Friday 30 May 2014

பகவான் நமக்கு பூஜ்யனானவன்

பகவான் நமக்கு பூஜ்யனானவன்
நம்முடைய வாழ்க்கையில் சுகம், துக்கம் இரண்டும் சமிஸ்ரமாக இருக்கிறது. யாரும் பிறந்ததிலிருந்து கடைசி வரையிலும் சுகமாகவே இருந்தான் என்று சொல்ல முடியாது. அதேபோல் ஆயுசு முழுசும் துக்கத்திலேயே இருந்தான் என்றும் சொல்ல முடியாது. “சுகத்யானம் தரம் துக்கம் துக்கத்யானம் தரம் சுகம்” சுகத்துக்குப் பிறகு துக்கம், துக்கத்துக்குப் பிறகு சுகம்” இது மனுஷ்ய ஜீவனத்துலே ஒவ்வொருத்தனுடைய அனுபவத்துலே இருக்கக்கூடிய விஷயம். ஆனால் சுகம் வந்த சமயத்துலே எல்லோரும் சந்தோஷமாகவே இருப்போம். துக்கம் வந்த சமயத்துலே மட்டும் அந்த சந்தோஷமெல்லாம் எங்கே போகுமோ சொல்ல முடியாது. அவன் ஓர் அதி சாதாரணமான மனிதன் ஆகட்டும். ஒரு பெரிய சக்ரவர்த்தி ஆகட்டும். துக்கம் வந்தது என்று சொன்னால் அவனுடைய முகபாவமே மாறிப் போய் விடும். எவ்வளவு சக்தி இருந்தாலும் அது எதுவுமே அவனுடைய துக்கத்தைப் போக்குவதற்கு அந்த சமயத்துலே உபயோகத்துக்கு வராது. நாம் பார்த்துக் கொண்டே இருக்கிறோம். அல்லது அவர் ரொம்ப ஐஸ்வர்யசாலி அதனால் அவருக்குத் துக்கம் வராது என்று சொல்ல முடியுமா? பணக்காரனானால் அவனுக்குத் துக்கமே இல்லை என்று சொல்ல முடியுமா? அல்லது துக்கம் வந்தாலும் அவனுக்கு பணம் இருக்கறதுனாலே அவனை ஒன்றும் செய்யாது என்று சொல்ல முடியுமா? ஒண்ணும் சொல்ல முடியாது. அந்த சமயத்துலே நமக்கு என்ன தோன்றும்? இந்த துக்கத்தை யாரிடம் நாம் தெரிவித்துக் கொண்டால் இது நீங்கும் என்கிற ஒரே ப்ரச்னை நம் மனத்தில் உத்பவிக்கும். அதை யாரிடத்தில் தெரிவித்துக் கொள்ள வேண்டும்? நம் போல் சாதாரணமான மனிதனிடம் அதைத் தெரிவிக்கப் போனால் அவன் சொல்லுவான்.” நீ என்னவோ ஒரு துக்கம் என்னிடம் சொல்ல வந்திருக்கிறாய். அதைவிடப் பெரிய துக்கம் எனக்கு இருக்கிறது. அதை உன்னிடம் நான் சொல்கிறேன்” என்பான். என்னமோ ரொம்ப வயிற்று வலி வந்திருக்கிறது என்று சொல்லி ஒருத்தன் ஒரு டாக்டரிடம் போனான். அங்கே டாக்டர் சொன்னார், “நான் ஒரு மாசமாக வயிற்றுவலி அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன் அப்பா! நான் இந்த வயிற்றுவலிக்கு என்ன பண்ணனும்னு தெரியாமல் விழித்துக் கொண்டு இருக்கிறேன்” என்று சொன்னாராம். அப்போது என்ன பிரயோஜனம்? அதற்கு ஓர் இடத்துலே ஒரு மகான் சொன்னார்,

“பவவிரிதீஷ புது விஷதமன: மானஸாத் பிஷகே ச சங்கரசேவ்ய:
பத மோ தைவ்யோ விஷகித யங்கிலகனமே ஸ்ருதி ஸ்வயம் ப்ரா:

இது எல்லாவற்றுக்கும் வைத்யர், பெரிய வைத்யர் ஒருத்தர் இருக்கார். வேதமே அந்த வைத்யரைப் பற்றிச் சொல்கிறது.

“அத்ய போசததி வக்தா ப்ரதமோ தைவ்யோ விஷக்”
ப்ரதமோ தைவ்யோ விஷகித யங்கில ஜனதி ஸ்ருதி ஸ்வயம் ப்ரா

நாம் ஸ்ருதி, வேதம் என்று சொன்னால் “தாயார்” மாதிரி நினைத்துக் கொண்டு இருக்கிறோம். உலகத்துலே எந்த வ்யக்திக்கும் அவனுடைய பரிபூர்ணமான ஸ்ரேயஸை எப்போதும் விரும்பக் கூடியவள் தாயார் ஒருத்திதான். அதற்கு அப்புறம்தான் மீதிப் பேர் எல்லோருமே. அதுதான் பகவத் பாதாள் ஓர் இடத்திலே சொன்னார். “கு புத்ரோ ஜாகே தத் க்வசித பிகுவா தா கதமபி”
பையன் எவ்வளவு கெட்டுப் போனாலும் தாயார் மட்டும் அவன் மேல் ப்ரீதி வைத்துக் கொண்டே இருப்பாள். அதனால்தான் தாயார் என்பவளுக்கு அவ்வளவு மகத்துவம் நம்முடைய சம்ஸ்க்ருதியிலே. நம்முடைய பாரதீய பரம்பரையிலே. எப்படி தாயார் என்பவள் தன்னுடைய புத்ரனுடைய ஹிதத்தைத்தான் எப்போதும் விரும்புவாளோ வேதமும் அப்பேர்ப்பட்டது. நம்முடைய ஹிதத்தைச் சொல்வதற்காகத்தான் வேதம் இருக்கிறது. அதனாலே “யஸ்கில ஜனனீ ஸ்ருதி: “வேத மாதா என்ன சொன்னாள், “ப்ரதமோ தைவ்யோ விபுக்” ஆதி வைத்யன், எல்லோருக்கும் வைத்யன், அந்த பகவான். அதனால் ஆஸ்ரயிச்சால் அவரை ஆஸ்ரயிக்கணும். அந்த பகவத் சந்நிதியிலே நம்முடைய துக்கத்தைத் தெரிவித்துக் கொண்டால் அந்த பகவான் நிவாரணம் செய்வான். சாஸ்த்ரத்திலே ஒரு நியாயம் உண்டு

 “நஹி பிக்ஷுகோ பிஹுகான் ந்யாத தே ஹிதி அன் யஸ் மின் லாதரி”

ஒரு பிச்சைக்காரன் பிச்சை வேண்டி வந்தால் பணக்காரனிடம் போகணுமே தவிர இன்னொரு பிச்சைக்காரனிடம் போய்ப் பிச்சை கேட்டால் அவன் என்ன கொடுப்பான்? “நாம் இரண்டு பேரும் சேர்ந்து புறப்படுவோம் பிச்சைக்கு என்பான். அதேபோல் நம்முடைய துக்கத்தைப் போக்குவதற்கு எந்த துக்கத்தோடும் சம்பந்தம் இல்லாதவனிடம் போகணுமே தவிர இன்னொரு துக்கிதமானவனிடம் போனால் என்ன ஆகும்? அதனால் அப்பேர்ப்பட்ட துக்க சம்பந்தம் ஒன்றும் இல்லாதவன் என்று சொன்னால் பரமேஸ்வரன் ஒருத்தன்தான். வேறு யாரும் இல்லை. அதனால் நம்முடைய துக்கத்தை நீக்கக் கூடிய சக்தி பகவானுக்குத்தான் இருக்கிறது. வேறு யாருக்கும் இல்லை. ஆனால் நம்முடைய மனசு எப்படி போகிறது என்று சொன்னால் அந்த பகவான் பக்கம்தான் போகிறது. நாம் நினைப்பது யாரோ ஒரு பெரிய மனுஷன் ஒரு பெரிய அதிகாரத்துலே இருக்கிறவன் அவனிடம் போனால் நம்முடைய எல்லா இஷ்டங்களும் சித்திக்கும் என்று நினைக்கிறோம். ஆனால் ஒரு பெரியவர் சொன்னார், நம்முடைய இந்த பாரத நாட்டிலே எத்தனை மகான்கள் பிறக்கலை, எத்தனை பெரியவர்கள் பிறக்கலை, எத்தனை பக்தர்கள் பிறக்கலை, எத்தனை வேதாந்திகள் பிறக்கலை, அதிலும் ஒருவர் சொன்னார் நீங்கள் யாரை ஆஸ்ரயிக்கப் போகிறீர்கள் (உங்கள் ஜீவனத்துக்காக இன்னொருவர் சொன்னார் எத்தனை ராஜாக்கள் இல்லை. ஒரு ராஜாவிடம் போனால் போதுமே நம்முடைய ஜீவனம் நடக்கும். அப்படி என்று. அன்றைக்கு அந்த பக்தர் சொன்னார். நீங்கள் என்னவோ அப்படி சொல்கிறீர்கள். எனக்கு அப்படி படலையே நான் என்ன பண்ணட்டும்? உங்களுக்கு என்ன பட்டது? அப்போது அவர் சொன்னார் :

“க்ஷோணீ கோண ச தாம் ச பாலன கலா துர்வார கர்வான லக்ஷீ
ஜக்ஷீ ஜீத்நோந்த்ர நரேந்த்ர சாதுர கனா தன்யான் ன மன்யா மஹே”
தேவம் சேவிது மேவ நிஸ்சினு மஹேயோசௌ
தயாளு புரா கானா முஷ்டி முசே குசேல முனயே
தத்வே த வித்வே சதாம்”

எந்த ராஜாக்களைப் போய் ஆஸ்ரயிக்கச் சொல்கிறீர்கள்? இந்த ராஜாக்களுடைய யோக்யதை என்ன? இவர்கள் நமக்கு என்ன கொடுப்பார்கள்? அவர்கள் எப்படி இருக்கிறார்கள்?

“க்ஷோணீ கோண ச தாம் ச பாலன கலா
துர்வார கர்வான லக்ஷீப்யம்

அவர்கள் அதிகாரம் இருக்கிற பூபாகம் எவ்வளவு? இந்த அதி விசாலமான பூமண்டலத்துலே ஒரு மூலையிலே ஓர் அம்சம் இவருடைய அதிகாரத்துக்கு உட்பட்டு இருக்கிறது. கேவலம் அது மாத்ரத்திலேயே தன்னை விட்டால் யாருமில்லை, தனக்கு சமானமானவன் யாருமில்லை என்று சொல்லி கர்வப்பட்டுக் கொண்டிருக்கிறார்களே அவர்களையா ஆஸ்ரயிக்கச் சொல்கிறீர்கள்? அவர்களுக்கு இருக்கிறது எவ்வளவு? அவர்கள் நமக்குக் கொடுக்கிறது எவ்வளவு? அவர்களுக்கு எவ்வளவு இருந்தாலும் இந்த விசாலமான பூமண்டலத்தைப் பார்த்தால் அவர்களுடைய அதிகாரம் அத்யல்பம். ஆனால் அவர்களுடைய நடவடிக்கை எப்படி இருக்கிறது என்று கேட்கிறீர்களா?

“சௌஜன்யாம் பு மருஸ்தவி” “சுஜன பாலேக் ய க்ஷு க்ஷீவிருக்தி:
புனக்யோ ஸ்த்னா க்ருஷ்ண சதுர்க்தஸி
சரளதா யோகஸ்ய புஸ்சத்சடா
யபிரேஷா ஸதுராத்தா கவி வரை:
ராஜா வயி யவ்யதே ஏதாம் சூலினி
பக்தி மாத்ரசுலஜே ஏவாக்ய கௌசலம்”

 ஐயோ! இந்த ராஜாக்களைப் பற்றிக் கேட்கிறீர்களா? அங்கே ‘சௌஜன்யம்’ என்பது கொஞ்சமும் கிடையாது. “சௌஜன்யம்” என்று சொன்னால் நாம் ஏதாவது ஒரு வார்த்தை சொன்னால் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு ஸ்வபாவம் வேண்டுமே அது கிடையவே கிடையாது. நாம் எதிரில் வரும்போதே ஏண்டா இவன் வந்தான் என்றே நினைத்துக் கொண்டு இருக்கிறார்களே தவிர என்னவோ இவர் படித்தவர் ஏதோ ஒரு நல்ல வார்த்தை சொல்வதற்கு வந்திருக்கிறார். அதைக் கேட்போம் என்கிற “சௌஜன்யமே” கிடையாது. இதை வைத்துத்தான் சொன்னார்கள். “நல்ல வார்த்தை யாருக்கு சொல்வது ஐயா! உலகத்துலே, ஏதாவது ஒரு நல்ல வார்த்தை சொல்லுவோம் என்றால் யாருமே கிடைக்க மாட்டேன் என்கிறார்களே?” என்ன இப்படி சொல்றீர், இத்தனை பேர் இருக்கிறபோது? என்றால் பண்டிதர்களுக்கு சொல்லப் போனால் “போத்தா ரோமச அக்ஷரக்ரஸ்தா: அவர்களுக்கு சொன்னால் இவன் யார் நமக்கு சொல்றது? அட போய்யா! உன்னைவிட நிறைய எனக்குத் தெரியும். ஆஸ்ரயிக்கறது ஒண்ணும் கிடையாது. ஆனால் நாம் அவர்களிடம் சொல்லப் போனால் உன்னை விட நிறையத் தெரியும் என்று சொல்கிறார்கள் அவர்கள். அல்லது ராஜாக்களிடம் சொல்லப் போனோம் என்றால் “அதெல்லாம் கேட்க எனக்கு நேரம் இல்லையே. நீங்கள் இப்போது போங்களேன்” என்பார். இனி யாருக்கு சொல்லணும்? மீதிப்பேர் யாருக்காவது சொல்லணுமானால் நாம் அவ்வளவும் சொல்வதைக் கேட்டுவிட்டு அந்த ஐயா என்ன சொன்னாரோ எனக்குப் புரியவே இல்லை! என்பானாம். கடைசியில் என்னவெல்லாமோ சொன்னார் ஐயா! எனக்கு மட்டும் ஒண்ணும் புரியவில்லை. அப்போது யாரிடம் சொல்லட்டும் என்றார். அதனால் இந்த ராஜாக்கள் “சௌஜன்யம்” என்பது கொஞ்சம் கூட கிடையாது. ஏதாவது சத்குணங்கள் இருக்கிறதா? இருக்கிறது. க்ருஷ்ண பக்ஷத்து சதுர்த்தசி அன்றைக்கு சந்திரனுடைய வெளிச்சம் எவ்வளவு இருக்கிறதோ அவ்வளவு சத்குணங்கள் இருக்கிறது. அமாவாஸைக்கு முதல்நாள் “சந்த்ரிகை” எவ்வளவு இருக்கிறதோ அவ்வளவு சத்குணங்கள் இருக்கிறதாம். “புனக்யோத் ஸ்னா க்ருஷ்ண சதுர்த்தஸி” சரளதா யோகஸ்ய புத்யத்சடா” என்ன ஒரு ருஜுவான அர்த்தம் இருக்கிறதோ ருஜுவான அர்த்தம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் மனசுலே என்ன நினைக்கிறானோ அதை வாயிலே சொல்லணும். அப்படியே செய்யணும். அப்படி இருந்தால் அவனுடைய வர்த்தனம் ருஜுவாக இருக்கிறது, நேர்வழி என்று அர்த்தம். அது ஏதாவது இருக்கிறதா என் கேட்டால் ஸ்ப்ய புஸ்யஸ்சடா” நாய் வால் எவ்வளவு நேரா இருக்கிறதோ அவ்வளவு நேர்வழி அவர்களுக்கு. இப்படி இருந்தாலும் இந்தக் கவிகளெல்லாம் இந்த ப்ரபுக்களுக்கு இல்லாத குணங்களை எல்லாம் சொல்லி அவர்களைப் புகழ்ந்து கொண்டு இருக்கிறார்களே. நிஜமாக அவர்களுடைய அந்த வாக்கை பகவானை ஸ்துதிக்கறதுக்கு உபயோகித்தால் அவர்கள் மோக்ஷத்தை அடைய மாட்டார்களா? ஆனால் அப்படிப்பட்ட ராஜாக்களை என்னை சேவிக்க சொல்றயாப்பா? நான் அங்கு போக மனசில்லை. “ஷிப்ய ஷித்ர நரேந்த்ர ஜாது ரசனா தன்யாம் நமன்யா மஹி”


“பின்னே உங்களுக்கு யாரிடம் போகணும்னு இருக்கு? அதையாவது சொல்லுங்கோளேன்.”

