையை ஆராதிக்கிறோம். அதேபோல் அவளைப் பூஜிக்கிறவருடைய விஷயத்தைச் சொல்கிறபோது ஓர் இடத்திலே அதே சஹஸ்ர நாமத்திலே சொல்கிறது, “அந்தர்முக சமாராத்யா பஹிர் முக ஸுதுர் லபா”

அந்தர் முகன், பஹிர் முகன் என்று சொன்னால் எவனுடைய மனத்திலே அந்தப் பரதேவதையைத் தவிர வேறு எதையும் நினைக்கக் கூடிய ஒரு சந்தர்ப்பம் இல்லையோ அவன் உத்தமன் = அந்தர் முகன். எவனுக்கு பூஜைக்கு உட்கார்ந்தாலும் மனது அங்கே இல்லையோ அவன் பஹிர்முகன். நமக்கு உட்கார்ந்தோம் என்ற பெயரே தவிர அங்கே டெலிபோன் வந்திருக்கிறதே அதை அட்டென்ட் பண்ணனும், இங்கே இன்று ரேடியோவில் (ஸீமீஷ்s) செய்தி என்ன வருகிறது? அதைக் கேட்கணும். ஏனென்றால் சரியாக பூஜைக்கு உட்கார்ந்த போதுதான் அது வருமாம். அதனால் அதையும் விட முடியாது. அதனால் அதைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு கேட்டுக் கொண்டு இருக்க வேண்டும். ஒருபக்கம் டெலிபோன், மறுபக்கம் ரேடியோ நடுவிலே பூஜை. அப்பேர்ப்பட்ட பஹிர்முகர்களுக்கு தேவி அத்யந்த துர்லபமானவள். நமக்கு பூஜை என்று சொன்னால் மனசு அங்கே லயித்திருக்கிறதா இல்லையா என்பது நமக்கு அத்யந்த அவச்யகமானது.

“அந்தர்முக சமாராத்யா”

அதனால்தான் அப்பேர்ப்பட்ட அந்தர்முகமானவன், அதாவது பகவத் விஷயத்துலே மனசு லயித்திருப்பவன் அவன் பூஜை செய்ய வேண்டும்.

அதேபோல் இன்னோர் இடத்திலே சொல்லியிருக்கிறது. “பௌத்ரியாதி வாசனா லப்யா” என்று சொல்லியிருக்கிறது. சில வாசனைகள் வாசனை என்றால் புஷ்பத்தினுடைய வாசனை என்று அர்த்தம் இல்லை. சில ஸம்ஸ்காரங்கள். என்ன என்றால் மத்ரி, கருணா, மோதித, உபேக்ஷா, சுக, துக்க, புண்யா புண்ய விஈயானாம் பாவானாத: சித்தப் ப்ரஸாதனம்” என்று வேத சாஸ்த்ரத்திலே சொல்லியிருக்கிறது. அதாவது உலகத்துலே சிலருக்கு ரொம்ப சுகம் கிடைக்கிறது. சிலருக்கு ரொம்ப துக்கம். சிலர் எப்போதும் நல்ல கார்யங்கள் பண்ணுகிறார்கள். சிலர் கெட்ட கார்யங்கள் பண்ணுகிறார்கள். அப்பேர்ப்பட்ட ஆட்களைப் பார்க்கும்போது நம்முடைய மனசுலே எப்படி இருக்கணும் என்கிற ஒரு ப்ரச்னை, நமக்கு சாதாரணமாக எப்படி வருகிறது என்று கேட்டால் மனுஷ்யனுக்கு இயற்கையாக ஒருத்தன் ரொம்ப சௌக்யமாக இருக்கிறான் என்று சொன்னால் அவனைப் பார்த்தால் வயிற்றெரிச்சல்! என்ன சௌக்யமாக இருக்கிறான் என்று கேட்டால் “சார்! அவன் எப்படி வந்தான் என்று தெரியும் ஓய்! எல்லாம் கள்ளப் பணம் தானே! (உடனே) சௌக்யமாக இருக்கான். புண்யம் பண்ணியிருக்கிறான், ரொம்ப சௌக்யமாக இருக்கிறான் என்று சொன்னால் போதாதா? அது இல்லை, ஒருத்தன் ரொம்பக் கஷ்டப் படுகிறான். படட்டும். இன்னும் கஷ்டப் படட்டும். அதைப் பார்த்தால் ஒரு கருணை உண்டாக வேண்டாமா? அது கிடையாது. ஒருத்தன் ரொம்ப நல்ல கார்யங்கள் பண்ணுகிறான். அதைப் பார்த்து சந்தோஷப்படக் கூடாதா? ஒருத்தன் நல்ல கார்யங்களைச் செய்கிறான் என்று சொன்னால் அங்கே ஏதாவது ஒரு குற்றம் கண்டு பிடிக்கிறதே தவிர அங்கே சந்தோஷப்படுவது என்பதே கிடையாது. அதேபோல் ஒருத்தன் தப்பிதம் பண்ணுகிறான் என்று சொன்னால் நமக்கு முடிந்தால் அவனுக்கு புத்திமதி சொல்லுவது இல்லை என்றாலும் பேசாமல் இருக்கலாம். அது போதும். எப்போதும் அவனைப்பற்றித் திட்டிக் கொண்டே இருப்பது அது எதற்கு? அதுவும் கூடாது. அதுதான் அங்கே சொல்லியிருக்கிறது. மைத்ரி, கருணை, முதிதா உபேக்ஷா. ரொம்ப சௌக்யமாக இருக்கிறான் என்று சொன்னால் அவன் விஷயத்துலே வயித்தெரிச்சல் பட வேண்டாம். ஸ்நேகத்தோடு இரு. ரொம்ப சந்தோஷம் ஓய்! சௌக்யமாக இருக்கிறீர்கள். சந்தோஷம். ஒருத்தன் ரொம்ப கஷ்டத்துலே இருக்கிறான் என்று கேட்டால் அவன் விஷயத்துலே கருணையோடு இரு. துக்கத்திலே இருக்கான் என்று சொன்னால் அவன் விஷயத்துலே ஒரு கருணை வேணும். கருணை என்று சொன்னால் இன்னொருத்தனுடைய துக்கத்தை நீக்க வேண்டும் என்ற விருப்பம் மனத்திலே உண்டாவது. அப்படிப்பட்ட ‘தயை’ என்பது உனக்கு வரவேண்டும். “என்னப்பா! ரொம்ப கஷ்டப் படுகிறாய். எனக்கு முடிந்த அளவுக்கு நான் உனக்கு உதவி செய்கிறான்.”