“நாங்க நினைக்கிறோம் ஒரு மகானிடம் போகணும் என்கிற எண்ணம் இருக்கு எங்களுக்கு”

“அது என்ன ஓய்! அவ்வளவு பெரிய மஹான் யாரு?

“தேவம் ஸ்தீவிதுமே வ நிஸ்சின் மஹே” யாரப்பா அந்த மஹான்
“யோசௌ தயாளு புராகானா முஷ்டி முசே
குசேல முனயே தத்தேத்ம வித்தே சதாம்”

“எங்க மஹான் ப்ரபு ஒருத்தர் இருக்கார். அவர் எப்பேர்ப்பட்டவர் என்று கேட்கிறீர்களா? ஒரு முறை ஸ்ரீமத் பாகவதத்தைப் புரட்டிப் பாருங்கள். “குசேலோபாக்யானத்தை” குசேலன் ஒரு தரித்ர ப்ராமணன். நல்ல ஆசாரவான். நன்கு படித்தவன். அவ்வளவுதான். ஐஸ்வர்யம் ஒண்ணும் கிடையாது. கிழிசல் துணி. வீட்டிலே சாப்பிடுவதற்கு மட்டும் நிறைய குழந்தைகள் இருந்தன. அவர்களுக்கு என்ன அவர் கொடுப்பது என்பது தெரியவில்லை. எப்படியோ காலம் போய்க் கொண்டு இருந்தது. ஒரோரு நாள் போவதே ரொம்பக் கஷ்டமாக இருந்தது. அவருடைய அதிர்ஷ்டம் சிறு வயசுலே க்ருஷ்ண பரமாத்மாவும் அவரும் சேர்ந்து படித்த ஒரு விஷயம். அதுதான் அவருக்கு இருந்த ஒரேயோர் அதிர்ஷ்டம். வேறொன்றுமில்லை. அதை ஞாபகப்படுத்தி அந்த குசேலருடைய சம்சாரம் “உங்க நண்பர் இருக்காரே க்ருஷ்ணர்! அவர் மஹான் ஆச்சே! அவரிடம் போகக்கூடாதா நீங்கள்? அவரை ஏதாவது கேட்கக் கூடாதா?” என்றாள். அது சரி எப்படி போகட்டும். “தரித்ர ஹஸ்தேயே நோபேயா ராஜானாம் தைவதம் குரு” என்று இருக்கிறது.

“ராஜா சந்நிதிக்கும், தெய்வ சந்நிதிக்கும், குருவினுடைய சந்நிதிக்கும், பகவத் சந்நிதிக்கும் வெறும் கையோடு போகக் கூடாது என்று சாஸ்த்ரம். அவர் என்னதான் என்னுடைய சகவாசி என்று இருந்தாலும் அவர் பகவான். நான் மனிதன். அவரிடம் எப்படி நான் வெறும் கையோடு போவது?” என்பது அவர் யோசனையிலே இருந்த சமயத்துலே அந்த அம்மாவுக்கு எங்கேயோ ஒரு மூலையிலே இருந்த ஒரு பிடி அவல் கிடைத்தது. பகவானுக்கு, வந்து நாம் எவ்வளவு சமர்ப்பிக்கிறோம் என்கிறது இல்லை அவருடைய ப்ரச்னை. அப்படி சமர்ப்பிக்கும்போது நம்முடைய உள்ளம் எப்படி இருக்கிறது என்பதைத்தான் அவர் பார்ப்பார். நம்முடைய உள்ளத்தைப் பார்க்கிறாரே தவிர வெளியில் நாம் அவருக்கு சமர்ப்பிக்கக்கூடிய பதார்த்தங்கள் எவ்வளவு என்பதில் இல்லை. நாம் அவரை ஸ்தோத்ரம் பண்ணுகிறபோது ரொம்ப நன்றாக ஜாகர்ணசுத்தியாக பேசிக்கொண்டு இருக்கிறோமா அதை பகவான் பார்க்க மாட்டார். இதற்கு ஓர் இடத்துலே ஒரு சின்னக்கதை சொல்வார்கள். கேரளத்துலே நாராயண பட்டத்ரி எல்லோருக்கும் தெரியும். “நாராயணீயத்தைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். ‘நாராயணீயம்’ தெரியாதவர்களே கிடையாது. ‘நாராயணீயம்’ எழுதின ‘பட்டத்ரி’ மகாவித்வான். இன்னொரு கவி அந்த குருவாயூரப்பன் பேரில் ஒரு ஸ்தோத்ரம் எழுதி இருக்கிறார் போல் இருக்கு. அவர் வந்து பட்டத்ரியிடம் காட்டினாராம். என்ன எல்லாம் தப்புத் தப்பாக இருக்கு என்று சொல்லிவிட்டாராம் பட்டத்ரி. அப்போது அவருக்கு ரொம்ப மனசுக்கு வேதனை ஆகிவிட்டது. பகவான் சந்நிதியிலே போய் அழுதுகொண்டே உட்கார்ந்திருந்தாராம். அப்போது பட்டத்ரியும் அங்கே இருந்தாராம். பகவான் ப்ரத்யக்ஷம் ஆனார். அந்த பக்தன் எழுதிய கவித்வத்தை பஹு சந்தோஷமாக ஸ்வீகரிச்சார். அப்போது பட்டத்ரி சொன்னாராம், “அது எப்படி அவருடைய கவித்வம் உங்களுக்குப் பிடித்தது? அதைச் செய்ய விபக்தியே கிடையாது.” என்று சொன்னபோது பகவான் சொன்னானாம், விபக்தி இல்லாவிட்டாலும் பக்தி நன்றாக உண்டு. “விபக்தி நன்றாக இல்லாவிட்டாலும் பக்தி பூர்ணமாக உண்டு. அது போதும் எனக்கு” என்றார். அதனால் பகவான் அபேக்ஷிக்கிறது நம்முடைய பக்தி. பகவத் கீதையிலே பகவான் சொன்னது எல்லோருக்கும் தெரியும். “பத்ரம்புஷ்பம், பலம் தோயம் யோமே பக்த்யா ப்ரயச்சதி”

“எவன் பக்தியோடு எனக்குத் தருவானோ அதை நான் ஸ்வீகரிப்பேன்.” என்றார் பகவான். அந்த பக்தி என்பது இல்லாமல் வெறும் ஆடம்பரத்துக்காகவோ பத்துபேர் பார்க்கட்டும் என்பதற்காகவோ நாம் என்ன செய்தாலும் அது பகவானுக்குப் பிடிக்காது. அதனால் அந்தக் குசேலன் அந்த ஒரு பிடி அவலை பரம பக்தியோடு அந்த பகவானுக்கு சமர்ப்பித்தான். பகவான் வந்து அவனுக்கு குபேர ஐஸ்வர்யத்தைக் கொடுத்தான். “கானமுஷ்டி முசேகுசேலன் முநயே தத்தேத்ம வித்தே ஸராம்” அப்பேர்ப்பட்ட மஹான் ப்ரபுவை சேவிக்க நாம் விரும்புகிறோம். இனிமேல் யாரையும் சேவிக்க எங்களுக்கு மனசு வரவில்லை. நாங்கள் என்ன பண்ணட்டும்?” என்றார். அதனால் நாம் நமக்கு துக்கம் வந்தால் யாரை ஆஸ்ரயிக்கணும்? அந்த பகவானை ஆஸ்ரயிக்கணும். அந்த பகவானுக்கு இருக்கக் கூடிய மஹிமை அபாரமானது, என்பதுதான் நம்முடைய சித்தாந்தம். நம்முடைய ஸநாதன தர்மத்துலே நம்முடைய பாரதீய பரம்பரையிலே பகவான் என்கிற ஒரு தத்வம் அத்யந்த ப்ரமுகமான ஒரு தத்வம். அது மகத்துவமான தத்வம். அதை ஏதாவது மறந்து நாம் வ்யவகாரம் பண்ணினோமோ நமக்கு மானவத்வமே கிடையாது. பசுக்கள் இருக்கின்றன. அவற்றுக்கு பகவான் என்றால் தெரியாது. மனுஷன் என்றால் தெரியாது. நாமும் அந்த மாதிரி இருந்தால் அந்த நாலுகால் பசுவுக்கும் என்ன வித்யாசம்? அதனால் நம்முடைய பரம்பரையிலே நம்முடைய சம்ஸ்க்ருதியிலே பகவான் என்கிற ஒரு தத்வம் அத்யந்த, மிக ப்ரமுகமான ஒரு தத்வம். அந்த தத்வத்தை நாம் அங்கீகரிக்கத்தான் வேண்டும். அதை அங்கீகரிக்காமல் இருந்தால் மிகமிக அபராதம்.

அநேகம் பேர் கேட்டார்கள், “பகவான் அனுக்ரஹம் பண்றான் என்று நீங்கள் சொல்றேளே எப்படி அனுக்ரஹம் பண்றான்? நம் எதிரில் என்னவோ அவன் வந்தது கிடையாது. நாம் எத்தனையோ முறை கோவிலுக்குப் போய் இருக்கிறோம் தர்சனம் செய்திருக்கிறோம், தேங்காய் உடைத்தோம். எல்லாம் பண்ணினோம். நம் எதிரில் வந்து அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை.” ஆமா அப்படி அவர் உங்கள் எதிரில் வந்து ஒரு வார்த்தை சொன்னால் நீங்கள் சும்மா இருப்பீர்களா? சாதாரணமான ஒரு மினிஸ்டர் உங்கள் எதிரில் வந்தாலேயே இங்கே பாலம் போட்டுக் கொடு அல்லது இதைப் போட்டுக் கொடு, அதைப் போட்டுக் கொடு என்று அவர் ப்ராணனை வாங்கறேள். இனி அப்பேர்ப்பட்ட சராசர ஜகத்துக்கு பொதுவான பகவான் உங்கள் எதிரில் வந்தால் நீங்கள் சும்மா இருப்பீர்களா? அதனால் உங்கள் எதிரில் வரவே மாட்டான். அப்போது பின்னே பகவான் அனுக்ரஹம் பண்றான் என்பதற்கு என்ன அர்த்தம் சொல்லுங்கோ. அதற்கு முன்னோர்கள் சொன்னார்கள்

நதேவா தண்டமாதாய ரக்ஷந்தி பசுபால வது
யம்மி ரக்ஷிதி மிச்சந்தி புத்யா ஸஸ்யோஜயந்தி தம்
நதேவா தண்டமாதாய ரக்ஷந்தி பசுபால பக்யம்”

என்ன பகவான் நம்மைக் காப்பாத்தறான் காப்பாத்தறான் என்று சொன்னால் அந்த ஆடுமேய்ப்பவன் 
ஆடுகளை எல்லாம் ஆடு மேய்த்துக்கொண்டு கம்புகளை எல்லாம் வைத்துக் கொண்டு போய்க் கொண்டு இருக்கிறானே அப்படி என்று நினைக்கிறீர்களா? அப்படி கிடையாது. “யம் ஹி ரஹிஸ்தி மிச்சந்தி புக்யா ஸம்போஜிதம் இதம்”

பகவான் யாரை ரக்ஷிக்கணும் என்று நினைக்கிறானோ அவனுடைய புத்தியில் ஒரு ப்ரேரணையைத் தருகிறான். நாம் எந்தக் கார்யம் செய்வதற்கும் புத்தியில் ஒரு ப்ரேரணை வந்தால்தானே செய்ய முடியும்? எந்த ஒரு ப்ரேரணை மனத்தில் வரவில்லை என்று சொன்னால் கார்யத்தைச் செய்ய முடியுமா? சாஸ்த்ரத்திலே எப்படி வேலை நடக்கிறது என்பதற்கு ஒரு ப்ரகரியை சொன்னார்கள். “ஜானாதி இச்சதி யததே தபக்ரியா” முதலில் அதைப்பற்றி ஓர் அறிவு வரணும். அப்புறம் செய்யணும் என்கிற ஒரு விருப்பம் வரணும் மனசுலே. அப்புறம் ஒரு முயற்சி எடுக்கணும். அப்புறம் கார்யம் நடக்கணும். முதலில் அந்த ‘ஜானாதி’ என்பது உண்டே, “இச்சதி” என்பது உண்டே அது யாரால் வருது என்று நினைக்கிறீர்கள்? அது அவனாலேதான் வரது. அது ஒண்ணு அந்த ப்ரேரணை என்ற ஒன்று அவனால் வரவில்லை என்று சொன்னால் நமக்கு என்ன ஆகிவிடும் என்பதை யோசனை கூடப் பண்ணமுடியாது. நமக்கு நல்ல ப்ரேரணையைக் கொடுக்கறதே, பகவான் நம்மைக் காப்பாத்தறது என்கிற வார்த்தைக்கு அர்த்தம். நாம் பகவானுடைய அனுக்ரஹத்தை, பெறுவோம் என்பதற்கு அர்த்தம். பகவான் நமக்குச் சரியான ப்ரேரணையைத் தரட்டும் என்பது அர்த்தம்.

அதனால் பகவானுடைய அனுக்ரஹம் இல்லாமல் நம்முடைய ஜீவனத்தை சரியான வழியில் கொண்டுபோக முடியவே முடியாது. அந்த பகவத் தத்வம் அத்யந்த முக்யமானது. அதற்கு அப்புறம் ஒரு பெரிய கேள்வி, அநேகம் பேருக்கு இருக்கு. நீங்கள் சொல்றேள் பகவான் என்று. ஆனால் பகவான்கள் எத்தனை? ஒன்றா, இரண்டா, பத்தா, ஆயிரமா தெரியவில்லை. எங்கே பார்த்தாலும் கோவில். ஒரு கோவிலில் சுப்ரமண்யர். ஒரு கோவிலில் கணபதி. இன்னொரு கோவிலில் சிவன். இன்னொரு கோவிலில் பெருமாள். இன்னொரு கோவிலில் தேவி. யாரை நம்புவது, யாரை விடுவது. யாரை ஆஸ்ரயிக்கணும். இந்தக் கோவிலுக்குப் போனால் அந்தக் கோவிலுக்குப் போகலை என்று அந்த பகவானுக்கு என்ன கோபம் வருமோ? நானோ பிள்ளையார் கோவிலுக்குப் போய்க் கொண்டு இருக்கிறேன். முருகனுக்கு என்ன கோபம் வருமோ தெரியாது. முருகன் கோவிலுக்குப் போய்க் கொண்டு இருக்கேன். சிவபெருமானுக்கு என்ன கோபம் வருமோ தெரியாது என்று அநேகம் பேருக்கு ஒரு கேள்வி. அதனால் மூலமாக அவர்கள் கேட்கும் கேள்வி உங்கள் ஸநாதன தர்மத்துலே பகவான் எத்தனை பேர்? என்பது. நான் சொன்னேன், எங்க ஸநாதன தர்மம் வேதங்களின் ப்ரதிவாதமானது என்பதை முதலில் சொன்னேனா இல்லையா? வேதத்தை ஜனனி என்றே ஆரம்பித்திருக்கிறோம். தாயார் மாதிரி என்று சொல்லி அந்த வேதமே நமக்கு இந்த ப்ரச்னைக்கு பதில் கொடுக்கிறது. என்ன பதில் 

“எபியோ தேவஸ் ஸர்வ பூதேஷு மூட: ஸர்வம் வ்யாபி ஸர்வ பூதாம்”

பல பெயர்களைக் கொண்டவர்கள் ஆனாலும் அவர்கள் எல்லோருக்கும் கம்யமான தத்துவம் ஒன்றுதான். அதேதான் பகவத்பாத சங்கரர் சொல்கிறார். பெயர்கள் அநேகம். எத்தனை பெயர்கள் வேண்டுமானாலும் பகவானுக்கு நாம் சொல்ல முடியும். பகவானுக்கு ஸஹஸ்ரநாமங்கள் இருக்கின்றன. “அந்த” நாமங்களாலேயும் பகவானைப் பூஜை பண்ணலாம். சஹஸ்ரநாமங்கள் சொல்லி பகவானைப் பூஜை பண்ணுவதால் 1000 பகவான்கள் இருக்கிறார் என்று சொல்வது நியாயமா? நியாயம் இல்லையே! இந்த நாமங்கல் எல்லாம் ஒரே பகவானைக் குறிப்பதுதான் என்று ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த ரூபங்கள் எல்லாம், இந்த உருவங்கள் எல்லாம் ஒரே பகவான் ஸ்வீகரிச்சது. அவருக்கு அது முடியும். நமக்கு அது முடியாது. முடிந்தால் நாமும் எத்தனையோ அவதாரங்கள் எடுக்கலாம் போல் இருக்கிறது. நமக்கு அது சாத்யம் இல்லையே! அவனுக்கு அது சாத்யம். பகவான் வந்து பகவத் கீதையிலே சொன்னார், “என்னுடைய மாயையை வசப்படுத்திக் கொண்டு நான் எவ்வளவு ரூபங்களை வேணுமானாலும் எடுத்துக் கொள்வேன்” என்று சொன்னார். அதனாலே பகவத் தத்வத்திலே என்றைக்கும் நமக்கு அவிஸ்வாசம் இருக்கக் கூடாது. இந்த பகவானுடைய ரூப பேதங்கள் எவ்வளவு இருந்தாலும் வஸ்து தத்வத்திலே மட்டும் பேதம் இல்லை. அது ஒரே பரமார்த்த வஸ்து. அது ஒரே பரமார்த்த தத்வம். இந்த ஸித்தாந்தம் நம் பரம்பரையாக பாரதீயர்களுக்கு வந்திருக்கக் கூடிய சித்தாந்தம்.