ஒரு ‘ஜீவித வாகனன்’ என்கிற ஒரு வித்யாதரனுடைய கதை இருக்கிறது. அது ஸம்ஸ்க்ருதத்துலே’ நாகானந்தம்’ என்கிற ஒரு நாடகத்துலே எழுதியிருக்கிறார்கள். ஒரு கருணருசிப்ரதானமான கதை. அதைப் படித்தால் கண்ணிலே ஜலம் வராதவனே கிடையாது. அப்பேர்ப்பட்ட ‘கருணாரசம்’ ரொம்ப இருக்கும் அந்த நாடகத்துலே. அதாவது இந்த கருடன் வந்து சர்பங்களை, தினமும் ஒரு சர்பத்தை சாப்பிடுவேன் என்று ப்ரதிக்ஞை பண்ணிக் கொண்டான். இல்லாவிட்டால் சர்ப குலத்தையே நாசம் பண்ணுவேன் என்று சொல்லி விட்டான். அப்போது அவர்கள் எல்லாரும் என்ன பண்ணினார்கள் என்று கேட்டால் “நாங்களே உனக்கு தினம் ஒரு சர்ப்பத்தை (பாம்பை) அனுப்புகிறோம். நீ எங்கள் குலத்தை நாசம் செய்யாதே” என்று சொன்னார்கள். அதே போல் தினமும் ஒரு சர்ப்பம் வரவேண்டியது, அதை கருடன் சாப்பிட்டு விட்டுப் போவது என்று இருந்தது. இந்த ஜீவித வாகன்’ என்ற வித்யாதரன்  ஒருதடவை அந்தப் பக்கத்துக்கு வந்தான். அங்கே வந்து பார்க்கும் போது அன்று ஒரு பாம்பு “சங்கசூடன்’ என்று பெயர். அன்று அதனுடைய சர்த்தை. கருடன் அங்கே வரணும் அந்த ‘சங்க சூடனை’ சாப்பிட வேண்டும். அப்போது அந்த வித்யாதரன் ‘ஜீவித வாகனன்’ கேட்டார். “என்னப்பா இங்கு வந்திருக்கிறாய்? இன்று என்னைத் தான் கருடனுக்கு ஆஹாரமாக எங்கள் வாசுகி அனுப்பியிருக்கிறார். வந்திருக்கிறேன். அது என்னப்பா? உன்னை கருடன் சாப்பிடவேண்டுமா? ஆமாம்!  சரி இன்று என்னைச் சாப்பிடட்டும். கருடன் நீ உயிரோடு இருந்து கொள். “என்றானாம், சாத்யமில்லையே சாத்யமில்லை. நான்தான் இன்று கருடனுக்கு ஆஹாரம். அதுதான் அங்கே என்ன ஒரு திட்டம் பண்ணியிருக்கிறார்கள் என்று கேட்டால் ஒரு சிவப்பு துணியை மாலை போட்டுக் கொள்ள வேண்டியது. மேலே போட்டுக் கொண்டு அங்கே ஒரு சில ஒரு கல் இருக்கிறது. அந்தக் கல்லில் உட்கார வேண்டியது. உடனே அந்த கருடன் வருவான். அந்தத் துணியை எடுத்து விட்டு அந்தப் பாம்பை சாப்பிட்டு விட்டுப் போய் விடுவான். இந்த ஜீவித வாகனன் கேட்டான் “அந்த சிவப்புத் துணியை எனக்குக் கொடு. நான் மேலே போட்டுக் கொண்டு உட்காருகிறேன். இதற்கு வத்தி சிலை என்றுபெயர். அந்த ‘வத்தி சிலை மேல் உட்காருகிறேன்” சாத்யமே இல்லை என்று அந்தப் பாம்பு சொன்னதாம். “இல்லை நான் உன்னைக் காப்பாற்ற வேண்டும். ஏய் எனக்காக நீ உயிரை விட்டால் என்ன ப்ரயோஜனம்?” என்று பாம்பு கேட்டதற்கு ஜீவித வாகனன் சொல்கிறான், “இந்த உயிரைக் கொடுத்தால் ஒருவனைக் காப்பாற்ற முடியும் என்று சொன்னால் அவச்யம் அதைக் கொடுக்க நான் தயார். இதை வைத்துக் கொண்டு என்ன பண்ணுவது?” அவன் அப்படியே அந்த ஜீவித வாகனன் அந்த வத்தி சிலையிலே உட்கார்ந்தான் கருடன் வந்தான். வரும்போது இவனுக்கு சந்தோஷம். முதல்நாள்வரை அந்த பாம்புகள் நடுங்கிக் கொண்டு இருந்தன (கருடன் வரும்போது) இன்று இவன் மிக சந்தோஷத்துடன் வாருங்கள் என்னுடைய புண்யத்தினால நீங்கள் வந்திருக்கிறீர்கள் சாப்பிடுங்கள் என்னை” என்றானாம். அதைக்கேட்டு கருடனுக்கு அபரிமிதமான ஆச்சர்யம். இன்று வரை யாரும் இந்த வார்த்தை சொல்லவில்லையே! நான் வரும்போது நடுங்கிக் கொண்டு இருந்தார்களே இவன் வந்து என்னை சாப்பிடுங்கள் என்று சொல்கிறானே! என்று நினைத்துக் கொண்டு “என்ன யோசனை பண்ணுகிறீர்கள்.? என்ன! என்னை சாப்பிட உங்களுக்கு பிடிக்கவில்லையா? தாராளமாக சாப்பிடுங்கள்” என்றானாம். பின்பு கடைசியிலே கருடனுக்கு “ஏய்! இப்படிப்பட்ட ஒரு பவித்ர ஆத்மா இருக்கிறானே! தன்னுடைய உயிரைக் கொடுத்து இன்னொருவனுடைய உயிரைக் காப்பாற்றுவதற்கு இருந்தானே! அப்போது இத்தனை நாள்கள் நான் என்ன பாவம் பண்ணினேன்?” என்று கருடனுக்கு பச்சாதாபம் வந்து விட்டது என்று சொல்வார்கள்.
அதாவது கருணை என்று சொன்னால் இன்னொருத்தனுக்கு எப்படியாவது நாம் உதவி செய்ய வேண்டும் என்கிற ஒரு பாவம். அந்த பாவத்தை விட்டு விட்டு அவன் கஷ்டத்தில் இருக்கிறான் என்று சொன்னால், இருக்கட்டும் என்று சொன்னால் அது என்ன குணம்? அதேபோல் ஒருத்தன் புண்யம் பண்ணுகிறான் என்று சொன்னால் அங்கு சந்தோஷத்தைக் காட்ட வேண்டும். ஓ! பெரிய கார்யம் பண்ணுகிறீர்கள். இன்னும் பண்ணுங்கள். சந்தோஷம். உங்கள் மாதிரி தர்மிஷ்டங்கள் இருக்க வேண்டும் என்று சொல்லவேண்டாமா? அதை விட்டு விட்டு அவர் எப்படி பண்ணுகிறார் எனக்கு தெரியாதா? என்று சொல்லவேண்டுமா? அவர் எந்த பக்கத்திலிருந்து வருகிறார் என்று தெரியுமா? எந்த பக்கத்திலிருந்து வந்தால் என்ன? அவன் செய்கிற நல்லகாரியத்தைப் பார்த்து சந்தோஷப்பட வேண்டாமா? இன்று ஒருவர் என்னிடம் சொல்லிக் கொண்டு இருந்தார்.

ஸ்வாமிஜி! உலகத்துலே ஒரு பெரிய ஆச்சர்யம் என்ன பார்க்கிறோம் என்று கேட்டால் (சாதாரணமான மனிதர்கள் சொல்வது தான்) பெரிய, பெரிய தணிகர்கள் அதாவது ஒரு நாளுக்கு பத்து லட்க்ஷம், இருபது லட்க்ஷம் வியாபாரம் பண்ணிக் கொண்டு இருக்கக் கூடிய தணிகர்கள் (பணக்காரர்கள்) இருக்கிறார்களே! அவர்களுக்கு வருஷத்துக்கு ஒரு லக்ஷம் ரூபாய் தர்மம் பண்ண வேண்டும் என்று கூட மனசு வர மாட்டேன் என்கிறது. அந்த விஷயம் (தர்மம்) வரும்போது நான் கொஞ்சம் கஷ்டத்தில் இருக்கிறேன் என்று சொல்லி விடுகிறார்கள். ஒரு நாளுக்கு 10,20 லக்ஷம் ரூபாய் வியாபாரம் நடந்து கொண்டு இருக்கிறது என்பது சரி. என்றைக்காவது ஒரு நாள் ஒரு பெரிய காரியம் பண்ணவேண்டும் என்று யாராவது போனால் நீங்கள் மன்னிக்க வேண்டும். கஷ்டத்தில் இருக்கிறேன். இதோ 100 ரூபாய் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த காரியத்தை முடித்து விடுங்கள் என்று சொல்லி விடுகிறார்கள்.  உலகத்துலே இது ஒரு பெரிய ஆச்சர்யமாக இருக்கிறது என்று சொன்னார்.

அப்படி நாம் இல்லாமல் ஒருத்தன் வந்து அந்த விஷயத்துலே நல்ல மனசோடு தர்மத்தைச் செய்கிறான் என்று சொன்னால் அவன் விஷயத்தில் நம் சந்தோஷத்தைத் தெரிவிக்க வேண்டியது நம் கடமை. அதை விட்டு விட்டு அவன் விஷயத்துலே கேவலம் ஆட்ஷேபத்தையே நாம் தெரிவித்தோமானால் அது அர்த்தம் இல்லாத கார்யம். அதேபோல் ஒருத்தன் ரொம்ப தப்பிதம் பண்ணுகிறான் என்று சொன்னால் அவனுக்கு புத்திமதி சொல்லலாம். நீ இந்த மாதிரி இருக்கக் கூடாது. இன்னும் என்னவென்றுகேட்டால் அது அவனுடைய ப்ராப்தம் என்று சொல்லி விட்டு விடுகிறோமே தவிர, அவனைப் போய் வார்த்தைக்கு வார்த்தை, திட்டிக் கொண்டே இருந்தால் என்ன ப்ரயோஜனம்?

அதனால் உனக்கு ஒண்ணும் நல்லது ஆகாது. அவனுக்கும் ஆவது இல்லை. இனி உனக்கு ஸ்ரமம் ஒண்ணுதான் பலன். அதனால் இந்த ஒரு நான்கு வாசனை? என்ன வாசனை? ஸம்ஸ்காரங்கள். என்ன ஸம்ஸ்காரம்? சுகத்துலே இருக்கிறவன் விஷயத்துலே ஸ்நேகத்தோடு இருக்கிறதும், துக்கத்துலே இருக்கிறவனோட விஷயத்துலே. கருணையோடு இருக்கிறதும், புண்யம் செய்கிறவன் விஷயத்துலே சந்தோஷமாக இருக்கிறதும், பாபி விஷயத்துலே உபேக்ஷையாக இருக்கிறதும், இந்த ஸம்ஸ்காரங்கள் எவனுக்கு இருக்கிறதோ அவன் உத்தமமானவன். அவன் தேவி பூஜை செய்வதற்குத் தகுதியானவன் என்று சொல்லியிருக்கிறார்கள். அதாவது நாம் அப்பேர்ப்பட்ட ஓர் உத்தமமான ஸம்ஸ்காரங்களை சம்பாதிக்கனும் என்பதற்கு முயற்சி செய்ய வேண்டுமே தவிர எனக்கு அதெல்லாம் கிடையாது நான் ஒண்ணும் தேவி பூஜை செய்ய வேண்டியதில்லை என்று யாரும் நினைத்துக் கொள்ளக் கூடாது. நாம் அந்த ஸம்ஸ்காரங்களை சம்பாதிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். அதேபோல் தேவி “ஸதாசார ப்ரவர்த்திகா” ஸதாசாரத்தை அவள் ஸர்வத்ரா தினங்களுக்கு ப்ரேரணையை, ஸதாசாரத்தில் இருப்பதற்கு ஒரு ப்ரேரணையைக் கொடுப்பாள். “துராசாரசமனீ” துராசாரங்களை நாசமாக்கக் கூடியவள்.