இந்த தத்வம் நாம் அநாதியாக அனுசரித்துக் கொண்டு வந்த தத்வம். இதை யாரோ இன்றைக்கோ நேற்றைக்கோ யாரோ கண்டுபிடித்தது என்பது கிடையாது. அனாதியாக நாம் இந்த தத்வத்தை அனுசரித்துக்கொண்டு வருகிறோம். இதன் அனுசாரமாகத்தான் நம்முடைய வாழ்க்கையை நடத்திக் கொண்டு வந்து சொல்லிக்கொண்டிருக்கிறோம். அதனால் கணபதிக்கு பூஜை செய்தாலும் சிவனுக்கு பூஜை செய்தாலும் ஒரே பகவானுக்குத்தான் அது போகும். நமக்கு அந்த சமயத்துலே பேத புத்தி இருக்கக் கூடாது. அதைவிட இது பெரிசு இதைவிட அது பெரிசு என்கிற புத்தி மட்டும் இருக்கக் கூடாது என்பதுதான் இங்கே ஒரு நிபந்தனை. ஒரு நியமம். இது எல்லாம் ஒரே பகவானுடைய ஆகாரம் ஆனதனாலே எல்லாம் பூஜாரங்கம். நம்முடைய யோக்யதை, நம்முடைய ருசி, அதை அனுசரித்து எந்த மூர்த்தியை வேணுமானாலும் நாம் உபாசிக்கலாம். அதனால் ஸ்ரேயஸை அடையலாம் என்பது சாஸ்த்ர சித்தாந்தம். இந்த சித்தாந்தத்தை நாம் எப்போதும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டு இருக்கவேண்டும். அதுபோல் ஆசரணம் செய்ய வேண்டும். நம்முடைய மனத்திலே அநேகமான ஒரு வீண் சமயம். அநேக சமயத்தை வீணாக நாம் போக்கிக் கொண்டே இருப்போம். ஒரு வேலையும் இருக்காது. வீண் பேச்சு பேசுவதோ அல்லது வ்யர்த்தமான கார்யங்களைச் செய்வதோ செய்துகொண்டு இருப்போம். அதே சமயத்துலே அந்த வீண் பேச்சு பேசாமல் பகவானுடைய நாமத்தையே உச்சரித்தால் அது பவித்ரமானது இல்லையா? அந்த சமயம் சார்த்தகம் ஆகும் அல்லவா? அதே போல் ப்ரதி தினமும் சிறிது நேரமாவது பகவத் ஸந்நிதியில் உட்கார்ந்து போனால் அது ஒரு பெரிய பவித்ரமான கார்யம் அல்லவா? பகவானுக்கு ஒரு பெரிய கைங்கர்யம் நடக்கிற போது நம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நாம் அங்கே ஒரு சேவையைச் செய்தால் அது ஒரு பவித்ரமான கார்யம் அல்லவா? இந்த கர்தவ்ய ப்ரக்ஞை நமக்கு எப்போதும் இருக்க வேண்டும். அது போல் நம்முடைய வாழ்க்கையை நடத்தவேண்டும். இந்த பாவம் எல்லா ஆஸ்திகர்களின் மனங்களிலும் உண்டாகட்டும். பகவத் தத்வம் விஷயத்தில் யாருக்கும் சம்சயம் இருக்கவே வேண்டாம். இந்த சராசர ஜெகனான பகவான் நமக்கு ஸர்வதா பார்ச்யனானவன். பூஜ்யனானவன். இத்தனை ஆயிரக்கணக்கான வருஷங்களிலும் நம் முன்னோர்கள் பகவானுக்கு இந்த மாதிரி விசாலமான மகத்தான தேவாலயங்களை நிர்மாணம் செய்து அந்த பகவானின் பூஜாதி கைங்கர்யங்கள் யதாசக்தியாக நடக்கட்டும் என்பதற்காக அநேக விதமான வ்யவஸ்தைகளைச் செய்தார்களே அவர்களுக்கு ஒண்ணும் புத்தி இல்லையா? ஒண்ணும் தெரியாமலே இவ்வளவு காரியங்களை நடத்தி விட்டார்களா? அப்படியேற்பட்ட ஓர் அவிவேகமான நிச்சயத்துக்கு நாம் வரலாமா? என்றைக்கும் வரக்கூடாது. மிக விவேகத்தோடு அந்தக் கார்யத்தை அவர்கள் செய்தார்கள். அதே வழியில் நாம் போகவேண்டும். இந்த பாவம் ப்ரதி ஒருத்தனுடைய மனத்திலும் வரட்டும். எல்லோரும் தங்களுடைய ஜீவனத்தை பவித்ரமாக நடத்தி பகவத் க்ருபைக்கு பாத்திரர்கள் ஆகட்டும் என்று நான் அந்த பகவானைப் ப்ரார்த்திக்கிறேன்.


ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள்

தொகுப்பு சாரதா ரமணன்

Thursday 29 May 2014

மூன்று பிரார்த்தனைகள்

மூன்று பிரார்த்தனைகள்


நமக்கு எல்லாருக்கும் பகவானுடைய விஷயத்தில் பரிபூர்ணமான பக்தி இருக்கிறது. இந்த ஸமஸ்த உலகத்திற்கும் ஸ்ருஷ்டிஸ்திதி, ஸம்ஹாரங்களுக்குக் காரணமாக பரமாத்மா இருக்கிறான். நாம் செய்யக்கூடிய புண்ய பாபங்களுக்கு தகுந்த பலனைக் கொடுக்கக் கூடிய பரமாத்மா இருக்கிறான் என்கிறது சாஸ்திரத்தின் சித்தாந்தம். பகவான் பக்தன் என்ன வேண்டினாலும் அதை அவச்யம் அனுக்ரஹம் பண்ணுவான். ஆனால் நாம் பகவானிடம் என்ன ப்ரார்த்தனை செய்யவேண்டும் என்கிறதுதான் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம். ஏனென்றால் எல்லாவற்றையும் கொடுக்கக்கூடிய பரமாத்மா இருக்கிறபோது அந்த பரமாத்மாவிடம் ஏதோ ரொம்ப சாமான்யமான விஷயத்தைக் கேட்டால் அது விவேகமாகாது.

ஒரு பெரிய மஹாராஜா நம் விஷயத்தில் ரொம்ப சந்தோஷப் பட்டு, “உனக்கு என்ன வேண்டுமோ கேள்! நான் கொடுக்கிறேன்” என்று சொன்னால், “எனக்கு எழுதுவதற்கு பென்சில் இல்லை, பென்சில் கொடுத்து விடுங்கள்” என்று கேட்டால் எப்படி இருக்கும்? அந்த இராஜாவிடம் பென்சிலையா கேட்பது? இராஜாவிடம் மிகவும் விலையுயர்ந்த சாமான்யமாகக் கிடைக்காத பொருளைக் கேட்டு அவரிடமிருந்து அதை அடைந்து பெருமை சேர்க்க வேண்டும். அதேபோல் பகவானிடம் நாம் என்ன கேட்கவேண்டும்? எதை பகவான் நமக்கு கொடுத்தால் வாழ்க்கை பவித்ரமாகுமோ அந்த மாதிரி விஷயத்தை நன்கு யோசனை பண்ணி நாம் சரியாகக் கேட்கவேண்டும். அதற்காக பகவான் சந்நிதியில் பிரார்த்திக்க வேண்டியது என்ன? பகவானே! என் மனதில் இருக்கக்கூடிய அகங்காரத்தை போக்கு” என்று கேட்க வேண்டும். நமக்கு எல்லாருக்கும் ஏதோ ஒரு விதமான அகங்காரம் மனதில் இருந்து தப்புக் காரியங்களை செய்ய வைக்கிறது. ஒரு பெரிய பணக்காரனானால் அந்தப் பணத்தினால் அகங்காரம். அந்த அகங்காரத்தினால் அவன் தப்புக் காரியங்கள் செய்கிறான். அவன் என்ன நினைக்கிறான்? நான் என்ன தப்பு காரியங்கள் செய்தாலும் அதை நான் சரிபண்ணிக் கொண்டு விடுவேன். என்னிடம் பணம் இருக்கிறது. அதனால் என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. என்ன வேண்டுமானாலும் நான் பண்ணி விடுவேன் என்று அவன் நினைக்கிறான். இன்னொருவனிடம் பதவி இருக்கிறது. அதை வைத்துக் கொண்டு நான் என்ன வேண்டுமானாலும் பண்ணலாம். அதை நான் சரிபண்ணிக் கொள்வேன். என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்று அவன் நினைக்கிறான். ரொம்பப் படித்தவன். நான் ரொம்பப் படித்திருக்கிறேன் எதை வேண்டுமானாலும் சரியாக்கி விடுவேன். என்னை யாரும் கேட்க முடியாது என்று அவன் நினைக்கிறான். இவர்கள் எல்லாரும் அந்தந்த ஒவ்வொரு விஷயத்தை வைத்துக் கொண்டு அகங்காரப் பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அந்த அகங்காரத்தினால் அகார்யங்களை பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் யார் அகார்யத்தை பண்ணினாலும் அதனுடைய பலனை அவன் அனுபவிக்கத்தான் வேண்டும். அவன் பணக்காரனானாலும், பண்டிதனானாலும், பெரிய அதிகாரியானாலும் ஆனால் அவன் பண்ணிய அகார்யத்தின் பலனை அவன் அனுபவிக்காமல் இருக்கவே முடியாது. ஏனெனில் அது கர்மாவினுடைய (சுபாவம்) இயற்கை. கர்மாவுக்குப் பலனை அந்தக் கர்மா செய்தவனுக்கு கொடுக்கக் கூடியது அதனுடைய இயற்கை. அதனால் யாரும் தப்பித்துக் கொள்ள முடியாது. அதனாலே இந்த உண்மையைப் புரிந்து கொள்ளாமல் தான் என்னதான் அகார்யம் பண்ணினாலும் அதை தான் சரிபண்ணிக் கொள்ள முடியும் என்கிற ஒரு ப்ரமையில் அஹங்காரத்திற்கு வசமாகி அகார்யங்களைப் பண்ணிவிடுகிறான். அஹங்காரம் மனதில் இல்லையோ அகார்யம் பண்ணினால் அதனுடைய பலத்தை நாம்தானே அனுபவிக்க வேண்டும். அந்தப் பலனை அனுபவிப்பது ரொம்ப கஷ்டமாகிவிடும். அதனால் நாம் பண்ண வேண்டாம் என்கிற ஒரு பயம், பீதி வரும். அகங்காரம் உள்ளவர்களுக்கு அந்தப் பீதி வராது.

அதனால் எல்லா அனர்த்தங்களுக்கும் மூல காரணமாக இருக்கக்கூடிய அகங்காரத்தை போக்குவதற்கு நாம் ப்ராத்தனை செய்வோம். நம் முன்னோருடைய சரித்திரங்களைப் பார்த்தால் அவர்களுக்கு துளி கூட அகங்காரம் இல்லை என்பது தெரிகிறது. வேதத்தில் ப்ருஹதாரண்ய உபநிஷத்தில் யாக்ஞவல்க்யஞருடைய கதை வருகிறது. அவர் மகா ஞானி ப்ரும்மஞானி. ஜனக மஹாராஜாவினுடைய ஆஸ்தானத்தில் பெரிய பெரிய மகான்கள் எல்லாரும் சேர்ந்திருந்த சமயத்தில் யாக்ஞவல்க்ஞயர் வந்திருந்தார். அப்போது ஜனக மகாராஜா இவர்களுக்குள் யார் பெரியவர் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஓர் ஆசை வந்துவிட்டது. ஜனகர் ஓர் ஆயிரம் பசு மாடுகளை அங்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டு ஒவ்வொரு பசுவினுடைய கொன்றிற்கும் பெரிய கவசம் போட்டு இருந்தார். அவற்றை நிறுத்தி விட்டு அங்கே உள்ளவர்களை கேட்டார். இங்கே யார் ப்ரம்மிஷ்டாளாக இருக்கிறார்களோ அவர்கள் இந்தப் பசு மாடுகளைக் கொண்டு போகலாம் என்று சொன்னார். எல்லோரும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் யார் கொண்டு போவது என்று பார்த்துக் கொண்டார்கள். யாக்ஞவல்க்யர் தன் சிஷ்யரிடம் தம் ஆஸ்ரமத்திற்கு அனைத்து மாடுகளையும் கொண்டு போய் விடலாம் என்றாரார். மற்ற எல்லோருக்கும் கோபம் வந்தது. நாம் இத்தனை பேர் இருக்கும்போது இவர் தன்னை ப்ரும்மஞானி என்று சொல்லி தன் சிஷ்யர்களிடம் இந்தப் பசுமாடுகளையெல்லாம் கொண்டு போ என்று சொல்கிறாரே, இவர் என்ன பெரிய ப்ரும்மஞானி” என்று அவரிடம் சண்டைக்கு வந்து விட்டார்கள். அப்போது யாக்ஞவல்க்யர் சொன்னார் “நான்தான் ப்ரும்மஞானி என்று இல்லை ப்ரும்மஞானிகள் எல்லோருக்கும் நான் நமஸ்காரம் பண்ணுகிறேன். நான்தான் ப்ரும்மஞானி என்கிற அகங்காரம் எனக்குக் கிஞ்சித்தும் கிடையாது” என்று சொன்னார். மேலும் ஜனக மகாராஜா சொன்னார், யார் இங்கு பிரமஞானியாக இருக்கிறவன் பசு தாடுகளைக் கொண்டு போகலாம் என்று சொன்னார். அதனால் கொண்டு போகிறேன்.” அப்போது “நீ ஞானியா?” என மற்றவர்கள் வினவினார். “உங்களுக்கு சந்தேகம் இருந்தால் கேளுங்கள் சொல்கிறேன்” என்றார் யாக்ஞவல்க்யர். 