நம்முடைய முக்யமான ஒரு விஷயம், ஒரு ‘ஸதாசாரம்’ = பவித்ரமான ஆசரணம் என்பது நமக்கு வேண்டும். ஆசரணத்துலே ஒரு பாவித்ரியம் இல்லா விட்டால் இனி நாம் என்ன செய்தாலும் என்ன ப்ரயோஜனம்? அநேகம் பேருக்கு வேதங்கள் விஷயத்துலே ஓர் அபாரமான மதிப்பு, உண்டு. ஆனால் வேதத்துலே இருக்கக் கூடிய ஒரு ‘வைசிஷ்டம்’ ஓர் இடத்துலே சொல்லி இருக்கிறது. “ஆசாரஹீனம் நபினந்தி வேதா: ஆசாரமே இல்லாவனுக்கு அவனை வேதங்கள் கூட பவித்ரம் ஆக்காது. அதனால் ஆசாரம் என்பது ரொம்பவும் முக்யம். ஆசாரம் என்று சொன்னால் அது ஸதாசாரம். துராசாரம் அல்ல. அப்பேர்ப்பட்ட ஸதாசாரத்துலே நாம் இருக்கணும் என்று சொன்னால் நமக்கு தேவியினுடைய அருள் வேண்டும். ஏனெனில் அவள்தான் “ஸதாசார ப்ரவ்ருத்திகா” நமக்கு இருக்கிற துராசாரங்கள் தூரமாகனும் என்று சொன்னால் அவளுடைய அருள்தான் வேணும். அவள்தான் “துராசார சமனி” இப்பேர்ப்பட்ட மகிமை தேவிக்கும் அபாரமாக சொல்லியிருக்கிறது. அதே ஸஹஸ்ர நாமங்களிலே. அது மட்டும் இல்லை. அவளை நாம் ஸ்ரத்தையோடு ஆராதித்தால் “ஸத்ய ப்ரஸாதினீ” = உடனே அனுக்ரஹம் செய்வாள். அது ஒண்ணும் தாமதமே இருக்காது. ஆனால் நம்முடைய பக்தி என்பதை மட்டும் அவள் ரொம்பவும் எதிர் பார்ப்பாள். “பக்தி ப்ரியா பக்தி கம்யா பக்தி வச்யா பயா பஹா” பக்தியை அவள் ரொம்பவும் எதிர் பார்ப்பாள். அதுதான் பகவான் கீதையிலே சொல்கிற போது “ஏமே பக்த்யா ப்ரயச்சதி” நாம் பகவானுக்குக் கொடுக்கக்கூடிய பதார்த்தம் பெரிசா என்பது ப்ரச்னை அல்ல. நாம் அதை பக்தியோடு கொடுக்கிறோமா இல்லையா என்பது தான் ப்ரச்னை. பக்தியோடு நாம் எதைக் கொடுத்தாலும் பகவான் ஸ்வீகரிப்பான்.

அதேதான் பகவத் பாதாள் சொல்கிறபோது
“பக்தி கின்ன துரோத்யஹோ
வனசரோ பக்தா வதம் சாயதே”

ஏய்! பக்தி ஒண்ணுதான் முக்யம். பக்தி வேண்டுமே தவிர பெரிய பண்டிதர்கள் பூஜை பண்ணினால் தான் பகவான் ஏற்றுக் கொள்வார். பெரிய பணக்காரர்கள் பூஜை பண்ணினால்தான் பகவான் ஏற்றுக் கொள்வார் என்கிற அர்த்தம் இல்லை. ப்ரச்னை இல்லை. வெறும் பக்தி என்கிற ஒண்ணு இருந்தால் அது ஒரு காட்டு மனுஷன் ஆனாலும் அவனுடைய பூஜையை பகவான் பஹூஸந்தோஷத்தோடு ஸ்வீகரிப்பான் என்று சொல்லியிருக்கிறது. அதனால் தான் ஸம்ஸ்கிருதத்துலே ஒரு ஸ்லோகம் இருக்கிறது “ ஒரு பண்டிதர் தினமும் பகவான் சந்நிதிக்குப் போய்” விஷ்ணவேநம: என்று சொன்னார். இன்னொருத்தனுக்கு பாவம் ஒரு ‘ராமசப்தம்’ தவிர வேறு எந்த சப்தமும் தெரியாது. விஷ்ணாய நம: என்றான். இந்த பண்டிதருக்கு வந்து என்னடா இவன் தினம் வந்து “அபசப்த ப்ரயோகம்’ பண்ணுகிறான் என்று தோன்றும். விஷ்ணாய நம: இந்த இருவருக்கும் பக்தி ரொம்ப உண்டு. ஆனால் அவன் அபசப்தம் பண்ணுகிறானே இப்படி ப்ரயோகம் பண்ணுகிறவனுக்கு என்ன கிடைக்கப் போகிறது? என்று தோன்றும். கடைசியிலே இவரும் பகவத் சாகித்யத்துக்குப் போனார். அவனும் அங்கே தயாராகி விட்டான். “ஏய் நீ எப்படி யடா வந்தாய் இங்கே! என்று கேட்டால் பகவானுக்கு விஷ்ணாயா! சொன்னால் என்ன விஷ்ணவே சொன்னால் என்பது ப்ரச்னை இல்லை. இரண்டு பேருடைய மனசுலே பக்தி இருந்ததா என்று பார்த்தார். இரண்டு பேருக்கும் பக்தி இருந்தது. இரண்டு பேருக்கும் சாயித்யம் கொடுத்து விட்டான்.

 “மூர்க்கோவததி விஷ்ணாயா”
“ வித்வான் வததி விஷ்ணவே
உபயோ சதுர்சம் புண்யம்
பாவக்ராஹி ஜனார்த்தன:”

அதனால் நம்முடைய பக்திக்குத்தான் பகவான் மதிப்பு கொடுப்பானே தவிர இவன்பெரிய பண்டிதனா? இவன் பெரிய பணக்காரனா? இவன் பெரிய அதிகாரியா? என்று பகவான் பார்க்க மாட்டான். அதனால் நாம் எல்லாரும் பக்தியோடு பகவானைப் பூஜித்தால் ஸ்ரேயஸை அடைய முடியும். அப்பேர்ப்பட்ட மகிமை தேவிக்கு இருக்கிறது. அந்த தேவியை பக்தியோடு நாம் உபாஸிக்க வேண்டும். சமீபத்திலே யாரோ என்னிடம் கேட்டார்கள். ஸ்வாமிகளே! அம்பாள் பூஜை செய்ய வேண்டும் என்றால் எல்லாருக்கும் எப்படி முடியும்? எல்லாருக்கும் சாத்யமில்லையே என்ன சாத்யம் இல்லையப்பா! என்ன வேணும்? அம்பாளுக்கு வேண்டியது, உன்னுடைய பக்தி ஒண்ணுதான் வேணும். அந்த பக்தி இருந்தால் வேறு ஒண்ணும் செய்ய வேண்டியதில்லை அம்பாளுடைய உருவம் வைத்துக் கொண்டு நாமத்தைச் சொல்லிக் கொண்டு வா. போதும். அதிலேயே நீ ஸ்ரேயஸை அடைய முடியும். அதனால் அம்பாளை பூஜை செய்வதற்கு பூஜிப்பதற்கு எல்லோருக்கும் யோக்யதை இல்லை என்று மட்டும் நினைத்துக் கொள்ளவே வேண்டாம். எல்லாருக்கும் யோக்யதை இருக்கிறது. அதனால் அப்பேர்ப்பட்ட பக்திப் பாவத்தோடு நாம் தேவியை ஆராதித்து ஸ்ரேயஸை அடைய வேண்டிய ஒரு பவித்ரமான சமயம் இது. இந்த சமயத்தை நாம் வ்யர்த்தமாக்கக்கூடாது. வீணாக்கக் கூடாது. இந்த சமயத்தை சார்த்தகப் படுத்த வேண்டும்.

எங்க சச்சிதானந்த சிவாபிநவ நரஸிம்ம பாரதி ஸ்வாமிகள் (பரமேஷ்டி குருநாதர்) தேவியை அநேக விதமாக ஸ்துதித்திருக்கிறார். பகவத் பாதாள் எப்படி தேவீஸ்தோத்ரங்கள் அநேக ஸ்தோத்ரங்கள் செய்தாரோ அதே போல் எங்க சச்சிதானந்த சிவாபிநவ நரஸிம்ம பாரதீ ஸ்வாமிகளும் அம்பாளை அநேக விதமாக ஸ்துதித்து இருக்கிறார். அவர் அம்பாள் சந்நிதியிலே ஒரு ப்ரார்த்தனை நாம் எல்லோரும் பண்ணவேண்டும் என்று சொன்னார்.

“வித்யாம் சுத்தாம் ச புத்திம்
கமல ஜதயிதே ஸத்வரம்
தேஹி விஸ்யம்
(கமலஜதியிதா அஷ்டகம்).