ஒவ்வொருவரும் பெரிய பெரிய ப்ரச்னைகளைக் கேட்டார்கள். எல்லா ப்ரச்னைகளுக்கும் யாக்ஞவர்க்யர் பதில் சொல்லிவிட்டார். எல்லோரும் வாயை மூடிக் கொண்டுவிட்டார்கள். கடைசியில் யாக்ஞவல்க்யர் கேட்டார். “நீங்கள் எல்லோரும் கேட்பது முடிந்து விட்டதல்லவா? இப்போது நான் எல்லோரிடமும் ஒரு கேள்வி கேட்கவா? எப்படிக் கேட்கவேண்டும் எல்லோருக்கும் சேர்ந்து ஒரு கேள்வி கேட்கவா? தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் கேட்கவா? என்றார். யாருக்கும் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அவரே கேட்டும் விட்டார். ஒருவருக்கும் பதில் சொல்ல முடியவில்லை. அந்தக் கதை எதற்கு சொல்ல வந்தேன் என்றால் அவ்வளவு பெரிய ஞானியாக இருந்த யாக்ஞவல்க்யர் ஆரம்பத்தில் “எனக்கு நான்தான் பெரிய ஞானி என்கிற அகங்காரம் இல்லை. யார் பெரியவர்களோ அவர்கள் எல்லாருக்கும் என் நமஸ்காரம்” என்று சொல்ல வேண்டுமானால் அவர் மனதில் எந்த அளவுக்கு ஓர் அகங்காரம் என்பது துளிகூட இல்லாமல் இருந்தது. அப்பேர்ப்பட்ட மகானுக்கு கொஞ்சம்கூட அகங்காரம் இல்லை என்றால் சாதாரணமான நமக்கு அதாவது ஏதோ அரைகுறையாக படித்துவிட்டு நானும் பெரிய வித்வான் என்கிற அகங்காரம் வந்தால் அது என்ன அர்த்தம்? ஆதிசங்கரர் வேதவியாசருடைய ப்ரும்ம ஸூத்ரங்களுக்கு பாஷ்யம் எழுதி சிஷ்யர்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். வேதவியாசரே (தானாகவே) ஸ்வயமாக ஒரு வ்ருத்த (வயோதிக) ப்ராமண ரூபத்தில் வந்து அவரைக் கேட்டார். என்ன நேரில் பாடம் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அப்போது சங்கரருடைய சிஷ்யர்கள் பதில் சொன்னார்கள். “இவர் எங்கள் குருநாதர். வேதவியாசருடைய ப்ரும்மஸூத்ரங்களுக்கு பாஷ்யம் எழுதி எங்களுக்குப் பாடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.” அப்போது அந்த வ்ருத்த ப்ராமணர் சங்கரரைப் பார்த்து “நீ வேதவியாசருடைய ஸூத்ரங்களுக்கே பாஷ்யம் எழுதுகிறாயாமே, அது ரொம்பக் கஷ்டமானது ஆயிற்றே! ஏதாவது ஒரு ஸூத்ரத்தை பற்றி கேட்கிறேன் சொல்கிறாயா?” என்றார் அவர். அப்போது சங்கரரும் யாக்ஞவல்க்யர் சொன்னமாதிரி வியாசருடைய ஸூத்ரங்களுக்கு அர்த்தம் எனக்குத்தான் தெரியும் என்கிற பாவனை எனக்கு இல்லை. அந்த ஸூத்ரத்தின் அர்த்தம் தெரிந்த மகான்கள் எல்லாருக்கும் நான் நமஸ்காரம் பண்ணுகிறேன். நீங்கள் ஏதோ கேட்கவேண்டும் என்று சொன்னீர்கள் கேளுங்கள். சொல்ல முடிந்தால் பதில் சொல்கிறேன்” என்றார். அவர் ப்ரச்னம் பண்ணி இவர் பதில் சொல்ல, திரும்ப அவர் கேள்வி, இவர் பதில் என்று இப்படி ஏழு நாட்கள் ஆனாலும் முடியவில்லை. கடைசியிலே பத்மபாதருக்கு வந்துள்ள மஹான் ஸ்வயம் வியாஸர்தான் என்று தெரிந்துவிட்டது. வேறு யாராலும் இந்த மாதிரி கேள்வி கேட்க முடியாது. சாக்ஷாத் ஸூத்ரகாரர் வேத வியாசரே இங்கு வந்து இருக்கிறார் என்று பத்மபாதர் சொன்னார். ஸாக்ஷாத் நாராயண ஸ்வரூபன் வேத வியாசர், ஸாக்ஷாத் சிவ ஸ்வரூபன் சங்கரர், உங்கள் இரண்டு பேருக்கும் வாதம் என்று ஆரம்பித்தால் நாங்கள் எல்லாரும் எங்கே போவது” என்றார். சங்கரர் அப்பேர்ப்பட்ட ஞானியாய் இருந்தாலும் கூட அவருடைய வார்த்தை என்ன? ஸூத்ரம் தெரிந்த எல்லா மகான்களுக்கும் என் நமஸ்காரம். நான்தான் சூத்ரார்த்தம் தெரிந்தவன் என்கிற பாவம் இல்லை. இப்படி எந்த மகான்கள் சரித்திரம் பார்த்தாலும் அவர்கள் எல்லோருக்கும் அகங்காரம் துளிகூட இருக்கவில்லை என்பது நமக்கு ஸ்பஷ்டமாகத் தெரிகிறது. அப்படி இருக்கும்போது நாம் ஏதோ கொஞ்சம் தெரிந்து கொண்டு நான்தான் ரொம்ப தெரிந்தவன் என்கிற பாவனையிலே இருக்கிறோமே இது நியாயமா? அதேபோல் நம்மை விட எத்தனையோ பணக்காரர்கள் இருக்கிறார்கள்; நான் என்ன பெரிய பணக்காரன் என்று சொல்லிக் கொண்டு நான் அகங்காரப்படலாமா? எனக்குத் தெரிந்தது ரொம்ப சொல்பம். நான் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய உண்டு. நான் அகங்காரப்பட வேண்டியது சரியல்ல. அதேபோல் என்னிடம் இருக்கிற ஐஸ்வர்யம் ரொம்ப குறைந்தது. இதைவிட பெரிய ஐஸ்வர்யம் உள்ளவர்கள் இருக்கிறார்கள். இதற்காக நான் ஏன் அகங்காரப்பட வேண்டும்? இந்த பாவம் நமக்கு வேண்டுமானால் அது பகவானுடைய க்ருபையினாலேதான் வரவேண்டும். அதனால் நாம் பகவானிடம் “என்னுடைய அகங்காரத்தைப் போக்கி விடு” என்கிற ப்ரார்த்தனை முதலில் செய்ய வேண்டியது ஆகும். அதே போல் இன்னொரு ப்ரார்த்தனை என்ன என்று கேட்டால் நமக்கு உலகத்தில் எதைப் பார்த்தாலும் எனக்கு வேண்டும் என்கிற ஒரு தோற்றம். எந்த ஒரு புது வஸ்துவைப் பார்த்தாலும் இது எனக்கு வேண்டும். எந்த ஒரு நல்ல பொருளைப் பார்த்தாலும் இது எனக்கு வேண்டும் என்கிற ஆசை. இந்த எனக்கு வேண்டும், வேண்டும் என்கிற ஆசை இருக்கிறதே மனிதனுக்கு இந்த ஆசை என்பது சமுத்ரம் மாதிரி இருக்கிறது என்று வேதத்திலேயே சொல்லியிருக்கிறது. “சமுத்ரத்திற்கு எப்படி அந்தம் (முடிவு) இல்லையோ, அப்படி இந்த காமத்துக்கும் அந்தம் இல்லை. எவ்வளவு கிடைத்தாலும் கூட போதும் என்கிற சப்தம் நம் வாயில் வராது. அப்போது என்ன ப்ரயோஜனம்? சம்பாதித்து சேர்த்துக் கொண்டேயிருக்கிறோம், கடைசியில் அது யாருக்குப் போகுமோ தெரியாது. நாம் ஒருவருக்கும் தானம் பண்ணுவதும் இல்லை. நாம் அனுபவிக்கவும் இல்லை. சேர்த்து கொண்டேயிருக்கிறோம். அதனால் இந்த ஆசை அதிகமாகி அதை முழுவதும் நிறைவேற்றுவதற்குள்ளேயே நம் வாழ்க்கை முடிந்து விடுகிறது. எங்கே பகவத் சேவைக்கு அவகாசம்? ஸத்கர்மானுஷ்டானத்திற்கு எங்கே அவகாசம்? மனதில் வருகிற ஆசைகளை நிறைவேற்றுவதற்கே நம்முடைய ஆயுள் முழுமையும் வ்யர்த்தம் ஆகி விடுகிறது. அதற்காக “பகவானிடம் பகவானே எனக்கு மனதில் இந்த ஆசைகள் வராமல் பண்ணிவிடு. இந்த ஆசைகள் எது முடிய வந்து கொண்டு இருக்குமோ அது முடிய எனக்கு சௌக்யம் என்பது இருக்காது.” எனப் பிரார்த்தனை செய்யவேண்டும்.

உலகத்தில் எந்தப் பொருளிலும் எவனுக்கு ஆசை இல்லையோ அவனுக்குத்தான் உண்மையாக சௌக்யம் அவன்தான் சுகமாக இருப்பான். இந்த ஆசைகளை மனதில் வைத்துக்கொண்டு இருப்பவனுக்கு சௌக்யம் என்பது இல்லவே இல்லை. எவ்வளவு வந்தாலும் இல்லை, இல்லை. அது ஒன்றுவர வேண்டியிருக்கிறது. இது ஒன்று வரவேண்டியிருகிறது என்ற கணக்கில்தான் இருக்கிறார்கள். அந்தக் கணக்கு என்றைக்கும் முடியவே முடியாது. ஆயுள் பூராவும் அந்த வார்த்தை சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதுதான். அவனுக்கு சௌக்யம் கிடையாது. எனக்கு எதுவும் வரவேண்டியது இல்லை என்று சொல்கிறவனுக்குத்தான் சௌக்யம். அந்த வார்த்தை நம் வாயிலிருந்து வரப்போவதில்லை. அதனால் பகவானிடம் நாம் ப்ரார்த்தனை பண்ண வேண்டியது “பகவானே! எனக்கு ஆசைகள் வராமல் பண்ணிவிடு” என்று.

இன்னொரு ப்ரார்த்தனை என்னவென்று கேட்டால் “பகவானே! எனக்கு தயை என்ற குணம் வரும்படி செய்.” ஒருவனிடம் தயை இருநால்தான் பரோபகாரம் பண்ண முடியும். இல்லாவிட்டால் பரோபகாரம் பண்ண முடியாது. தயை என்கிற சப்தத்துக்கு என்ன அர்த்தம் தெரியுமா? இன்னொருவனுடைய கஷ்டத்தை நீக்கவேண்டும் என்கிற பாவம். ஒருவன் கஷ்டத்திலே இருக்கிறான், அவன் கஷ்டத்திற்கு ஏதாவது ஒரு பரிகாரம் பண்ண முடியும் என்கிறபோது நாம் கட்டாயம் பண்ண வேண்டும். அவன் கஷ்டத்தை நீக்கவேண்டும் என்கிற பாவம் மனதில் வருகிறதே அந்த பாவத்துக்கு தயை என்று பெயர். அந்த பாவம் வந்தால்தானே அவன் கஷ்டத்தைப் போக்க முடியும். இல்லாவிடில் அந்த பாவமே மனதில் வரவில்லையென்றால் நாம் அவனுக்கு உபகாரம் பண்ண முடியாது. அந்த தயை என்பது பகவானுக்கு சமுத்ரம் மாதிரி இருக்கிறது. அதில் ஒரு துளியாவது தயை நமக்கு இருந்தால், நம்மால் எவ்வளவு நல்ல கார்யங்கள் நடக்கும்.

எத்தனையோ பேர், நம் எதிரில் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கஷ்டத்திற்கு, ஒரு துளியாவது நாம் பரிகாரம் பண்ணினால், கொஞ்சமாவது உபகாரம் பண்ணினால் அது எவ்வளவோ நல்லது. ஆனால் ஒரு விஷயத்தை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். நாம் இன்னொருவனுக்கு உபகாரம் பண்ணவேண்டும் ஆனால் அதனால் திரும்ப நமக்கு என்ன கிடைக்கும் என எதிர்பாரக்கக்கூடாது. இன்றைக்கு உபகாரம் பண்ணுவதால் திரும்ப க்ஷீமீtuக்ஷீஸீ எனக்கு என்ன கிடைக்கும் என்று தோன்றும். அந்தத் திரும்ப என்ன கிடைக்கும் என்பதை மட்டும் நாம் கேட்டுக் கொள்ளக் கூடாது. அதற்கு இராமாயணத்தில் ஓர் உதாரணம் சொல்லுவார்கள். இராமர் ஆரண்ய வாசம் பண்ணிக்கொண்டு இருந்த சமயத்தில் சீதையை இராவணன் அபகரித்துக் கொண்டு போய் விட்டான். அப்போது இராமர் ரொம்ப வருத்தத்தில் இருந்தார். எவன் கொண்டு போய் விட்டான். எங்கே கொண்டு போய்விட்டான் என்று ஒன்றுமே தெரியாமல் ரொம்ப வருத்ததில் இருந்தார். அப்போது சுக்ரீவனுடைய ஸ்நேகம் கிடைத்தது. சுக்ரீவன் தன்னுடைய வானர சைன்யத்தையெல்லாம் சீதையைத் தேடுவதற்கு அனுப்பினான். ஹனுமார் சீதை இருக்கிற இடத்திற்கு லங்கா பட்டணத்திற்கே போய் சீதை எந்த மரத்தடியில் இருந்தாளோ அங்கே போய், அந்த சீதா தேவியோடு பேசினான். அந்த அம்மாவிற்கு இராமர் கொடுத்த மோதிரத்தை, அடையாளமாகக் கொடுத்து திரும்ப அந்த சீதா அம்மா கொடுத்த சூடாமணியை இராமருக்கு கொண்டு வந்து கொடுத்தார். அப்போது அதைப் பார்த்து இராமருக்கு ஏற்பட்ட சந்தோஷத்திற்கு அளவேயில்லை. அப்போது இராமர் ஹனுமாரிடம் சொன்னார். “இதோ பார் ஹனுமானே! நீ எனக்கு பெரிய உபகாரம் பண்ணினாய். இந்த உபகாரத்தை என்னால் என்றைக்குமே மறக்க முடியாது. அப்பேர்ப்பட்ட உபகாரம் பண்ணினாய் இல்லையா, திரும்ப உனக்கு என்ன கிடைக்கும் என்பதை மட்டும் நீ நினைக்காதே. என்னிடம் இவ்வளவு உபகாரம் வாங்கிக்கொண்டு திருப்பி என்னிடமிருந்து நீ எதுவும் எதிர்பார்க்காதே என்று சொல்கிறாரே? இது நியாயமா? என்று பலபேருக்கு கேள்வி வரலாம். அதற்குக் காரணம் சொன்னார் பகவான். இன்றைக்கு நீ எனக்கு உபகாரம் பண்ணினாய். ஏனெனில் நான் ரொம்ப கஷ்டத்தில் இருந்தேன். அதனால் உபகாரம் பண்ணினாய். திருப்பி என்னிடமிருந்து நீ ப்ரத்யுபகாரத்தை எதிர்பார்க்கிறாய் என்றால் உனக்கு ஒரு கஷ்டம் வந்தால் தானே நான் உனக்கு உபகாரம் பண்ண முடியும். நீ என்னிடமிருந்து ப்ரத்யுபகாரம் எதிர்பார்க்கிறாய் என்றால் நீ ஒரு கஷ்டத்தையும் எதிர் பார்க்கிறாய் என்றுதானே அர்த்தம். ஏன் அப்படி எதிர் பார்க்கிறாய்? நீ சுகமாக இருக்கிறாய் ஒரு கஷ்டம் வரட்டும் அப்போது எனக்கு இவர் உபகாரம் பண்ணட்டும் என்று எதிர் பார்த்த மாதிரி ஆகிவிடும். அது வேண்டவே வேண்டாம். எப்பொழுதும் நீ சுகமாய் இரு என்று சொன்னாராம். அதனால் நாம் இன்னொருவருக்கு உபகாரம் பண்ணுகிறபோது திருப்பி அவனிடமிருந்து என்ன கிடைக்கும் என்கிற பாவனை இல்லாமல் நாம் பண்ணக்கூடிய உபகாரம்தான் ரொம்ப விசேஷமானது. அந்த பாவனையோடு நாம் பண்ண வேண்டும்.