முக்யமாக நமக்கு வேண்டியது. வித்யையும், பரிசுத்தமான புத்தியும். நம்முடைய மனசுலே கல்மிஷம் இருந்து விட்டால் நாம் எவ்வளவு படித்தாலும் சுகம் இல்லை. மனசு நிர்மலமாய் இருக்க வேண்டும். அந்த ஒரு நிர்மலமான மனசு இருந்தால் நம்முடைய ஜென்மம் க்ருதார்த்மாகி விடும். அதே போல் இந்த சம்சார பந்த நிவர்த்தகமான ஞானத்தையும் தாயே! நமக்கு கொடு என்று சொன்னார் அவர். அதேபோல்.

“பாபம் ஹம்ஸயித்வா
பஹூ ஜனி ரஜிதம்
கிம்ஜதே அணி மாராத் சம்பாத்யா
அஸ்திக்ய வித்யம்”

ஸ்ருதி குரு வசனஷ்வாகரம் பக்தி தாட்யம்

பாபத்தைப் போக்க வேண்டும். அநேக ஜென்மங்களில் பாபத்தைச் செய்திருக்கிறோம். ‘பஹுஜனிரசிதம் பாப விஹம் தம் யித்வா” இந்த ஜென்மம் மட்டுமில்லாமல் எத்தனையோ ஜென்மங்களிலே பாபம் நடந்திருக்கிறது. அதெல்லாம் நீதான் போக்க முடியும் என்று “பாபாரண்ய தவானலா” என்று வேண்டினார். அதனால் நீ இந்த பாபத்தைப் போக்கி. புண்யத்தை எனக்கு வரும்படி செய்து ஆஸ்திக்யத்தை உண்டாக்கி ஆசார்யாள் விஷய (குரு) பேச்சுலேயும் சாஸ்த்ரத்தின் வாக்கிலேயும் விஸ்வாசத்தை உண்டாக்கி என்னைக் காப்பாற்ற வேண்டும். ஆஸ்திக்யம் வேணும் என்று அங்கே சொல்லிஇருக்கிறார். அந்த ஆஸ்திக்யம் இல்லாமல் கேவலம் நாஸ்திகன் மாதிரி நாம் வாழ்க்கை நடத்தினால் இந்த வாழ்க்கையும் அந்த நாஸ்திகர்கள் வாழ்க்கைக்கும் நாலுகால் ப்ராணிகள் வாழ்க்கைக்கும் வித்யாஸம் இல்லை. அப்பேர்ப்பட்ட வாழ்க்கையை நாம் நடத்தக் கூடாது. அதனால் அங்கே ஆஸ்திக்யத்தை உண்டாக்கும் என்று தாயாரை (தேவியை) வேண்டிக் கொண்டார் அவர். அப்பேர்ப்பட்ட மகான்கள் எல்லாரும் அதிஸ்ரத்தையோடு இந்த பவித்ரமான சமயத்தில் தேவியை ஆராதித்தார்கள் என்கிறபோது அதே மகான்களுடைய பரம்பரையில் வந்து இருக்கிற நாம் எல்லோரும் கூட அந்த தேவியை அதே பக்தி ஸ்ரத்தைகளோடு ஆராதித்து ஸ்ரேயஸை அடைய வேண்டியது கர்தவ்யம் (கடமை).


ஐந்து தர்மங்கள்

ஐந்து தர்மங்கள்
ஸ்ரீஸ்ரீ பாரதீதீர்த்த மஹாஸ்வாமிகளின் அனுக்ரஹ பாஷணம்
நம்முடைய பாரதீய ஸம்ஸ்க்குதியிலே தர்மத்துக்கு மிக பிராமுக்யம் இருக்கிறது. பிரதி ஒரு மனிதனும் தர்மத்தை அனுஷ்டிக்க வேண்டும். தர்மத்தை ஆசரணம் செய்யவேண்டும். தர்மத்தின் ஆசரணத்தினால்தான் இந்த உலகம் சுப்ரதிஷ்டிதமா இருக்கும். எங்கே தர்மத்தின் ஆசரணம் இருக்காதோ அங்கே சுபிட்ஷம் இருக்காது என்று நம்முடைய சாஸ்த்ரங்களில் அடிக்கடி ஒரு கோஷம் இருக்கிறது. அந்த தர்மத்தினுடைய மஹிமை எவ்வளவு என்று சொன்னால் நான் இப்போது சொன்னேனே தர்மத்தை எங்கு ஆசரணம் செய்வார்களோ அங்கு சுபிட்ஷமாக இருக்கும் என்று சொன்னேன். மஹாபாரதத்திலே ஒரு ஸந்நிவேசம். பஞ்சபாண்டவர்கள் பாண்டு ராஜனுடைய குமாரர்கள். அவர்களில் மூத்தவர் தர்மராஜர் என்பவர். அவர் மிகவும் தர்மிஷ்டரானவர். ஒரு ஸந்நிவேசத்திலே அந்தப் பஞ்சபாண்டவர்கள் தர்மத்துக்கு கட்டுப்பட்டு பன்னிரண்டு வருடகாலம் வனவாசம் அதாவது காட்டிலேயே வாசம் செய்யவேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது. அதற்குப்பின் ஒரு வருஷம் அக்ஞாதவாசம். யாருக்கும் தெரியாமல் ஒரு வருஷம் காலம் கழிக்கணும் என்கிற ஒரு நியமம் ஏற்பட்டது. இந்த நியமம் துரியோதனனுக்கும் பஞ்சபாண்டவர்களுக்கும். அதிலேயும் அந்த நியமம் எப்படி என்று கேட்டால் அந்த ஒரு வருஷ அக்ஞாதவாசம் காலத்திலே அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று துரியோதனன் ஏதாவது கண்டு பிடித்தால் திரும்ப பன்னிரண்டு வருஷம் வனவாசம், ஒரு வருஷம் அக்ஞாதவாசம் என்பது. ரொம்பக் கொடூரமான நியமம்.

ஆனால் தர்மத்துக்குக் கட்டுப்பட்டு அந்தப் பஞ்சபாண்டவர்கள் அதை ஏற்றுக் கொண்டார்கள். பன்னிரண்டு வருஷங்கள் காலம் வனவாசம் முடிந்துவிட்டது. அந்த அக்ஞாத வாசத்தின் ஒரு வருஷம் ஆரம்பித்துவிட்டது. அந்தச் சமயத்திலே துரியோதனனுக்கு ஒரு துர்புத்தி உண்டாகிவிட்டது. இந்த ஒரு வருஷத்துக்குள்ளேயே நான் அவர்களைக் கண்டு பிடித்தால் இன்னும் 13 வருஷம் நான் சௌக்கியமாக இருக்கலாமே என்று. அதற்காக துரியோதனன் பீஷ்மரிடம் கேட்டான் “பஞ்சபாண்டவர்கள் எங்கே இருக்கிறார்கள்? நீங்கள் சொல்லுங்கள்.” என்று. அப்போது பீஷ்மர் சொன்னார், “இங்கு பார்! அவர்கள் இந்த இடத்தில் இருக்கிறார்கள் என்று என்னால் சொல்ல முடியாது. அக்ஞாதவாசத்தில் தான் இருக்கிறார்கள். ஆனால் ஒரு விஷயத்தைச் சொல்லுவேன். எந்த தேசத்திலே எந்த ராஜ்யம் சுபிட்ஷமாக இருக்கிறதோ அங்கே அவர்கள் இருக்கிறார்கள் என்பது தீர்மானம். தர்மராஜன் கால் வைத்த இடம் சுபிட்ஷமாக இருக்கும். அவன் சாக்ஷாத்மூர்த்தியான தர்மம். இதுதான் அடையாளம். இவ்வளவுதான் சொல்வேன். இதைவிட ஜாஸ்தி சொல்வதற்குத் தெரியாது” என்றார்.

பின்பு அப்பேர்ப்பட்ட சுபிட்ஷமான தேசம் எது என்பதை ரொம்ப ஆராய்ச்சி செய்யும் போது விராடராஜனுடைய தேசம் சுபிட்ஷமாக இருக்கிறது என்பது தெரிந்தது. பின்பு அங்கு பஞ்ச பாண்டவர்கள் இருக்கிறார்கள், அவர்களைக் கண்டு பிடிக்கலாம் என்று துரியோதனன் முயற்சி செய்தான். ஆனால் அவன் கண்டு பிடிப்பதற்குள் அந்த ஒரு வருஷம் முடிந்து விட்டது வேறு விஷயம். எதற்காகச் சொல்கிறேன், தர்மிஷ்டனானவன் எந்த இடத்தில் இருப்பானோ அந்த தேசம் சுபிட்ஷமாக இருக்கும் என்கிறபோது தர்மத்துக்கு எவ்வளவு மதிப்பு இருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அப்பேர்ப்பட்ட தர்மம் நாம் எல்லாரும் அவசியம் ஆசரணம் செய்ய வேண்டியது. ஆனால் தர்மத்தை ஆசரணம் செய்யும்போது நாம் என்ன செய்யவேண்டும் என்கிற ஒரு கேள்வி எல்லாருக்கும் வரும்.

சும்மா தர்மம் பண்ணனும் என்கிற வார்த்தையைச் சொல்லி முடித்து விடுகிறீர்கள். அப்படி என்றால் என்ன? நாங்கள் என்ன செய்ய வேண்டும்? என்று சாதாரண மனிதர்கள்-சாஸ்திரத்தைப் பற்றி விசேஷ அறிவு இல்லாத வர்கள்-கேட்பார்கள். அதற்கும் சாஸ்திரம் ஜவாப் சொல்லியிருக்கிறது. உன்னுடைய ஜீவிதத்திலே சில நியமங்களை வைத்துக்கொண்டால், இந்த நியமங்களுக்கு அனுஸார மாகத்தான் என்னுடைய வாழ்க்கையை நான் நடத்துவேன் என்று நீ இருந்தால், நீ தார்மீகன். என்ன நியமங்கள் என்று சொன்னால் சாஸ்த்ரம் விளக்கம் சொல்கிறது.

அஹிம்ஸா, சத்யம், அஸ்தேயம், சௌசம்,
இந்த்ரிய நிக்ரஹ ஏதம் சாமாதிகம் தர்மம்
சாதுர்வர்ணே பிரதிர் மனு.

முதல் முதலில் அஹிம்ஸா என்று சொன்னால், நான் யாருக்கும் தொந்தரவு செய்யமாட்டேன் என்கிற ஒரு நியமத்தை வைத்துக் கொள்வது தொந்தரவு செய்ய மாட்டேன் என்று சொன்னால் இன்னொரு வனை அடிக்கக்கூடாது என்பது மட்டும் அல்ல. இன்னொருவனுடைய மனசுகும் தொந்தரவு செய்யக்கூடாது. நாம் பாபங்களை அநேகவித மாகச் செய்வோம். இன்னொருவனுடைய மனசுக்கு நோவு உண்டாகும்படி பேசினால் அதுவே ஒரு பாபம். அவனை அடிக்கணும் என்று ஒன்றும் இல்லை. அவன் மனசுக்கு நோவு உண்டாகும்படி பேசினாலே அதுவே ஒரு பெரிய பாபம் ஆகிவிடுகிறது. அதையும் நாம் செய்யக்கூடாது. அதுவும் ஒருவிதமான ஹிம்ஸை ஆகும். நாம் எப்படி இருந்தால் நம்மால் இன்னொருவனுக்கு எந்தவிதமான தொந்தரவும் இருக்காதோ அப்பேர்ப்பட்ட வாழ்க்கையை நாம் நடத்த வேண்டும். இந்த மாதிரி வாழ்க்கையை நடத்துவது சிரமம் என்று சிலருக்குத் தோன்றும். ஆனால் அதை அனுபவத்துக்குக் கொண்டுவந்துவிட்டால் ஒரு சிரமமும் இருக்காது. நம் வேலையை நாம் பார்த்துக்கொண்டு அனாவசியமாக எந்தவித மான இன்னொருவனுடைய வம்புக்கும் நாம் போகாவிட்டால் அதுவே பெரிய விஷயம்தான். நமக்கு அது இப்போது அப்யாசத்தில் இல்லாததனால் இது ரொம்பக் கஷ்டம் என்று தோன்றும்.

அதனால் முதல் ஸூத்ரம் அஹிம்ஸா. யாருக்கும் தொந்தரவு செய்யக்கூடாது என்பது, முதல் தர்மம். அதே போல் இரண்டாவது தர்மத்தைப் பற்றி சொன்னா சத்யம் என்பது. சத்யம் என்றால் உண்மை சொல்வது என்று அர்த்தம். எந்த விஷயத்தை எப்படி வாஸ்த வமாக நாம் தெரிந்து கொண்டு இருக்கிறோமோ அப்படியே சொல்வதுதான் சத்யம். நமக்கு அந்த விஷயம் தெரிந்தது ஒரு மாதிரி உள்ளது நமக்குத் தெரியும். ஆனால் அதை மட்டும் நாம் சொல்வதில்லை. நாம் அதை வேறு விதமாகச் சொல்லுவோம். அது ஒரு விளையாட்டுக்குச் சொல்லுவோம் என்று நினைத்துக் கொண்டு இருப்போம். ஆனால் அது எவ்வளவு பாபத்தைக் கொடுக்கும் என்பதை நாம் யோசிக்க மாட்டோம். அதாவது புதிதாக ஓர் ஆள் வந்திருக்கிறார். அவர் ஊருக்குப் போக வேண்டியிருக்கிறது. அந்த ஊருக்கு எப்படி போகணும் என்று கேட்பார். அதற்கு இப்படி கிழக்கு பக்கம் போக வேண்டியிருக்கும். நாம் விளையாட்டுக்கு இப்படி நீங்கள் நேராகப் போங்கள் என்று சொல்லுவோம். நமக்கு என்னவோ அது ரொம்ப விளையாட்டாகத்தான் தோன்றும். ஆனால் அந்த மனுஷர் அப்படி மேற்கு பக்கம் திரும்பிப் போனால் அவன் விரும்பிய இடத்தில் போய்ச் சேரமுடியுமா? அங்கே அப்படியே போய்க் கொண்டு இருந்து மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டு இருந்த அந்த சமயத்திலே நம்மைப் பற்றி என்ன நினைப் பான்? நமக்கு அதெல்லாம் யோசனை இருக்காது. கடைசியில் என்னப்பா இப்படி சொன்னாயே?” என்று கேட்டால் “தமாஷ§க்கு சொன்னேன் ஸார்” என்பான். “உன்னுடைய தமாஷு நமக்கு இவ்வளவு ப்ராண ஸங்கடத் துக்கு வந்துவிட்டதே!” அப்படி என்பதை யோசிப்பதில்லை. இது ஓர் உதாரணத்துக்குச் சொன்னது. இந்த மாதிரி எவ்வளவோ சந்தர்ப் பங்கள் நாம் அசத்யத்தைச் சொல்லி கேவலம் பாபத்தைச் சம்பாதிக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் வரும். அந்த சந்தர்ப்பங்கள் நமக்கு வரக்கூடாது. அசத்யம் அதாவது பொய் வார்த்தையை நாம் சொல்லக் கூடாது. இந்த ஒரு நியமத்தை வைத்துக் கொள்ளவேண்டும். நாம் என்றைக்கும் சத்யத்தைச் சொல்லுவோம் என்ற ஒரு நியமத்தில் இருக்க வேண்டும். இது இரண்டாவது தர்மம்.

சாதாரணமாக நாம் தர்மத்தை அனுஷ்டிப்பது எப்படி என்ற கேள்விக்கு ஜவாப்.
மூன்றாவது தர்மமாகச் சொன்னார்கள் அஸ்தேயம். அஸ்தேயம் என்று சொன்னால் இன்னொருவனுடைய பொருளை அபகரிக்கக் கூடாது என்று அர்த்தம். நமக்கு நியாயமாக இன்னொருத்தனிடமிருந்து வரவேண்டி இருந் தால் அதை நாம் விரும்பினால் தவறில்லை. நாம் அநியாயமாக இன்னொருத்தனுடைய வஸ்துவை நம்முடையதாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்று நினைத்தால் அதுதான் மிகவும் பாபமாகும்.

அந்த ஓர் அஸ்தேயம் என்று சொன்னால் இன்னொருத்தனுடைய சொத்துக்கு ஆசைப்படாமல் இருக்கிறது என்பது. அது ஒன்று நமக்கு இருந்தால் நாம் எவ்வளவோ புண்யசாலிகள் ஆகமுடியும். அது ஒன்று இல்லை என்று சொன்னால் எவ்வளவோ பாபங்களை நாம் செய்யக்கூடிய சந்தரப்பங்கள் உண்டாகும். அப்பேர்ப்பட்ட ஒரு விவேகம் இல்லாமல் கேவலம் ஓர் அத்யாசையினாலே இன்னொருத்தனு டைய பதார்த்தத்தை அபகரிக்க முயற்சி செய்து எவ்வளவோ கஷ்டங்களில் மாட்டிக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் அநேகம் பேருக்கு வரும் என்பதை நாம் புதிதாகச் சொல்ல வேண்டிய தேவையில்லை. இராமாயணத்தில் அவ்வளவு பெரிய பலசாலியாய் இருந்த இராவணன் கூட கேவலம் பகவான் ஸ்ரீஇராமச்சந்திரனுடைய தர்மபத்னியான அந்தச் சீதாதேவியை விரும்பி அவளை அபகரித்துப் போனதனால் அவனுக்கு ஸர்வநாசம் ஆனதை நாம் இராமாயணத்தி லிருந்து தெரிந்து கொண்டிருக்கிறோம். “இராவணன் செய்த தவறு என்ன?” என்று ஒருவன் கேட்டான். “இதைவிடப் பெரிய அபராதம் உலகத்திலே ஏதாவது உண்டாப்பா? இன்னொரு ஸ்த்ரீயை நாம் நம்முடைய தாயார் மாதிரி பார்க்கணும் என்று நம்முடைய சாஸ்த்திரம் சொல்கிறது.