அதனால்தான் பகவான் பகவத் கீதையிலே சொல்கிறபோது

தாதவ் மிதியத் தானம்
தீயதே அனுபகாரிணே |
தேசே காலேச பாத்ரேச
தத்தானம்ஸாத்விகம் ஸ்ம்ருதம் ||

எவன் தனக்குத் திரும்ப உபகாரம் பண்ணவேண்டும் என்கிற பாவனை இல்லாமல் தானம் பண்ணுகிறானோ அதுதான் மிக உயர்ந்தது. அதனால் நமக்கு அந்த தயை வரவேண்டும். அப்பேர்ப்பட்ட ஓர் அநுக்ரஹம் பகவான் நமக்கு செய்யட்டும் என்று நாம் பகவான் சந்நிதியிலே ப்ரார்த்திக்கவேண்டும்.
பகவானுடைய அநுக்ரஹத்தால் நம்முடைய ஜீவனம் ஸார்த்தகம் ஆகிவிடும்.

நம்முடைய அகங்காரத்தைப் போக்கவேண்டும். நமக்கு ஆசைகள் வராமல் பண்ண வேண்டும். நம் மனதில் தயை வரவேண்டும். இந்த மூன்று ப்ரார்த்தனைகளையும் பகவான் நமக்கு அனுக்ரஹம் செய்யட்டும். அதனால் நம்முடைய வாழ்க்கை ரொம்ப பவித்ரமாகும். ரொம்ப நன்றாக நடக்கும். அகங்காரம் என்பது போகவில்லை. ஆசை என்பது நாளுக்கு நாள் ஜாஸ்தி ஆகிக்கொண்டிருக்கிறது. தயை என்பது கொஞ்சமும் கிடையாது என்றால் அந்த வாழ்க்கை வ்யர்த்தமான (வீணான) வாழ்க்கை. அந்த வாழ்க்கையினால் ஒரு ப்ரயோஜனமும் இல்லை.

இப்பேர்ப்பட்ட ப்ரார்த்தனையை நாம் பகவத் சந்நிதியிலே செய்து பகவானுடைய க்ருபையினால் அதை அடைந்தோமானால் அப்போதுதான் நம்முடைய வாழ்க்கை பவித்ரமாகும். தன்யமாகும். எல்லோரும் இந்த மாதிரி ப்ரார்த்தனை பகவத் சந்நிதியிலே செய்யட்டும் என்று பகவத்பாதாள் சொல்லியிருக்கிறார். அப்பேர்ப்பட்ட ப்ரார்த்தனை செய்து அந்த பகவானுடைய க்ருபைக்கு எல்லோரும் பாத்திரம் ஆகட்டும்” என்று நான் சாரதாசந்த்ரமௌளீச்வராளைப் பிரார்த்திக்கிறேன்.

- ஜெகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள்

நன்றி: அம்மன் தரிசனம் 

Monday 26 May 2014

சிவபுஜங்கம் -

சிவபுஜங்கம்

கலத்தாநகண்டம் மிலத்ப்ருங்கஷண்டம்
சலச்சாருசுண்டம் ஜகத்த்ராணசௌண்டம்
கநத்தந்தகாண்டம் விபத்பங்கசண்டம்
சிவப்ரேமபிண்டம் பஜே வக்ரதுண்டம் .............1

அநாத்யந்தமாத்யம் பரம் தத்த்வமர்தம்
சிதாகாரமேகம் துரீயம் த்வமேயம்
ஹரிப்ரஹ்மம்ருக்யம் பரப்ரஹ்மரூபம்
மநோவாகதீதம் மஹஃ சைவமீடே ...................2

ஸ்வசக்த்யாதிசக்த்யந்தஸிம்ஹாஸநஸ்தம்
மநோஹாரிஸர்வாங்கரத்நோருபூஷம்
ஜடாஹீந்துகங்காஸ்திசம்யாகமௌலிம்
பராசக்திமித்ரம் நுமஃ பஞ்சவக்த்ரம் ..................3

சிவேசாநதத்பூருஷாகோரவாமா-
திபிஃ பஞ்சபிர்ஹ்ருந்முகைஃ ஷட்‌பிரங்கைஃ
அநௌபம்ய ஷட்‌த்ரிம்சதம் தத்த்வவித்யா-
மதீதம் பரம் த்வாம் கதம் வேத்தி கோ வா ........4

ப்ரவாலப்ரவாஹப்ரபாசோணமர்தம்
மருத்வந்மணிஸ்ரீமஹஃச்யாமமர்தம்
குணஸ்யூதமேதத்வபுஃ சைவமந்தஃ
ஸ்மராமி ஸ்மராபத்திஸம்பத்திஹேதும் .........5

ஸ்வஸேவாஸமாயாததேவாஸுரேந்த்ரா-
நமந்மௌலிமந்தாரமாலாபிஷக்தம்
நமஸ்யாமி சம்போ பதாம்போருஹம் தே
பவாம்போதிபோதம் பவாநீவிபாவ்யம் ..........6

ஜகன்னாத மன்னாத கௌரீஸநாத
ப்ரபன்னாநுகம்பிந்விபன்னார்திஹாரிந்
மஹஃஸ்தோமமூர்தே ஸமஸ்தைகபந்தோ
நமஸ்தே நமஸ்தே புநஸ்தே நமோzஸ்து ...........7

விரூபாக்ஷ விச்வேச விச்வாதிதேவ
த்ரயீமூல சம்போ சிவ த்ர்யம்பக த்வம்
ப்ரஸீத ஸ்மர த்ராஹி பச்யாவமுக்த்யை
க்ஷமாம் ப்ராப்நுஹி த்ர்யக்ஷ மாம் ரக்ஷ மோதாத்...8

மஹாதேவ தேவேச தேவாதிதேவ
ஸ்மராரே புராரே யமாரே ஹரேதி
ப்ருவாணஃ ஸ்மரிஷ்யாமி பக்த்யா பவந்தம்
ததோ மே தயாசீல தேவ ப்ரஸீத ...............9

த்வதந்யஃ சரண்யஃ ப்ரபன்னஸ்ய நேதி
ப்ரஸீத ஸ்மரன்னேவ ஹந்யாஸ்து தைந்யம்
ந சேத்தே பவேத்பக்தவாத்ஸல்யஹாநி-
ஸ்ததோ மே தயாலோ ஸதா ஸன்னிதேஹி .............10

அயம் தாநகாலஸ்த்வஹம் தாநபாத்ரம்
பவாநேவ தாதா த்வதந்யம் ந யாசே
பவத்பக்திமேவ ஸ்திராம் தேஹி மஹ்யம்
க்ருபாசீல சம்போ க்ருதார்தோzஸ்மி தஸ்மாத் ......11

பசும் வேத்ஸி சேந்மாம் தமேவாதிரூடஃ
கலங்கீதி வா மூர்த்நி தத்ஸே தமேவ 
த்விஜிஹ்வஃ புநஃ ஸோzபி தே கண்டபூஷா
த்வதங்கீக்ருதாஃ சர்வ ஸர்வேzபி தந்யாஃ .........12

ந சக்நோமி கர்தும் பரத்ரோஹலேசம்
கதம் ப்ரீயஸே த்வம் ந ஜாநே கிரீச
ததாஹி ப்ரஸன்னோzஸி கஸ்யாபி காந்தா-
ஸுதத்ரோஹிணோ வா பித்ருத்ரோஹிணோ வா ............13

ஸ்துதிம் த்யாநமர்சாம் யதாவத்விதாதும்
பஜன்னப்யஜானந்மஹேசாவலம்பே
த்ரஸந்தம் ஸுதம் த்ராதுமக்ரே ம்ருகண்டோ-
ர்யமப்ராணநிர்வாபணம் த்வத்பதாப்ஜம் ......14

சிரோ த்ருஷ்டிஹ்ருத்ரோகசூலப்ரமேஹ-
ஜ்வரார்சோஜராயக்ஷ்மஹிக்காவிஷார்தாந்
த்வமாத்யோ பிஷக்பேஷஜம் பஸ்ம சம்போ
த்வமுல்லாகயாஸ்மாந்வபுர்லாகவாய .......15

தரித்ரோzஸ்ம்யபத்ரோzஸ்மி பக்ரோzஸ்மி தூயே
விஷண்ணோzஸ்மி ஸன்னோzஸ்மி கின்னோzஸ்மி சாஹம்
பவாந்ப்ராணிநாமந்தராத்மாஸி சம்போ
மமாதிம் ந வேத்ஸி ப்ரபோ ரக்ஷ மாம் த்வம் .......16

த்வதக்ஷ்ணோஃ கடாக்ஷஃ ப்ரதேத்த்ர்யக்ஷ யத்ர
க்ஷணம் க்ஷ்மா ச லக்ஷ்மீஃ ஸ்வயம் தம் வ்ருணாதே
கிரீடஸ்புரச்சாமரச்சத்ரமாலா-
கலாசீகஜக்ஷௌமபூஷாவிசேஷைஃ .........17

பவாந்யை பவாயாபி மாத்ரே ச பித்ரே
ம்ருடாந்யை ம்ருடாயாப்யகக்ந்யை மகக்நே
சிவாங்க்யை சிவாங்காய குர்மஃ சிவாயை
சிவாயாம்பிகாயை நமஸ்த்ர்யம்பகாய .....18

பவத்கௌரவம் மல்லகுத்வம் விதித்வா
ப்ரபோ ரக்ஷ காருண்யத்ருஷ்ட்யாநுகம் மாம்
சிவாத்மாநுபாவஸ்துதாவக்ஷமோzஹம்
ஸ்வசக்த்யா க்ருதம் மேzபராதம் க்ஷமஸ்வ....19

யதா கர்ணரந்த்ரம் வ்ரஜேத்காலவாஹ-
த்விஷத்கண்டகண்டாகணாத்காரநாதஃ
வ்ருஷாதீசமாருஹ்ய தேவௌபவாஹ்யம்
ததா வத்ஸ மா பீரிதி ப்ரீணய த்வம் .......20

யதா தாருணாபாஷணா பீஷணா மே
பவிஷ்யந்த்யுபாந்தே க்ருதாந்தஸ்ய தூதாஃ
ததா மந்மநஸ்த்வத்பதாம்போருஹஸ்தம்
கதம் நிஸ்சலம் ஸ்யான்னமஸ்தேzஸ்து சம்போ..............21

யதா துர்நிவாரவ்யதோzஹம் சயாநோ
லுடன்னிஃச்வஸன்னிஃஸ்ருதாவ்யக்தவாணிஃ
ததா ஜஹ்நுகந்யாஜலாலங்க்ருதம் தே
ஜடாமண்டலம் மந்மநோமந்திரம் ஸ்யாத்..............22

யதா புத்ரமித்ராதயோ மத்ஸகாசே
ருதந்த்யஸ்ய ஹா கீத்ருசீயம் தசேதி
ததா தேவதேவேச கௌரீச சம்போ
நமஸ்தே சிவாயேத்யஜஸ்ரம் ப்ரவாணி ............23

யதா பச்யதாம் மாமஸௌ வேத்தி நாஸ்மா-
நயம் ச்வாஸ ஏவேதி வாசோ பவேயுஃ
ததா பூதிபூஷம் புஜங்காவநத்தம்
புராரே பவந்தம் ஸ்புடம் பாவயேயம் ................24

யதா யாதநாதேஹஸந்தேஹவாஹீ
பவேதாத்மதேஹே ந மோஹோ மஹாந்மே
ததா காசசீதாம்சுஸங்காசமீச
ஸ்மராரே வபுஸ்தே நமஸ்தே ஸ்மராணி........25

யதாபாரமச்சாயமஸ்தாநமத்பி-
ர்ஜநைர்வா விஹீநம் கமிஷ்யாமி மார்கம்
ததா தம் நிருந்தந்க்ருதாந்தஸ்ய மார்கம்
மஹாதேவ மஹ்யம் மநோஜ்ஞம் ப்ரயச்ச .......26

யதா ரௌரவாதி ஸ்மரன்னேவ பீத்யா
வ்ரஜாம்யத்ர மோஹம் மஹாதேவ கோரம்
ததா மாமஹோ நாத கஸ்தாரயிஷ்ய-
த்யநாதம் பராதீநமர்தேந்துமௌலே .............27

யதாzச்வேதபத்ராயதாலங்க்யசக்தேஃ
க்ருதாந்தாத்பயம் பக்தவாத்ஸல்யபாவாத்
ததா பாஹி மாம் பார்வதீவல்லபாந்யம்
ந பச்யாமி பாதாரமேதாத்ருசம் மே .............28

இதாநீமிதாநீம் ம்ருதிர்மே பவித்ரீ-
த்யஹோ ஸந்ததம் சிந்தயா பீடிதோzஸ்மி
கதம் நாம மா பூந்ம்ருதௌ பீதிரேஷா
நமஸ்தே கதீநாம் கதே நீலகண்ட ..............29

அமர்யாதமேவாஹமாபாலவ்ருத்தம்
ஹரந்தம் க்ருதாந்தம் ஸமீக்ஷ்யாஸ்மி பீதஃ
ம்ருதௌ தாவகாங்க்ர்யப்ஜதிவ்யப்ரஸாதா-
த்பவாநீபதே நிர்பயோzஹம் பவாநி ..........30

ஜராஜந்மகர்பாதிவாஸாதிதுஃகா-
ந்யஸஹ்யாநி ஜஹ்யாம் ஜகன்னாத தேவ
பவந்தம் விநா மே கதிர்நைவ சம்போ
தயாலோ ந ஜாகர்தி கம் வா தயா தே ...........31

சிவாயேதி சப்தோ நமஃபூர்வ ஏஷ
ஸ்மரந்முக்திக்ருந்ம்ருத்யுஹா தத்த்வவாசீ
மஹேசாந மா காந்மநஸ்தோ வசஸ்தஃ
ஸதா மஹ்யமேதத்ப்ரதாநம் ப்ரயச்ச ........32

த்வமப்யம்ப மாம் பச்ய சீதாம்சுமௌலி-
ப்ரியே பேஷஜம் த்வம் பவவ்யாதிசாந்தௌ
பஹுக்லேசபாஜம் பதாம்போஜபோதே
பவாப்தௌ நிமக்நம் நயஸ்வாத்ய பாரம் .....33

அநுத்யல்லலாடாக்ஷிவஹ்நிப்ரரோஹை-
ரவாமஸ்புரச்சாருவாமோருசோபைஃ
அநங்கப்ரமத்போகிபூஷாவிசேஷை-
ரசந்த்ரார்தசூடைரலம் தைவதைர்நஃ ............34

அகண்டேகலங்காதநங்கேபுஜங்கா-
தபாணௌகபாலாதபாலேநலாக்ஷாத்
அமௌளௌசசாங்காதவாமேகலத்ரா-
தஹம் தேவமந்யம் ந மந்யே ந மந்யே .........35

மஹாதேவ சம்போ கிரீச த்ரிசூலிம்-
ஸ்த்வதீயம் ஸமஸ்தம் விபாதீதி யஸ்மாத்
சிவாதந்யதா தைவதம் நாபிஜாநே
சிவோzஹம் சிவோzஹம் சிவோzஹம் சிவோzஹம் ..36

யதோzஜாயதேதம் ப்ரபஞ்சம் விசித்ரம்
ஸ்திதிம் யாதி யஸ்மிந்யதேவாந்தமந்தே
ஸ கர்மாதிஹீநஃ ஸ்வயஜ்ஜ்யோதிராத்மா
சிவோzஹம் சிவோzஹம் சிவோzஹம் சிவோzஹம் ....37

கிரீடே நிசேசோ லலாடே ஹுதாசோ
புஜே போகிராஜோ கலே காலிமா ச
தநௌ காமிநீ யஸ்ய தத்துல்யதேவம்
ந ஜாநே ந ஜாநே ந ஜாநே ந ஜாநே .....38

அநேந ஸ்தவேநாதராதம்பிகேசம்
பராம் பக்திமாஸாத்ய யம் யே நமந்தி
ம்ருதௌ நிர்பயாஸ்தே ஜநாஸ்தம் பஜந்தே
ஹ்ருதம்போஜமத்யே ஸதாஸீநமீசம் ....39

புஜங்கப்ரியாகல்ப சம்போ மயைவம்
புஜங்கப்ரயாதேந வ்ருத்தேந க்ல்ருப்தம்
நரஃ ஸ்தோத்ரமேதத்படித்வோருபக்த்யா
ஸுபுத்ராயுராரோக்யமைச்வர்யமேதி .......40

சிவபுஜங்கம் ஸம்பூர்ணம்

Saturday 24 May 2014

ஞான யோக ஸாதனைகள் - பூஜ்யஸ்ரீ ஸ்வாமி ஓங்காரநந்தர்

ஞான யோக ஸாதனைகள்

பூஜ்யஸ்ரீ ஸ்வாமி ஓங்காரநந்தர்

மனிதனின் தனிச்சிறப்பு அறிவும் ஒழுக்கமுமே ஆகும். மனிதப் பிறவி கிடைத்தற்கரியது. பிறவிச் சூழலிலிருந்து விடுபட முயற்சி செய்வதும், அதில் வெற்றிபெறுவதும் மனிதப் பிறவியில் மட்டுமே ஸாத்தியமாகிறது.