“மாத்ருவத்பரதாரேஷி பரத்ரவ்ய்யேஷி
லோஷ்டவது ஆத்மவத் ஸர்வ பூதேஷி
எப்பஸ்யதி ஸபஸ்யதி”

பரஸ்த்ரீயாய் இருந்தால் அவள் விஷயத் திலே தாயார் மாதிரி பாவிக்கணும். நம்முடைய தாயார் விஷயத்திலே எப்பேர்ப்பட்ட ஸ்வப்னத் திலேயும் நமக்கு தப்பான எண்ணம் வராதோ அதே போல் பரஸ்த்ரீ விஷயத்திலே தப்பான எண்ணம் வரக்கூடாது என்று அதற்கு அர்த்தம். இதற்கு மாறாக ஏதாவது நடந்து கொண்டால் இனி அதைவிட மஹா பாபம் என்ன இருக்கும்? அப்பேர்ப்பட்ட பாபத்தை இராவணன் செய்தான். அதற்குப் பலனாக சர்வ நாசத்தை அனுபவித்தான். அவனு டைய சைன்யம், அவனுடைய சொத்து சர்வஸ்தமும் நாசமாகிவிட்டது. கேவலம் அந்த ஒரே ஒரு பாபத்தின் பலனே அப்படி இருக்கும்போது இன்னொருத்தனுடைய சொத்துக்காக நாம் ஆசைப்பட்டு செய்யக் கூடிய அநியாயங்கள் நமக்குக் கடைசியில் கேவலம் விபரீத பலனைத்தான் கொடுக் கும். அதனாலே நாம் அப்பேர்ப்பட்ட காரியத்தைச் செய்யக்கூடாது என்கிற ஒரு நியமத்தை வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு நாம் எப்படி பிழைக்கணும் என்று சிலர் கேட்பார்கள். “நியாயோ பார்ச்சித வித்தேன கர்தவ்யம் க்யாத்ம ரக்ஷணம்” நியாயமான மார்க்கத்தில் நமக்கு எது கிடைத்தாலும் அது நம்முடைய மஹாபாக் கியம் என்று நினைக்கவேண்டும். நாம் அநியாயமாக சம்பாதித்து கோடீஸ்வரன் ஆனாலும் அது நமக்கு யோக்கியமான நியாயமான மார்க்கத்திலே நாம் சாதாரண மான வாழ்க்கையை நடத்தினாலும் அதுதான் மிக உயர்ந்த வாழ்க்கை என்று சொல்லப்படும். அதற்காக “அஸ்தேயம்” இன்னொருத்தனுடைய சொத்துக்காக ஆசைப்படாமல் இருப்பது என்பது ஒரு தர்மம். இந்தத் தர்மத்தை எல்லாரும் அனுசரிக் கணும் என்று சொன்னார்கள்.

அதேபால் “சௌசம்.” சௌசம் என்றால் பவித்ரமாக இருக்கவேண்டும். பவித்ரமாக என்று சொன்னால் உடல் பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்பது மட்டும் அர்த்தம் அல்ல. மனமும் பரிசுத்தமாக இருக்கவேண்டும். “சௌசன்சத் த்ரவிதம் ப்ரோக்தம் பாஹ்ய மாப் யந்த்ரந்ததா ம்ருச்சலாப்யாம் க்ருதம் பாஹ்யம் பாவசச்சித்தாந்தரம் சௌசம்” என்றால் அது இரண்டு விதம் பாஹ்ய சௌசம், அப்யந்த்ர சௌசம். பாஹ்ய சௌசம் என்று சொன்னால் உடலைப் பரிசுத்தமாக வைத்துக் கொள்வது. மனத்தை பரிசுத்தமாக வைத்துக் கொள்வது ஆப்யந்த்ர சௌசம். மனத்தைப் பரிசுத்தமாக வைத்துக் கொள்வது என்று சொன்னால் மனத்தில் எந்தவிதமான கல்மிஷம் இல்லாமல் பரிசுத்தமான மனத்துடன் இருப்பது என்று அர்த்தம்.

பின்பு கடைசியில் “இந்த்ரிய நிக்ரஹ” என்று சொன்னார். “இந்த்ரிய நிக்ரஹம்” என்று சொன்னால் நமக்கு எதைப் பார்த்தாலும் வேணும் வேணும் என்று தோன்றிக் கொண்டிருக்கும். தோன்றாமல் இருந்தால் அதுதான் இந்த்ரிய நிக்ரஹம். அப்படி புதிதாக ஒரு வஸ்து வந்தால் அது எனக்கு வேண்டும். ஒரு நல்ல த்ருசம் இருந்தால் அதை நான் பார்க்க வேண்டும். அங்கே ஏதோ நல்ல சப்தங்கள் இருந்தால் அதை நான் கேட்க வேண்டும். இந்த மாதிரி நம்முடைய ஒவ்வோர் இந்த்ரியமும் ஒவ்வொரு விஷயத்துக்கு மாட்டிக் கொண்டு இருக்கிறது. இனி அதற்காக நாம் எவ்வளவோ கஷ்டங்களை அனுபவிக்க வேண்டி வருகிறது. அந்த “இந்த்ரிய நிக்ரஹம்” என்பது இருந்து விட்டால்-எனக்கு இந்த சபலம் இருக்கக்கூடாது என்பது ஒன்று இருந்துவிட்டால்-நாம் சுகமாக இருக்கலாம்.

இந்த ஐந்து தர்மங்களை மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் அனுசரிக்க வேண்டும் என்று சாஸ்த்ரம் சொல்லியிருக்கிறது. நாம் தார்மீகர்களாக இருக்க வேண்டும் என்று சொன்னால் இந்த ஐந்து தர்மங்கள் நமக்கு, மிகவும் அவசியமாகும். யாருக்கும் உபத்ரவம் செய்யமாட்டேன். என்றைக்கும் பொய் சொல்ல மாட்டேன். என்றைக்கும் இன்னொருத் தனுடைய சொத்துக்கு ஆசைப்படமாட்டேன். நான் பரிசுத்தமாக இருப்பேன். என் இந்த்ரியங் களை என் வசத்தில் வைத்துக் கொள்ளுவேன் என்ற, ப்ரதிக்ஞையை எவன் செய்வானோ, இப்பேர்ப்பட்ட பவித்ரமான வாழ்க்கையை எவன் நடத்துவானோ அவன் தான் தார்மீகன். அவன் பரிசுத்தமான மனிதன் என்று சொல்லப் படுவான். ஆனால் இதை நடத்தவேண்டும் என்று சொன்னால் நமக்கு பகவானுடைய அருள் மிகவும் தேவை. நாம் எந்தக் காரியத்தை ஆரம்பித்தாலும் நமக்கு பகவானுடைய அருள் மிகவும் தேவை. நாம் எந்தக் காரியத்தை ஆரம்பித்தாலும் அந்தக் காரியத்திலே பகவானு டைய அருள் இல்லாவிட்டால் நமக்கு வெற்றி கிடைக்காது. நாம் எவ்வளவு முயற்சிகள் எடுத்தாலும் நாம் எவ்வளவு சமர்த்தர்கள், கெட்டிக்காரர்கள் என்று நினைத்தாலும் நம்மை எல்லாரையும் விட உத்க்ருஷ்டமான சக்தி அந்த பகவான் ஸர்வேஸ்வரன். அவருடைய க்ருபை நம்முடைய ஒவ்வொரு காரியத்திலும் மிகவும் தேவையாக இருக்கிறது.

இதை வைத்துதான் முன்னோர்கள் ஒரு வார்த்தையைச் சொன்னார்கள். மனிதனுடைய வாழ்க்கை ஒரு வண்டி, ஒரு ரதம் மாதிரி என்று. எப்படி ரதத்திற்கு இரண்டு பக்கங்களில் இரண்டு சக்கரங்கள் இருக்குமோ அந்த இரண்டு சக்கரங் களும் என்னவென்றால் ஒன்று மனிதனுடைய முயற்சி ஒன்று பகவானுடைய அருள். இந்த இரண்டு சக்கரங்களும் சரியானபடியாக முன்னுக்குப் போனால்தான் வாழ்க்கை நன்றாக அமையும். ஆகையால் அதற்காக நாம் நம்மு டைய ஒவ்வொரு காரியத்திலும் ஈஸ்வரனுடைய அருளைப் பெறவேண்டும். அதற்காக நாம் பகவானை அனன்யமான மனத்துடன் சேவிக்க வேண்டும். பூஜிக்க வேண்டும். ஸ்மரிக்க வேண்டும். நாம் எப்பேர்ப்பட்ட பரிஸ்சிதி யிலும் ஈஸ்வரனை மட்டும் மறக்கக் கூடாது. நமக்கு ஒரு ஸ்வபாம். நாம் ரொம்ப சுகமாக இருக்கும்போது பகவானுடைய நினைவே வராது. கொஞ்சம் கஷ்டம் வந்தால் அப்போது தான் பகவானுடைய நினைவு வரும். ஆனால் எப்போதும் அந்த ஈஸ்வரனுடைய நினைவு நமக்கு ரொம்ப அவசியம். அதனால் அப்பேர்ப்பட்ட அந்தத் தார்மீகமான வாழ்க்கை நாம் நடத்த வேண்டியிருந்தால் அந்த ஈஸ்வரனுடைய அருள் மிகவும் தேவை. அதற்காக நாம் ஈஸ்வரனை அனன்யமான மனத்தோடு “பகவானே! இந்தத் தார்மீக வாழ்க்கையை நடத்துவதற்கு எனக்கு ப்ரேரணையும் சக்தியையும் கொடு” என்று நாம் ஈஸ்வரனை ப்ரார்த்திப்போம். நாம் பவித்ரமான மனத்தோடு செய்த ப்ரார்த்தனையை ஈஸ்வரன் அங்கீகரித்து நமக்கு அப்பேர்ப்பட்ட அனுக்ரஹத்தைச் செய்தால் அதைவிட இந்த ஜீவிதத்தில் நாம் அடையவேண்டியது வேறெதுவும் இருக்காது. ஒவ்வொருவனுக்கும் அப்பேர்ப்பட்ட பவித்ரமான புத்தியை பகவான் தரட்டும் என்று நான் பகவானை ப்ரார்த்திக்கிறேன்.