மண்ணில் நல்ல வண்ணம் நாம் வாழ வழிகாட்டுவதற்கென்றே வேதம் என்ற அறிவுச்செல்வம் நமக்கு வழங்கப்பட்டிருக்கிறது. வேதங்களின் முற்பகுதி, அறத்தைக் கடைப்பிடித்து வாழ்வாங்கு வாழ வழிகாட்டுகிறது. அதற்கு வேதபூர்வம் அல்லது கர்மகாண்டம் என்று பெயர். வேதங்களின் இறுதிப்பகுதி மெய்ப்பொருள் தத்துவத்தை உபதேசிக்கிறது. அதற்கு வேதாந்தம் அல்லது ஞான காண்டம் என்று பெயர்.

மோக்ஷத்திற்கு ஸாதனம் ஞானம்
வாழும் காலத்திலேயே மனிதன் தன்னுடைய துன்பங்களிலிருந்து அடியோடு விடுபட்டு, யாண்டும் பேரின்பத்தில் நிலைத்திருத்தலே மோக்ஷம் ஆகும். வாழ்க்கையில் நாம் சந்திக்கும் அனைத்து ப்ரச்னைகளுக்கும் காரணம், நம்மைப்பற்றிய, இறைவனைப் பற்றிய, உலகைப் பற்றிய அறியாமை என்று சாஸ்த்ரங்கள் கூறுகின்றன. அறியாமையை நீக்கிக்கொள்ள அறிவொன்றே சாதனமாக இருக்கிறது.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு (திருக்குறள் : 355)

எப்பொருள் எத்தன்மையதாய்த் தோன்றினாலும், (அத்தோற்றத்தை மட்டும் கண்டு மயங்காமல்) அப்பொருளின் உண்மையான இயல்பை அறிவதே மெய்யுணர்வாகும்.
ஆன்மிக வாழ்க்கையில், அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஒரு சொல் ஞானம். சிலர் ஞானம் வேறு, அறிவு வேறு என்று நினைக்கின்றனர். ஞானம் என்பது வடமொழிச்சொல், அறிவு என்பது தமிழ்ச்சொல். அவ்வளவே.

ஒரு விளம்பரப் படத்தில், பூனையும், நாயும் அருகருகில் இருக்கின்றன. நாய் குரைத்துக் கொண்டிருக்கிறது; பூனை அருகில் சிரித்துக் கொண்டிருக்கிறது. இது எப்படி ஸாத்தியம்? நாயைக் கண்டவுடன் பூனை ஓட்டம் பிடிப்பதுதானே வழக்கம்? ஆனால் படத்தை உற்றுக் கவனித்துப் பார்த்தால், நாய் கயிற்றினால் கட்டப்பட்டிருப்பது தெரிகிறது. நாயால் குரைக்கத்தான் முடியுமே தவிர, தன்னை நெருங்கிக் கடிக்க முடியாது என்ற அறிவு பூனைக்கு இருக்கிறது. அதனால் அது கவலையற்றிருக்கிறது. நமக்கும் நம்முடைய உண்மையான இயல்பைப் பற்றிய அறிவு தெளிவாக இருந்தால், துன்பங்களால் நம்மைத் தாக்க முடியாது.

முழுமையான பேரமைதியை மோக்ஷத்தைப் பெறுவதற்கு வேதாந்த நூல்களை முறையாகக் கற்று மெய்யறிவைப் பெறுவதொன்றே ஸாதனம் என்று சாஸ்த்ர நூல்கள் உறுதியாகக் கூறுகின்றன.
ஞாநம் லப்த்வா பராம்சாந்திம் அசிரேணாதிகச்சதி ! (ஸ்ரீமத்பகவத்கீதை 4-39)
மெய்யறிவை அடைந்தவன் அதிவிரைவில் பேரமைதியில் நிலைத்திருக்கிறான்.

ஞானத்திற்கு ஸாதனம் சாஸ்த்ர விசாரம்
இராமாயணத்தைப் படிப்பதால் இராமரைப் பற்றி அறிகிறோம். பாகவதத்தைப் படிப்பதால் க்ருஷ்ணரைப் பற்றி அறிந்துகொள்கிறோம். வேதாந்த சாஸ்த்ரம் நம் உண்மையான இயல்பைக் காட்டும் கண்ணாடியாக விளங்குகிறது. தன்னைப் பற்றிய அறிவே ஆத்ம ஞானம் எனப்படுகிறது.
ஹோமம் செய்வதால் ஆத்ம ஞானத்தைப் பெற்று வி முடியாது. இறைவனுடைய திருநாமங்களை ஜபம் செய்வதால் ஒருவர் ஆத்ம ஞானத்தைப் பெற முடியாது. தனியே அமர்ந்து த்யானம் செய்வதால் ஆத்ம ஞானத்தைப் பெற முடியாது. இவையனைத்தும் மனத்தைத் தூய்மைப்படுத்தி, பக்குவப்படுத்திக் கொள்ள உதவும் ஸாதனங்கள். இவை ஞானத்திற்குரிய தகுதிகளைப் பெறுவதற்கு உதவுகின்றன. பக்குவப்பட்ட மனத்திற்கே ஆத்ம ஞானம் விளங்கும், பயனைக் கொடுக்கும்.
மெய்யறிவைப் பெறுவதற்காக மேற்கொள்ளும் முறையான ஸாதனைகளுக்கு ஞான யோகம் என்று பெயர்.

ஞானயோகத்திற்குரிய தகுதிகள்
ஞானயோகத்திற்குத் தகுதி கர்மயோகம் ஆகும். கடமைகளில் விருப்பு வெறுப்பின்றி, கடமைகளின் பலன்களில் விருப்பு வெறுப்பின்றி, கடமைகளைக் கடவுள் கட்டுப்பாட்டுணர்வுடன் இயற்றுவதே கர்ம யோகம் ஆகும்.

மேலும், ஞானத்தைப் பெறுவதற்குரிய தகுதிகளாக, சாஸ்த்ரங்கள் நான்கு ஸாதனைகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.

* எது நிலையற்றது, எது நிலையானது என்பது பற்றிய பகுத்தறிவு (விவேகம்)
* நிலையற்ற பொருள்களில் பற்றின்மை (வைராக்யம்)
* (அ) மனவடக்கம் (சம:)

(ஆ) புலனடக்கம் (தம:)

(இ) ஞானயோகத்திற்குத் தகுதிபெறும் பொருட்டு உலகியல் ரீதியான பொறுப்புகளைக் குறைத்துக்கொள்ளுதல் (உபரதி:)
(ஈ) வாழ்க்கையின் இருமைகளைப் பொறுத்துக்கொள்ளுதல் (திதிக்ஷா)
(உ) சாஸ்த்ர வாக்கியங்களிலும், குருநாதரிடத்திலும் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளுதல் (ச்ரத்தா)
(ஊ) மன ஒருமுகப்பாடு (ஸமாதாநம்)
* நிலையான மெய்ப்பொருளை அறிந்து, வாழ்வின் துன்பங்களிலிருந்து முழுமையாக விடுபட வேண்டுமென்ற பேராவல் (முமுக்ஷுத்வம்)
உலகியல் பலன்களை விரும்பாமல், உண்மையை உணர வேண்டும் என்ற பேராவலுடன் இறைவனை வழிபடுபவர்களுக்கு இறைவன் ஞான யோகத்தை வழங்கி அருள்புரிகிறார்.
தேஷாம் ஸததயுக்தாநாம் பஜதாம் ப்ரீதிபூர்வகம்|
ததாமி புத்தியோகம் தம் யேந மாமுபயாந்தி தே|| (ஸ்ரீமத்பகவத்கீதை 10:10)
உறுதியான உள்ளத்துடன் என்னிடம் பேரன்பு செலுத்துபவர்களுக்கு, எதன் மூலம் அவர்கள் என்னை அடைவார்களோ அந்த புத்தியோகத்தை (ஞானயோகத்தை) வழங்குகிறேன் என்று பகவான் ஸ்ரீக்ருஷ்ணர் கூறுகிறார்.

மூர்த்திதலம் தீர்த்தம் முறையாகத் தொடங்கினார்க்கு
வார்த்தை சொல்ல சத்குருவும் வாய்க்கும் பராபரமே
என்கிறார் தாயுமானவர்.
ஞான யோக ஸாதனைகள்
ஆத்ம ஞானத்திற்குரிய ஸாதனைகளை சாஸ்த்ரங்கள் மிகத் தெளிவாகக் கூறியிருக்கின்றன.

ஆத்மஞானத்தைப் பெறுவதற்குரிய ஸாதனைகள் மூன்று, அவை ச்ரவணம் (கேட்டல்), மனனம் (சிந்தித்தல்), நிதித்யாஸனம் (தெளிதல்). பின்வரும் ப்ருஹதாரண்யக உபநிஷத் மந்த்ரமே, அதற்கு ப்ரமாணமாக விளங்குகிறது.

ஆத்மா வா அரே த்ருஷ்டவ்ய: ச்ரோதவ்யா மந்தவ்யோ நிதித்யாஸிதவ்ய:| (மைத்ரேயீ ப்ராஹ்மணம் 2.4.5) ஆத்மாவைப் பற்றிக் கேட்டு, சிந்தித்து, தெளிந்து அபரோக்ஷமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
கேட்டலுடன் சிந்தித்தல் கேடுஇலா மெய்த்தெளிவால்
வாட்டமுறும் உத்பவ நோய்
என்பது தாயுமானவர் வாக்கு.

1. ச்ரவணம் - கேட்டல்
ச்ரவணம் என்றால் கேட்டல். தகுந்த குருநாதரின் திருவடி நிழலில் அமர்ந்து, வேதாந்த சாஸ்த்ர நூல்களை முறையாக, நீண்ட காலம் தொடர்ந்து கேட்டல் ச்ரவணம். தன்னைச் சரணடைந்த தகுதிவாய்ந்த சீடருக்கு, சாஸ்த்ரங்களின் துணைகொண்டு, குருநாதர், “நீ உடல் அல்ல, மனம் அல்ல, புத்தி அல்ல” என்றும், “நீ அதுவாக (மெய்ப்பொருளாக) இருக்கிறாய்” (தத் த்வம் அஸி|) என்று உபதேசிக்கிறார். “நான் மெய்ப்பொருளாக இருக்கிறேன்” (அஹம் ப்ரஹ்ம அஸ்மி|) என்று சீடனும் அறிந்துகொள்கிறான்.
வேதாந்த தாத்பர்ய நிச்சய: ச்ரவணம்|
வேதாந்தத்தின் உட்பொருளை அறிந்துகொள்வது ச்ரவணம் எனப்படும்.
சீடன், ச்ரவணத்தின் மூலம் வேதாந்தத்தின் உட்பொருளை அறிந்துகொள்கிறான். உண்மையில் மெய்ப்பொருள் ஒன்றே இருக்கிறது என்றும், தானே அந்த மெய்ப்பொருள் என்றும் அறிந்துகொள்கிறான்.
உபக்ரமாதி ஷட்லிங்க ஸஹித தாத்பர்ய நிச்சய: ச்ரவணம்|
ஒரு வேதாந்த சாஸ்த்ர நூல் ஆரம்பத்தில் என்ன சொல்கிறது, முடிவில் என்ன சொல்கிறது, நடுவில் எந்த விஷயத்தை திரும்பத் திரும்ப வலியுறுத்திச் சொல்கிறது, எந்தக் கருத்தை வேறு எதனாலும் தெரிந்துகொள்ள முடியாது முதலியவற்றை குருமுகமாகக் கேட்டு நன்கு அறிந்து கொள்வது ச்ரவணம் எனப்படுகிறது.

2. மனனம் - சிந்தித்தல்
மனனம் என்றால் சிந்தித்தல். குருநாதரிடம் கேட்ட சாஸ்த்ரக் கருத்துகளைக் கேட்ட பிறகும், உள்ளத்தில் பல சந்தேகங்கள் எழும். சந்தேகத்துடன் கூடிய ஞானம் பயன் தராது.
யுக்தித: சிந்தநம் மநநம்|
குருநாதர் மனனத்தின்போது பல்வேறு உதாரணங்களைச் சுட்டிக்காட்டுகிறார்.
நகை, தங்கம் என்று இரண்டு சொற்களைக் கூறினாலும், தங்கத்திற்கு வேறாக நகை இல்லை. அதுபோல், பரம்பொருளுக்கு அந்நியமாக உலகம் இல்லை.
அலை என்ற சொல்லும், கடல் என்ற சொல்லும் தண்ணீரின் மீது கற்பிக்கப்பட்டிருக்கின்றன. அதுபோல, உயிர் என்ற சொல்லும், உலகம் என்ற சொல்லும் அழியாத பரம்பொருளின்மீது கற்பிக்கப்பட்டிருக்கின்றன.
யுக்திபூர்வக ஸம்சய நிவ்ருத்தி: மநநம்|
குருநாதர் கூறும் உதாரணங்களைக் கொண்டு, தனக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களை நீக்கிக் கொள்ளுதல் மனனம்.

3. நிதித்யாஸநம் - தெளிதல்
பரம்பொருள் தத்துவத்தை சந்தேகம் இன்றித் தெளிவாகப் புரிந்துகொண்ட பிறகும், நடைமுறை வாழ்க்கை சிக்கல்கள் நிறைந்ததாகவே இருக்கும். நம்மை உடலாகவும், மனமாகவும் கருதும் நீண்டகாலப் பழக்கத்தால், இந்த ஞானம் அவ்வப்பொழுது மறந்துபோய்விடும். ஞானம் பெற்ற பிறகும், தன்னை உடலாகவும், மனமாகவும் கருதும் தவறான எண்ணத்திற்கு விபரீத பாவனை என்று பெயர்.
ப்ரஹ்மாப்யாஸ: நிதித்யாஸநம்|
குருநாதரிடமிருந்து பெற்றுக்கொண்ட கருத்துகளை ஆழ்ந்து த்யானம் செய்வதன் மூலம், அவை ஆழ்மனத்திற்குச் செல்கின்றன. விபரீத பாவனை நீங்குகிறது. அறிவு வலிமை மன வலிமையாக மாறுகிறது.
ஞானம் பெற்ற பிறகு செய்யப்படும் த்யானம் குறித்து பகவத்கீதையின் ஆறாம் அத்யாயத்திலும் (யோகீ யுஞ்ஜீத ஸததம்| 6-10), பதினெட்டாம் அத்யாயத்திலும் (த்யாநயோக பரோ நித்யம்| 18-52) பல கருத்துகளை பகவான் ஸ்ரீக்ருஷ்ணர் கூறியிருக்கிறார்.
த்யானம் செய்வதால் புதிதாக ஞானம் எதுவும் ஏற்படாது. ச்ரவணத்தின் மூலம் கிடைக்காத ஞானம், மனனத்தாலோ நிதித்யாஸனத்தாலோ கிடைக்கப் போவதில்லை. ச்ரவணத்தின் மூலம் ஞானம் கிடைக்கிறது. ஆனால் மனனம், நிதித்யாஸனத்தின் மூலம்தான் ஞானம் உறுதிப்படுகிறது.
மநோபுத்யஹங்கார சித்தாநி நாஹம் ந ச ச்ரோத்ரஜிஹ்வே ந ச க்ராண நேத்ரே|
ந ச வ்யோமபூமிர் ந தேஜோ ந வாயு: சிதாநந்தரூப: சிவோ(அ)ஹம்  சிவோ(அ)ஹம்||
நான் மனம் அல்ல, புத்தி அல்ல, அஹங்காரம் அல்ல, சித்தம் அல்ல, காது அல்ல, நாக்கு அல்ல, மூக்கு அல்ல, கண் அல்ல, ஆகாசம் அல்ல, பூமி அல்ல, நெருப்பு அல்ல, காற்று அல்ல - யாண்டும் இருக்கின்ற பேரின்ப வடிவான தூய உணர்வே நான்
என்று த்யானம் செய்ய வேண்டும்.
ச்ரவணத்தின்போது, வேதாந்த சாஸ்த்ரத்தை குருமுகமாகத்தான் கற்க வேண்டும். மனனத்திற்கும் குருநாதர் உதவி புரிவார். ஆனால் நிதித்யாஸனத்திற்கு குரு உபகாரம் செய்ய முடியாது. வாயில் உணவை ஊட்டிவிடும் வரைதான் தாய் உதவி செய்யலாம். ஆனால் உணவை விழுங்குவது குழந்தையின் வேலை.

நம் மனத்தில் அநாத்ம வ்ருத்தி மிக அதிகமாக இருக்கிறது. ஆத்மாகார வ்ருத்தி பலமாக இல்லை. ஆத்மாகார வ்ருத்தியை பலப்படுத்துவது நிதித்யாஸனத்தின் வேலை. இதன்மூலம் அனைத்துவிதமான வேற்றுமை உணர்ச்சிகளும், பயங்களும் நீங்கிவிடுகின்றன.
ச்ரவணத்தின் மூலம் அறியாமை நீங்குகிறது. மனனத்தின் மூலம் ஐயங்கள் நீங்குகின்றன. நிதித்யாஸனத்தின் மூலம் தவறான எண்ணப் பழக்கங்கள் நீங்குகின்றன.
தனக்கு வேறாக ஒரு பொருளும் இல்லை என்ற தெளிந்த மெய்யறிவில் நிலைத்திருக்கும் ஆத்மஞானிகள் பேரானந்தத்தில் திளைத்திருக்கிறார்கள்.

காக்கை குருவி எங்கள் ஜாதி - நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக் களியாட்டம்
என்ற மஹாகவி பாரதியாரின் வரிகள் இங்கு ஒப்பு நோக்கத் தக்கவை.

இறையருள் துணைகொண்டு கர்மயோகத்தை முறையாகக் கடைப்பிடித்து, குருவருள் துணைகொண்டு ஞானயோகத்தை முறையாக மேற்கொண்டு பேரின்பத்தில் நிலைத்திருந்து பிறவாப் பெருநிலை அடைய மனமார்ந்த வாழ்த்துகள்

Friday 23 May 2014

தர்மானுஷ்டத்தின் அவசியம்: (ஜெகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அனுக்ரஹ பாஷணம்)

தர்மானுஷ்டத்தின் அவசியம்:

(ஜெகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அனுக்ரஹ பாஷணம்)

ஆதிசங்கர பகவத்பாதாளுடைய அவதாரம் சநாதன தர்மத்தை புனருத்காரணம் செய்வதற்காகத்தான் என்பது எல்லோருக்கும் தெரியும். பகவானுடைய ஒவ்வொரு அவதாரத்தின் லக்ஷ்யம் அதேதான். தர்மம் காப்பாற்றப்பட வேண்டும். அதர்மம் நீக்கப்பட வேண்டும். ப்ராதான்யம் கொடுத்து பகவான் தர்மத்தைக் காப்பாற்றுவதற்கு வேறு யாரையும் அனுப்பாமல், தானே வந்து விடுகிறான்.

உலகத்தில் கூட ஒரு பெரிய ஸ்தாபனத்தில் ஏதாவதொரு ப்ரச்னை வந்தால் அந்த ஸ்தாபனத்தின் எஜமானர் வந்து அதற்கு ஒன்றும் உள்ளே வரமாட்டார். ஏனெனில் அவருக்கு கீழ் நிறையப் பேர் இருக்கிறார்கள் இல்லையா? அவர்கள் எல்லாம் அதைப் போய்த் தீர்வு பண்ணிவிடுவார்கள் என்று சொல்லி அவர்களையே அனுப்புவார். எந்தப் ப்ரச்னையை வேறு யாராலும் தீர்வு பண்ண முடியாதோ அதை மட்டும் தீர்வு பண்ணுவதற்கு அந்த எஜமானரே வருவார்.

இங்கேயும் தர்மத்தை ரக்ஷணம் செய்வதற்கு வேறு யாராலும் முடியாததனால் ஸ்வயம் பகவானே வந்து அந்தக் கார்யத்தை செய்ய வேண்டி வந்துவிட்டது. வேறு யாராலும் ஏன் முடியாது என்று கேட்டால் தர்மம் என்பது அவ்வளவு ஸர்வ ஸ்ரேஷ்டமானது. அவ்வளவு ஸர்வஸ்ரேஷ்டமான தர்மத்தை உத்தாரணம் செய்யக்கூடியது அவ்வளவு லேசான கார்யம் இல்லை. அதனால் ஸ்வயம் அவதாரம் செய்ய வேண்டி வந்துவிட்டது.

பகவான் ஒவ்வொரு அவதாரத்திலேயும் தர்ம ரக்ஷணம் செய்திருக்கிறார் என்பது நமக்கு இதிகாச புராணங்களிலிருந்து தெரிகிறது. பகவான் தர்ம ரக்ஷணத்தை செய்தான் எனில் அந்தத் தர்மத்தை ஆசரணம் செய்ய வேண்டிய கடமை நம்முடயதுதானே!

நாம் சாப்பிடுவதற்கு வேண்டிய ஏற்பாடு எல்லாம் செய்யலாம். சமையல் சரியாக செய்துவைக்கலாம். பரிமாறவும் செய்யலாம். சாப்பிட வேண்டியது அங்கே உட்கார்ந்தவனைச் சேர்ந்ததுதானே? அதுவும் சமையல் செய்தவனோ, சாமான் கொண்டு வந்தவனோ செய்யக்கூடிய கார்யம் இல்லையே இது.
அதேபோல் பகவான் ஒவ்வொரு யுகத்திலேயும் அவதாரம் எடுத்து தர்மரக்ஷணம் செய்தார். தர்மரக்ஷணம் என்றால் என்ன? தர்மத்தை அனுஷ்டானம் செய்வதற்கு என்னவெல்லாம் விக்னங்கள் (தடைகள்) இருந்ததோ அவற்றையெல்லாம் நிவாரணம் செய்துவிட்டார். என்ன விக்னங்கள்? ராக்ஷஸர்கள் தர்மானுஷ்டத்திற்கு இடைஞ்சல் செய்து கொண்டிருந்தார்கள். ஒருகார்யத்திற்கு ஒருவன் இடைஞ்சல் செய்து கொண்டிருக்கிறான் என்றால் அந்தக் கார்யம் நடக்காது. அந்தக் கார்யம் நடக்கவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் அந்த இடைஞ்சலை நீக்கவேண்டும்.

தர்மானுஷ்டானுத்தில் இடைஞ்சல்களாக வந்து கொண்டிருந்த ராக்ஷஸர்களை நீக்க வேறு யாராலும் முடியாததினால் பகவான் வந்து ராக்ஷஸ ஸம்ஹாரம் செய்தார். இனி தாராளமாக தர்மானுஷ்டானம் செய்பவர்களுக்கு எந்த இடைஞ்சலும் இருக்காது என்று சொன்னார். அந்தக் கார்யம் பகவான்தான் செய்ய முடியும்; செய்துவிட்டார். பின் தர்மத்தை அனுஷ்டானம் செய்ய வேண்டிய கடமை நம்முடையதுதானே! அப்போதும் நாம் ஒன்றும் நம் கடமையை செய்யாமல் இருந்தால் நமக்கு சரியான பலன் கிடைக்காவிட்டால் நாம் யாரை தூஷிக்கமுடியும்? சமையல் பண்ணி பரிமாறி எல்லாம் ஆனதற்குப்பிறகு ஒருவன் சாப்பிடாமல் தனக்கு வயிறு நிரம்பவில்லை என்று சொன்னால் அது யாருடைய தவறு? சாப்பிடாமல் இருந்தவனுடைய தவறுதானே? அந்த மாதிரி பகவான் நமக்கு தர்மானுஷ்டத்திற்கு வேண்டிய எல்லா சௌகர்யத்தையும் செய்து கொடுத்தார்.

என்ன சௌகர்யம் என்றால் முதலில் பகவான் நமக்கு இந்த நர ஜன்மம் (மனித) கொடுத்தானே தர்மானுஷ்டானம் செய்வதற்கு சௌகர்யமாகட்டும் என்பதற்காக இந்த மனுஷ்ய சரீரத்தை கொடுத்தான். வேறு எந்த ப்ராணி சரீரம் கொடுத்தாலும் தர்மானுஷ்டானம் செய்ய முடியாது. அது எவ்வளவு பெரிய யானை சரீரமாகட்டும், ஒரு சின்ன பூனை சரீரமாகட்டும், யானையாகவோ, பூனையாகவோ பிறந்திருந்தால் நாம் தர்மத்தை அனுஷ்டிக்க முடியுமா? வேத அத்யயனம் செய்ய முடியுமா? ஒன்றும் முடியாது.

இந்த மனுஷ்ய சரீரம் என்பது எல்லாவற்றுக்கும் தகுந்தது உகந்தது. வேத அத்யயனமும் செய்ய முடியும். யாக ஹோம அனுஷ்டானமும் செய்ய முடியும். தேவாராதனையும் செய்ய முடியும். தேவோபாசனையும் செய்ய முடியும். ஞானத்தையும் அடைய முடியும். எல்லாவற்றுக்கும் அனுகூலமானது இந்த மனுஷ்ய சரீரம். இதை நமக்கு பகவான் அனுக்ரஹம் செய்திருக்கிறார்.
அதாவது தர்மானுஷ்டானத்திற்கு வேண்டிய சௌகர்யத்தை பகவான் செய்து கொடுத்திருக்கிறார். ஆனால் நாம் என்ன செய்கிறோம். இந்த சௌகர்யத்தை பயன்படுத்திக் கொள்ளவில்லை. நமக்கு இந்த தர்மத்தில் இருக்க வேண்டிய ஸ்ரத்தை வேறு எதிலேயோ போய் விடுகிறது. மீதி விஷயங்களில் நாம் எவ்வளவு உற்சாகம் காட்டுகிறோமோ அந்த உற்சாகத்தை நாம் தர்மானுஷ்டானத்தில் காட்டுவதில்லை.
ஒரு பத்து நிமிஷமாவது எந்த விஷயத்தையும் மனதிற்குக் கொண்டுவராமல் ஸந்த்யாவந்தனம் செய் என்று சொன்னால் யாராலாவது முடிகிறதா? முடியாது. சிலர் நான் 300தடவை காயத்ரி மந்த்ரம் ஜபித்திருக்கிறேன் என்று சொல்வார்கள். ஆனால் அந்த சமயத்தில் மனது எங்கே போனது என்று அவரைத்தான் கேட்க வேண்டும். மனது அங்கே இருப்பத்தில்லை. மனசு அங்கே இல்லாமல் நாம் சும்மா 1000தடவை காயத்ரி மந்த்ரம் ஜபித்தாகச் சொல்லிக் கொண்டால் என்ன ப்ரயோஜனம்? நாம் செய்கிற கார்யம் எப்படி இருக்கவேண்டும் என்று கேட்டால் த்ரிகரணசுத்தியாகச் செய்யவேண்டும். த்ரிகரணங்கள் என்று சொன்னால் மனம், வாக்கு, சரீரம் இந்த மூன்றும் சுத்தமாக இருக்கவேண்டும். மனதிலே வேறு எந்தவிதமான யோசனையும் வரக்கூடாது. வாக்கால் (வாயால்) வேறு எந்தவிதமான பேச்சும் வரக்கூடாது. சரீரத்தில் வேறு எந்தவிதமான கார்யமும் நடக்கக் கூடாது. ஜபத்துக்கு உட்கார்ந்தோம் அல்லது பூஜைக்கு உட்கார்ந்தோம் அல்லது த்யானத்துக்கு உட்கார்ந்தோம் என்று சொன்னால் அதில்தான் மனது இருக்கவேண்டும். வேறு எதிலேயும் மனது போகக்கூடாது. அப்படி செய்தால் அதற்குப் பலன் உண்டு. நாம் யாரும் அப்படி செய்வதில்லை. செய்யாமல் நாம் என்ன செய்கிறோம் நிறைய ஜபம் செயதாயிற்று. பாராயணம் செய்தாயிற்று. யாகம் செய்தாயிற்று. ஆனால் ஒரு பலனும் கிடைக்கவில்லை. ஒரேயடியாகச் சொல்லிவிடுகிறோம் ஒரு பலனும் கிடைக்கவில்லை என்று. சொல்லுகிற நம்முடைய மனதில் என்ன இருக்கிறது என்று கேட்டால் இதெல்லாம் உண்மையா சரிதானா? என்று ஒரு சந்தேக பாவம். ஏனென்றால் யாகம் செய்யச் சொல்கிறார்கள், ஹோமம் செய்யச் சொல்கிறார்கள் இதெல்லாம் செய்தால் கார்யம் கைகூடுமா? ஏதோ ஜோஸ்யர் சொல்கிறார் இல்லை வாத்யார் சொல்கிறார் அவ்வளவுதான் என்று நமக்கு தோன்றுகிறது. வாஸ்தவமாக அந்த சந்தேகம் கூடாது. சாஸ்த்ரம் என்றைக்கும் பொய் ஆகாகது என்ற நம்பிக்கை நமக்கு வேண்டும். சாஸ்த்ரம் என்றைக்கும் பொய் இல்லை. நம்முடைய மனதில் ஸ்ரத்தை இல்லாததினால் கார்யம் நடக்கவில்லை.
பகவான் கீதையிலே சொல்லியிருக்கிறான்.

அஸ்ரத்யா ஹுதம்தத்தம்
தபஸ்தப்தம் க்ருதம் ச யத் |
அஸதித்யுச்யதே பார்த்த
நசதத்ப்ரேத்ய நோஇஹ ||

நீ ஸ்ரத்தை இல்லாமல் எந்த கார்யம் செய்தாலும் உனக்கு பலன் கிடைக்காது. நீ நிறைய தவம் செய்தேன். ஹோமம் செய்தேன். தானம் செய்தேன் என்று என்ன சொன்னாலும் ஸ்ரத்தை இல்லாமல் செய்துவிட்டு பலன் கிடைக்கவில்லை என்று சாஸ்த்ரத்தை ஆட்சேபிக்கிறாய். தவறு உன்னிடம் இருக்கிறது. தவறு சாஸ்த்ரத்தில் இல்லை. உன்னிடம் இருக்கும் தவறை திருத்திக் கொள்ளாமல் சாஸ்த்ரத்தின் மேல்பழி போட்டால் என்ன ப்ரயோஜனம்? அதனால் பகவான் நமக்கு தர்மானுஷ்டானத்திற்கு வேண்டிய சௌகர்யம் கொடுத்துவிட்டு இடைஞ்சல்களையும் நீக்கி நமக்கு பெரிய உபகாரம் செய்தாலும் கூட அதை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் அதாவது சரியாக தர்மாசரணம் செய்யாமல் இருந்தால் அது நம்முடைய தவறே ஒழிய யாரையும் ஆட்சேபிக்க முடியாது.
பகவான் தன்னுடைய அவதார கார்யத்தை சரியாக நடத்தினான். பகவத்பாதாள் அவதாரம் எடுத்துவிட்டு தர்மத்துக்கு விரோதமாக வேதத்திற்கு விரோதமாக ப்ரசாரங்கள் செய்து கொண்டு இருந்தார்களோ அவை எல்லாவற்றையும் தடுத்து விட்டார். அப்பேர்ப்பட்டவருக்கு துளி கூட அவகாசம் இல்லாமல் செய்துவிட்டார். இனி நீ தாராளமாக ஸ்ரத்தையான தர்மத்தை செய்யலாம் என்கிற ஒரு பரிஸ்திதியை உண்டாக்கினார். ஆனால் நாம் அப்படி இருந்தாலும் கூட சரியாக தர்மானுஷ்டானம் செய்யவில்லை யென்றால் அது ரொம்பப் பெரிய அபராதமாகும்.