Thursday 4 December 2014

அனைவருக்கும் எளிதான ஒரு மந்திரம் - ஸ்ரீமத் அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுபதேசம்

அனைவருக்கும் எளிதான ஒரு மந்திரம்
(ஸ்ரீமத் அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுபதேசம்)

வீதாகிலவிஷயேச்சம் ஜாதா நந்தாச்ருபுலகம த்யச்சம் |
ஸீதாபதிதூதாத்யம் வாதாத்மஜமத்ய பாவயே ஹ்ருத்யம் ||
தருணாருணமுககமலம் கருணாரஸபூரபூரிதாபாங்கம் |
ஸஞ்ஜீவனமாசாஸே மஞ்சுலம ஹிமானமஞ்சனாபாக்யம் ||

பகவத்பாதாளின் பெயரைக் கேட்காதவர்கள் மிகக் குறைவு. அவருடைய பெயர் இத்தனை நாள் புகழோடு விளங்குவதற்குக் காரணம் இருந்திருக்க வேண்டும். (அது என்னவென்று பார்ப்போம்.) அவர் காலத்தில் வேதத்திற்கு எதிராக இருந்த மதங்களின் செல்வாக்கு அதிகமாக இருந்தது. அதர்மம் அதிகமாகி விட்டிருந்தது. அந்த நேரத்தில் பகவத்பாதரின் அவதாரம் கேரளத்தில் ஏற்பட்டது. அவர், “நான் வீட்டிலேயே வாழ்ந்து சாமான்யமான பேர்வழிகளைப் போல் இருந்தால் என்ன பிரயோஜனம் ஏற்படும்?” என்று சிந்தித்தார். பின் சிறுவயதிலேயே சந்யாசம் பெற்றுக்கொண்டு பாரதம் முழுவதும் பயணம் செய்து ஜனங்களுக்கு உபதேசங்களைக் கொடுத்தார். என்ன உபதேசத்தைக் கொடுத்தார்? “இறைவன் ஒருவனேதான். அவ்வாறு இருந்தாலும் அவர் பலவிதங்களில் காட்சியளிக்க முடியும்” என்றார் அவர்.

பகவானின் ஓர் உருவத்தை மட்டும் உண்மை என நினைத்துக்கொண்டு பூஜை செய்யும் ஒருவன் மற்ற உருவங்களை மதிக்க மாட்டான். இவ்வாறு மக்கள் தவறாக நினைத்துக் கொண்டு மற்ற உருவங்களிடம் மதிப்பு வைக்காமலிருந்தார்கள். இதைக் கண்ட பகவத்பாதாள், ‘எல்லாரும் பகவானையேதான் பூஜை செய்து கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் பகவான் (அவரவர்கள் பூஜை செய்யும்) அந்தந்த உருவத்தில் வருகிறான். அவர்கள் ஏதாவது ஓர் உருவத்தில் பகவானைப் பூஜை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்’ என்று கூறினார். அதனால் பகவத்பாதாள், “நீ பகவானை எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் ஆராதனை செய்.ஆனால் அவர் உண்மையில் உருவமற்றவரேயாவார். உருவமில்லாதவரானாலும் பகவானானவன் பக்தர்களுக்கு அருள்புரிந்து பலவிதமான உருவங்களைப் பெற்றுக் கொள்கின்றான். அதனால் தான் மத்ஸ்ய, கூர்ம, வராஹ, இராம, கிருஷ்ண அவதாரங்களை பகவான் பெற்றுக்கொண்டார். நாம் முக்கியமாக விஷ்ணுவின் பத்து அவதாரங்களை ஒப்புக்கொள்கின்றோம். ஆதலால் ஏதோ ஓர் உருவத்தை மட்டும் மனத்தில் வைத்துக்கொண்டு, மற்றவர்களுடன் சண்டை போடத் தேவையில்லை. மனம் தன் சம்ஸ்காரத்தை அனுசரித்து எந்த உருவத்தில் ஈடுபடுகிறதோ அதே உருவத்தை ஒருவன் ஆராதனை செய்யலாம். அவன் வேறோர் உருவத்தை ஆராதனை செய்கிறானோ, அந்த உருவத்தில் இவன் வெறுப்பு வைத்துக் கொள்ளக்கூடாது. இதற்குக் காரணமென்னவென்றால் பகவான் அந்த மனிதனுக்கு அந்த உருவத்தில் அனுக்ரஹம் செய்வான். அவன் பக்தர்களுக்கு அனுக்ரஹம் செய்வதற்காக எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வரலாம். பகவானின் அருளில்லாவிட்டால் நாம் அவரைச் சிந்திக்கவே முடியாது. அர்ஜுனன், கிருஷ்ணருடனேயே இருந்து கொண்டிருந்தான். ஆனாலும் பரிபூர்ணமாக அவரை அறிந்துகொள்ள முடியவில்லை. பகவான் போர்க்களத்தில் அவனுக்கு உபதேசம் கொடுக்கும்போது, ‘நீ இப்போது என்னைப் பார்த்துத் தெரிந்துக் கொள். நான் உனக்கு திவ்ய திருஷ்டியை (ஞானக்கண்ணை)த் தருகின்றேன்’ என்று காட்டினான். அப்போதுதான் அர்ஜுனனால் பகவானுடைய உண்மையான உருவத்தை அறிந்து கொள்ள முடிந்தது.

ஆகவே பகவானுக்கு உண்மையில் உருவமில்லாவிட்டாலும் பல உருவங்களைப் பெற்றுக்கொள்கிறான். மேலும் அவனருள் இருந்தால்தான் அவனை நாம் அறிந்து கொள்ளமுடியும். நீ இராமரையோ, கிருஷ்ணரையோ, அம்பாளையோ, ஆஞ்சனேயரையோ ஆராதனை செய்யலாம். ஆஞ்சனேயர் யார்? அவர் மஹாதேவனின் அவதாரமாவார். மஹாதேவரின் ஓர் உருவம் போலுள்ளார் அவர். மனிதன் பகவானை ஆராதனை செய்து, அவருடைய சாக்ஷாத்காரத்தைப் பெற்றுவிட்டால் அப்போது அவன் பகவானை விட்டுப் பிரிந்திருக்க முடியாது. சமுத்திரத்திலேயே போய்ச் சேர்ந்து விட்டதென்றால், அதற்குப் பிறகு அதை ‘இந்த நீர்’ ‘அந்த நீர்’ என்று சொல்ல முடியாது. அதுபோல் நாம் பகவானிடம் ஐக்கியமடைந்து விட்டால் அப்போது பகவான் நம்மைத் தனிப்பட்டவனாக வைத்துக் கொள்ளவே மாட்டான் இதற்கு ஓர் உதாரணம் சமுத்திரம் ஆகும். ஏனெனில் அது எல்லா நதிகளையும் ஐக்கியமடையச் செய்து வேற்றுமையில்லாமல் செய்துவிடுகிறது. பகவான் ஸர்வக்ஞன். தயை வடிவாக உள்ளவன். இன்ப வடிவாகியுமுள்ளவன். நமது ஸ்வரூபம் (அவனை விட) வேறுவிதமாயிருந்தால் பகவானாலேயும் நமக்கு ஒன்றும் செய்ய முடியாது, நாம் பகவானை விட்டுப் பிரிந்த பிறகுதான் நமக்கு இப்போதிருக்கும் கெட்ட நிலை வந்துவிட்டது. நாம் அதிகமாகப் பிரிந்துவிட்டால் இன்னும் கெட்டுப்போய் விடுவோம். பகவானிடம் ஐக்கியமடைந்தால் நன்மையை அடைவோம்” என்று உபதேசித்தார்.

இம்மாதிரி பகவத்பாதாள் எல்லாப் பக்கத்திலிருந்தும் உபதேசம் செய்தார். பகவத்பாதாள் அதிகமாகச் சஞ்சாரம் செய்தது மட்டுமல்லாமல் எல்லாருக்கும் உபதேசமும் கொடுத்துக்கொண்டிருந்தார்.
மனிதன் என்ன செய்ய வேண்டும்? மனிதன் கர்மாவில் எப்போதும் ஈடுபடுபவன்.

“ந ஹி கச்சித் க்ஷணமபி ஜாதுதிஷ்டத்யகர்மக்ருத் |”

(யாரும் ஒரு கணப்பொழுதும் செயலற்றிருப்பதில்லை) என்று பகவான் சொல்கிறார். எந்த மனிதனாலும் ஒரு கணம் கூடக் காரியம் செய்யாமலிருக்கமுடியாது. அவன் கனவு நிலையில் (மனத்தால்) ஏதாவது செய்துகொண்டிருப்பான். விழிப்பு நிலையில் ஏதாவது செய்துகொண்டிருப்பான். ஆழ்ந்த உறக்கத்தில் ஒன்றும் செய்வதில்லையென்றாலும் அந்நிலையை விட்டுவிட்டால் மனத்தில் ஏதாவது எண்ணம் வந்துகொண்டிருக்கும். பிறகு ஏதாவது செயல்கள் செய்துகொண்டுதானிருப்பான். ஆனாலும் ஆழ்-உறக்க நிலையில் பிராணனின் ஓட்டம் மட்டும் இருந்துகொண்டிருக்கிறது. செயல்கள்தான் பாபத்திற்குக் காரணமாக இருக்கின்றன. அவையே புண்ணியத்திற்கும் காரணமாயிருக்கின்றன. நாம் பகவானை நமஸ்காரம் செய்தால் நமக்குப் புண்ணியமும், சிரேயஸ்ஸும் கிடைக்கும். அதேசமயம், யாராவது ஒருவனைக் குறை சொன்னால் நமக்குப் பாபம் கிடைக்கும். ஒருவனுக்குச் சாஸ்திர அறிவுரைகளுக்கு இணங்க உபதேசம் செய்தோமானால் அது தர்மம் ஆகும். அதே சமயம் (கள்) குடிப்பதற்குப் பணம் கேட்கும் ஒருவனுக்குப் பணம் கொடுத்தால் அப்போது தர்மம் ஆகாது. எவனொருவன் நல்ல காரியங்கள் செய்கின்றானோ அவனுக்கு நாம் உதவி செய்தோமானால் அது நமக்குப் புண்ணியத்தைத் தரும். ஆனால் ஒருவனுக்கு இடையூறு செய்தோமானால் நமக்குப் பாபம் தான் கிடைக்கும்.

இவ்வாறு நம் ஜீவனத்தின் ஒவ்வொரு கணத்திலும் ஏதாவது ஒரு செயலைச் செய்து கொண்டுதானிருக்கிறோம். இதனால் புண்ணியத்தையும், பாபத்தையும் சேர்த்துக் கொண்டேயிருக்கிறோம். புண்ணியத்தைச் செய்து கொண்டு போனால் அது நன்மையையே தரும். மாறாகப் பாபத்தைச் செய்து கொண்டு போனால் அது தீமையையே தரும். அதைத் தடுப்பதற்கு வழி வேண்டும். பாபத்திற்கும், புண்ணியத்திற்கும் நிவிருத்தியில்லையென்றால் நமக்கு ஸம்சாரம் (பிறப்பும் இறப்பும்) இருந்து கொண்டேதானிருக்கும். அதனால் பாபம், புண்ணியம் இரண்டும் நமக்கு இடைஞ்சலையேதான் கொடுக்கின்றன. பாபங்களுக்காகப் பிராயச்சித்தங்களிருக்கின்றன. நாம், “என்ன பாபத்தைச் செய்கிறோம்: எதைச் செய்வதில்லை” என்று எண்ணிக் கொண்டுகூட இருக்கலாம்.

“அனிச்சயா(அ)பி ஸம்ஸ்ப்ருஷ்டோ தஹத்யேவ ஹி பாவக:”

(விரும்பாமல் தொட்டாலும் நெருப்பு நிச்சயம் சுட்டு விடுகிறது.)

அதைப்போல், எப்பேர்ப்பட்ட தீயவராக இருந்தாலும், பகவான் நாமா (பெயர்) நம்மைக் காப்பாற்றிவிடும். நெருப்பு என்று தெரிந்து கையை வைத்தாலும் தெரியாமல் கையை வைத்தாலும், நெருப்பு கையை எரித்துவிடத்தான் செய்யும். அக்னியின் இயல்பு என்னவென்றால், எந்தப் பொருள் அதனருகில் வருமோ அதைச் சுட்டுவிடும், அதேபோல் பகவானின் சுபாவம் என்னவென்றால்  எவர் பகவானின் நாமத்தைச் சொல்வாரோ, அவருடைய பாபத்தை அந்த நாமா நாசம் செய்துவிடும். ஆதலால் நாம் எந்தக் காரியத்தை எப்போது செய்துகொண்டிருந்தாலும் மனத்தால் மட்டும் பகவான் நாமாவை எப்போதும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்.அவ்வாறு செய்து வந்தால் நம் பாபம் கழிந்துவிடும். எப்படி மனத்தில் நாமாவைச் சொல்வது? எல்லாருக்கும் தாம் ஏதாவது ஒரு மந்திரத்தை - ஜபத்தைச் செய்துகொண்டு வந்தால் நல்லது என்ற ஆசை ஏற்படுகிறது. இம்மாதிரி நல்ல உபதேசம் கொடுப்பவர்கள் குறைவு. உபதேசம் கொடுப்பதற்குச் சிலபேர் கிடைத்தாலும் விதிக்கு அனுஸாரமாகக் கொடுப்பதில்லை. இம்மாதிரி நிலையில் நாம் என்ன செய்வது என்ற சந்தேகம் நமக்கு வரும்.
இதற்காக மந்திரம் ஒன்று இருக்கிறது. அது எப்பேர்ப்பட்ட மந்திரம்? எப்படி வேண்டுமோ அப்படி இந்த மந்திரத்தைச் சொல்லலாம். ஒருவன் புனிதமானவனானாலும், அவ்வாறு இல்லாவிட்டாலும், ஆசாரசீலனாயிருந்தாலும் இல்லாவிட்டாலும் அவன் அந்த மந்திரத்தைச் சொல்லலாம் என்று சொல்லியிருக்கிறது. அது என்ன மந்திரம்?

“ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே க்ருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண
ஹரே ஹரே”

என்ற மந்திரமேயாகும். இந்த நாமங்களை எல்லாரும் சொல்லலாம். இதற்கு நியமமே இல்லை. எப்போதும் தாராளமாகச் சொல்லிக்கொண்டேயிருக்கலாம். அவ்வாறு ஜபிப்பவனுக்கு பகவான் அனுக்ரஹம் செய்வான். அப்படிச் சொல்லிக் கொண்டுவந்தால் நாம் பகவானின் அருள்பெற்று புனிதமடைந்து ஜன்ம சாபல்யமடையலாம். ஆனால் சாமான்யமாக மனிதர்கள் என்ன செய்வார்கள்? சாப்பிடுவார்கள், தூங்குவார்கள், எங்கேயாவது சுற்றிக்கொண்டிருப்பார்கள். பிறகு ஒரு நாள் செத்துப்போய் விடுவார்கள். இவ்வாறுதான் பிராணிகளும் வாழ்கின்றன. இப்படியே நம் வாழ்வுமிருந்தால் நமக்கும் பிராணிகளுக்கும் என்ன வித்தியாசம்?

ஆகவே எப்போதும் பகவான் நாமாவைச் சொல்ல வேண்டும். பகவானுடைய ஏதோ ஓர் உருவத்தை - இராமருடையதோ, கிருஷ்ணருடையதோ அல்லது தேவியினுடைய உருவத்தையோ - ஏதாவது ஓர் உருவத்தை மனத்தில் வைத்துக் கொண்டு தியானம் செய்யவேண்டும். தியானம் செய்யும்போதும் பகவான் நாமாவைச் சொல்லிக்கொண்டேயிருக்கவேண்டும். அப்போது நிச்சயமாக நமது பாபங்கள் அழிந்துவிடும். சில சமயங்களில் சில காரியங்களை நாம் செய்ய வேண்டுமென்று நினைப்போம். ஆனால் செய்வதற்கு வேண்டிய பலம் இருப்பதில்லை. அப்போது நாம் என்ன செய்யவேண்டும்?

“புத்திர்பலம் யசோ தைர்யம் நிர்பயத்வமரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத்ஸ்மரணாத் பவேத் |”

(அறிவு, பலம், கீர்த்தி, தைரியம், பயமின்மை, ஆரோக்கியம், ஜடத்தன்மையில்லாமை, மற்றும் நாவன்மையும் ஆஞ்சனேயரை நினைப்பதனால் ஏற்படுகின்றன.)

நாம் ஒருவரும் பயத்தை விரும்புவதில்லை. நாம் பயமில்லாமல் இருக்க விரும்புகிறோம். அதற்காகத்தான் பகவானிடம் சரணமடைகின்றோம். நாம் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க விரும்புகிறோம். அதேபோல் பேசுவதில் சாமர்த்தியத்தைப்பெற விரும்புகிறோம். ஆகவே நாம் பகவான் ஆஞ்சனேயரை உபாசித்து அவருடைய பக்தர்களாக இருந்தால் அவரை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொண்டிருந்தால் - அவருடைய நாமாவை ஜபம்செய்து கொண்டிருந்தால் அவர் பிரசன்னமாகி நமக்கு வேண்டிய அனைத்தையும் அளிப்பார்: திட பக்தியையும் கொடுப்பார்.

ஹர நம: பார்வதீபதயே|
ஹர ஹர மஹாதேவ ||
ஜானகீகாந்தஸ்மரணம் |
ஜய ஜய ராம ராம ||