தர்மத்தை நாம் அனுஷ்டித்தாலும், அனுஷ்டிக்காவிட்டாலும் தர்மத்திற்கு ஒன்றும் ஆகப்போவதில்லை. ஈஸ்வரனுக்கும் ஒன்றும் ஆகப்போவதில்லை. ஆகப்போவது நமக்குத்தான். நாம் தர்மத்தை அனுஷ்டித்தால் நமக்கு நலம். நாம் தர்மானுஷ்டானம் செய்யவில்லை என்றால் நமக்குத்தான் கெடுதல். நமக்கு எல்லாருக்கும் கெடுதல் ஆகக்கூடாது நல்லது ஆகவேண்டும் என்று எண்ணுகிறோம். ஆனால் ஸத்கர்ம அனுஷ்டானம் செய் என்கிறபோது மட்டும் நாம் என்னவெலாம் காரணங்கள் சொல்லிக் கொண்டு இருக்கிறோம்.

சிலபேர் எனக்கு செய்யவேண்டும் என்று இருக்கிறது. ஆனால் நேரம் கிடைக்கவில்லை. சீக்கிரம் ஆபீஸ் போக வேண்டும் என்று சொல்வார்கள் ஆனால் டி.வி பார்க்கிறதை நிறுத்துகிறீர்களா? நிறுத்துவதில்லையே இல்லை இரண்டுபேர் வேண்டாத விஷயங்களைப் பேசுவதை நிறுத்துகிறீர்களா? நிறுத்துவது இல்லையே ஆனால் ஸந்த்யாவந்தனம் விஷயம் வரும்போது சொல்கிறீர்கள் சீக்கரம் ஆபீஸ் போக வேண்டியிருக்கிறது அப்போது அவன் சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். வாஸ்தவமாக தர்மானுஷ்டானத்திற்குத்தான் ப்ராதான்யம். அதற்கு பின்புதான் மீதி விஷயங்கள் எல்லாம். தனக்கு நித்யகர்மானுஷ்டானத்திற்கு இடைஞ்சல் வருவதாக இருந்தால் அந்தக் காரியமே தனக்கு வேண்டாம் என்கிற அளவிலே நம் முன்னோர் இருந்தார்கள்.

முன்பு பெரிய பெரிய இராஜா சபைகளில் பெரிய வித்வான்கள் இருந்தார்கள். அந்த வித்வான்கள் அந்த இராஜாவுடைய ஆஸ்ரயத்திலே இருந்ததனால் அந்த இராஜாவின் கட்டளைப்படி அவர்கள் நடக்க வேண்டும் வேறு வழியில்லை. ஆனால் அவர்கள் தங்களுடைய அனுஷ்டான சமத்தில் இராஜாவிடமிருந்து யாரேனும் வந்து “மகாராஜா உங்களை வரச் சொல்கிறார்” என்றால் “அனுஷ்டானத்தை முடித்து விட்டு வருகிறோம்” என்று சொல்லு என்று சொல்லிக் கொண்டிருந்தார்களாம் “இல்லை உடனே வரச் சொல்லு” என்று சொன்னால் “இல்லை அனுஷ்டானம் முடிந்த பிற்பாடு வருகிறேன்” என்று சொல்வார்கள்.

அவர்களுக்கு இராஜா என்ன செய்வானோ என்கிற பயம் இல்லை. என்ன செய்யப்போகிறான் என்னுடைய அனுஷ்டானத்தைவிட இராஜா எனக்கு ஒன்றும் பெரியது அல்ல. அவனுடைய கடமை முடிந்தபிறகு இராஜாவிடம் போனால் இராஜா “நான் உங்களுக்கு சொல்லி அனுப்பி ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. இப்போது வருகிறீர்களே” என்று கேட்பாராம். அப்போது அந்தப் பண்டிதர்கள் “அனுஷ்டானம் முடியவில்லை, அனுஷ்டானத்தை முடித்து விட்டு நேராக வந்து விட்டோம்.” என்பார்களாம். ஆனால் “என்னை காக்க வைத்து விட்டீர்களே” என்று இராஜா கேட்டால் அதற்கு “உங்கள் நன்மைக்காகத்தான் அனுஷ்டானம் செய்து கொண்டிருந்தோம். அனுஷ்டானம் ஒழுங்காக செய்வதால்தானே உங்ககது இராஜ்யத்துக்கும் உங்களுக்கும் க்ஷேமம் உண்டாகும். நடுவில் அனுஷ்டானத்தை விட்டுவிட்டு வந்தால் உங்களுக்கும் நல்லது ஆகாது. உங்கள் இராஜ்யத்திற்கும் நல்லது ஆகாது.” என்று சொல்வார்கள்.

எப்பேர்ப்பட்ட ஸ்ரத்தை இருந்தது அந்தப் பண்டிதர்களுக்கு. அந்த மகான்கள் எல்லோரும் நம் முன்னோர் என்று சொல்லிக் கொள்வதிலேயே திருப்திப்படுகிறோமே ஒழிய நாமும் அதுமாதிரி இருக்கவேண்டும் என்று நமக்கு யாருக்கும் வருவதில்லை. நம் முன்னோர் அந்த மாதிரி இருந்தார்கள். அவர்கள் யாருக்கும் பயப்பட்டுக் கொண்டிருக்கவில்லை.

தர்மத்திற்கு மேலே எதுவும் இல்லை. ஈஸ்வரனுக்கு மேலே எதுவும் இல்லை. என் தர்மானுஷ்டானத்திற்கு இடைஞ்சலாக இருந்தால் அந்தக் காரியம் எனக்குத்தேவையில்லை. அந்த மாதிரி ஒரு வைராக்யத்தோடு இருந்ததினால் அவர்கள் மகான்கள் ஆனார்கள். இன்றைக்கு அதற்கு மதிப்பு கொடுக்காமல் கேவலம் லௌகீகமான போகம் முக்யம். பணம்தான் முக்யம் பெயர்தான் முக்யம். லௌகீகமான உத்யோகம்தான் முக்யம். வேறு எதுவும் முக்யம் இல்லை என்கிற பாவத்தில் நாம் இருக்கிறோம். அப்போது பகவான் அவ்வளவு கஷ்டப்பட்டு அவதாரம் செய்து இந்த ராக்ஷஸ ஸம்ஹாரம் எல்லாம் செய்ததற்கு ப்ரயோஜனம் என்ன? அதனால் நாம் அது எல்லாவற்றையும் சரியாக கவனித்து நம்முடைய ஜீவனத்தில் தர்மானுஷ்டானத்திற்குத்தான் ப்ராதான்யம் கொடுக்கவேண்டும். அதற்குத்தான் இந்த மனுஷ்யஜன்மா வந்து இருக்கிறது. இந்த மனுஷ்ய ஜன்மா ரொம்ப துர்லபமானது. இந்த ஜன்மா போய் விட்டது என்றால் திரும்ப மனுஷ்யாளாகவே பிறப்போம் என்று யாருக்காவது உத்தரவாதம் உண்டா? கிடையாது. திரும்ப எந்த ஜன்மா வரப்போகிறதோ யாருக்குத் தெரியும். வேறு ஏதாவது ஜன்மா வந்தால் ஒன்றும் செய்ய முடியாதே. அதை நினைத்துக்கொண்டு இந்த ஜன்மாவிலேயே நாம் தர்மானுஷ்டானத்தை கூடுமான வரையிலும் அதிகமாக செய்து இன்னும் உத்தம ஜன்மா வருவதற்கு முயற்சி செய்யவேண்டுமே தவிர இந்த ஜன்மாவை கேவலம் கௌகீகமான விஷயத்திலேயே கழிப்பது கொஞ்சமும் ந்யாயமில்லை.

அதற்குத்தான் பகவத்பாதாள் இந்தச் சதுராம்னாய பீடாஸ்தாபனம் செய்தது. ஜனங்களுக்கு அடிக்கடி இந்த தர்ம விஷயத்திலே ப்ரபோதம் செய்யவேண்டும் என்று எண்ணினார். ஏனெனில் நமக்கு யாராவது சொல்கிறவர் ஒருவர் இருந்தால் ஒரு நாள் இல்லை ஒரு நாளைக்காவது நமக்கு நல்ல கார்யம் செய்ய வேண்டும் என்று தோன்றும். யாராவது சொல்கிறவர் ஒருவர் வேண்டும். நாம் வழி தவறினால் நீ வழி தவறுகிறாய் என்று சொல்கிறவர் வேண்டும். அதற்குத்தான் அந்தப் பரம்பரையை பகவத்பாதாள் ஏற்படுத்தினது. இந்தப் பரம்பரையிலே வரக்கூடிய ஆசார்ய புருஷர்கள் அந்தந்த காலத்தில் ஜனங்களுக்கு தர்ம மார்க்கத்தை காட்டவேண்டும். தொடர்ந்து செய்து வருகிறார்கள். யார் தர்ம மார்க்கத்தை மீறிப் போகிறார்களோ அவர்களுக்குச் சரியான மார்க தர்சனம் செய்வதையும் சரியான வழியில் கொண்டுவரவும் வற்புறுத்துகிறார்கள். அப்படி சொல்லியும் யார் செய்ய மாட்டார்களோ அது அவர்கள் பாபம், யாரும் ஒன்றும் செய்ய முடியாது.

மேலும் எந்த அளவுக்கு செய்ய முடியும். ஜனங்களுக்கு நல்லவழி சொல்லலாம். எப்படி இருப்பது உசிதம், எப்படி இருப்பது உசிதம் இல்லையென்று. ஒருவன் ஒரு வழியில் போய்க்கொண்டிருக்கிறான் அங்கே முன்னால் போனால் ஒரு குழி இருக்கிறது; அவனுக்குத் தெரியாது; நீங்கள் அங்கே அப்படியே போகாதீர்கள் அங்கே ஒரு குழி இருக்கிறது வேறு வழியில் போகலாம் என்று சொல்லலாம். தெரியும்! குழியில் விழவேண்டும் என்றுதான் போகிறேன் என்று சொன்னால் நாம் என்ன செய்வது? அவனுக்கு நாம் ஒன்றும் சொல்ல முடியாது. அதே மாதிரி நீ தர்ம மார்க்கத்தை விட்டுவிட்டால் ரொம்ப அனர்த்தமாகும். அதனால் தர்ம மார்க்கத்தை விடாதே என்று நாம் சொல்லலாம். அனர்த்தத்துக்குத்தான் நான் போவேன் என்று சொல்பவனை நாம் ஒன்றும் செய்ய முடியாது. அதனால் பகவத்பாதாள் அந்தந்த காலத்திலே ஜனங்களுக்கு தர்ம மார்க்கத்தை காண்பிக்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் பீட ஸ்தாபனம் செய்தார். அதிலேயும் தக்ஷிணாம்னாய பீடாஸ்தாபனம் ச்ருங்கேரி க்ஷேத்ரத்திலே செய்து பகவத்பாதாள் மஹோபகாரம் செய்தார். அந்த ஸ்தானத்தினுடைய மகிமை என்ன? ச்ருங்கேரி என்கிற ஸ்தானத்தினுடைய மகிமை சகஜமான வைரம் இருக்கக்கூடிய த்வேஷம் இருக்கக்கூடிய சத்ருத்வம் இருக்கக்கூடிய இரண்டு ப்ராணிகள் ஸ்நேகத்தோடு மித்ரத்தை தேடிவாழ்ந்த இடம் ச்ருங்கேரி.

பாரதத்திலேயே எந்த ஒரு இடத்திலேயும் இந்த மாதிரி ஒரு சந்நிவேசத்தை யாரும் பார்க்கவில்லை. சங்கரருக்கு அப்படி ஒரு சந்நிவேசம் கண்ணிலே பட்டது. பாம்பும், தவளையும் ஸ்நேகத்தோடு வாழ்ந்த இடம் ச்ருங்கேரி. அதனால் இந்த இடத்திலே பீட ஸ்தாபனம் செய்வதுதான் ரொம்ப உசிதம் என்று தீர்மானம் செய்து சங்கரர் அங்கு பீட ஸ்தாபனம் செய்தார். சங்கரருடைய சிஷ்யர்களிலே வயதிலேயும், வித்யையிலேயும் பெரியவர் சுரேஸ்வரர். சங்கரருடன் நேராகவே சர்ச்சை, வாதம் செய்து கடைசியிலே சங்கரர் சொல்வதுதான் ஸர்வார்த்தமாக சரி என்று ஒப்புக்கொண்டு சங்கரருக்கு சிஷ்யரானவர். அப்பேர்ப்பட்ட சுரேஸ்வரரை ச்ருங்கேரியிலே முதல் ஆசார்யாளாக நியமித்தார். தொடர்ந்து சங்கிலியாக ஒரு பரம்பரையை ஏற்படுத்தினார் சங்கரர். எல்லாக் காலங்களிலேயும் இந்த தர்மப்ரசாரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி ஓர் அமைப்பை தோற்றுவித்தார்.

தர்மம் நடந்து கொண்டு இருந்தால்தான் தேசம் சுபிக்ஷமாக இருக்கும். எங்கே தர்மம் நடக்கவில்லையோ அங்கே சுபிக்ஷம் இருக்காது. எங்கே தர்மத்தின் விஷயத்தில் ஜனங்களுக்கு ஒரு ஸ்ரத்தை இல்லையோ அந்த இடத்திலே ஜனங்கள் சுகமாக வாழமுடியாது. எங்கே தர்மத்தின் விஷயத்தில் எல்லோரும் ரொம்பவும் ஸ்ரத்தையோடு இருந்து தங்களுக்கு கூடுமானவரை அனுஷ்டானம் செய்துகொண்டு இருக்கிறார்களோ அந்த இடத்தில்தான் சுபிக்ஷம் இருக்கும். அங்குதான் ஜனங்கள் சௌகர்யமாக வாழமுடியும். இந்த த்ருஷ்டியினால் சங்கரர் இந்தப் பீட ஸ்தாபனம் என்ற உத்தமமான கார்யம் செய்தார். இந்தப் பீடத்தை ச்ருங்கேரியில் ஸ்தாபனம் செய்தார்.

ஆனால் காலக்ரமத்திலே ஜனங்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திலேயே பகவத்பாதாளுடைய ஸாந்நித்யம் சாரதாம்பாளுடைய ஸாந்நித்யம் வேண்டும் என்பதற்காக இந்தப் பீடத்தில் வந்த ஆசார்யார்கள் அங்கங்கே சங்கர மடங்களை நிர்மாணம் செய்து அங்கே பகவத்பாதாளையும், சாரதாம்பாளையும் ஸ்தாபனம் செய்தார்கள், செய்து வருகிறார்கள்.

அதனால் எல்லோருக்கும் சாரதாபரமேஸ்வரியையும் பகவத்பாதயும் சங்கரரை தர்சனம் செய்யக் கூடிய ஒரு பாக்யம் கிடைத்துள்ளது. அந்தஸந்நதியில் கொஞ்ச நேரம் உட்கார்ந்து த்யானம் செய்யக் கூடிய பாக்யம் நமக்குக் கிடைத்திருக்கிறது. சங்கரர் நமக்கு குரு. சாரதை சகல வித்யைகளுக்கும் அதிபதியானவள். நமக்கு வேண்டியது ஞானம். அந்த வித்யா தேவதையான சாரதையினாலேயும் குருவினாலேயும் கிடைத்துவிடும். ஏனெனில் ஞானத்துக்குச் சமானமான பவித்ரமான ப்ரும்மமான பொருள் இன்னொன்று இல்லை என்று பகவான் கீதையில் சொன்னார்

நஹிஞானேன ஸத்ருசம் பவித்ரமிஹ வித்யதே

அந்த ஞானம் யாரால் கிடைக்கும்? குருவினாலேயும் அந்த ஞானஸ்வரூபிணியான சாரதையினாலேயும்தான் நமக்கு ஞானப்ராப்தி ஆகும். அதற்காக தினந்தோறும் ஞான நாயகனான குருவையும் ஞானஸ்வரூபிணியான சாரதையையும் நாம் நமஸ்கரிக்க வேண்டும். ஸ்மரிக்கவேண்டும், ஆராதிக்கவேண்டும், தியானம் செய்யவேண்டும். அந்த த்ருஷ்டியிலே இந்த சங்கர மடங்கள் சங்கர பகவத்பாதாளையும் சாரதா பரமேஸ்வரியையும் ஸ்தாபனம் செய்வது என்பது அநேக ஆண்டுகளாக சம்ப்ரதாயத்தில் வந்த விஷயம்.

எங்கள் பரமேஷ்டி குருநாதர் ஜகத்குரு ஸ்ரீசச்சிதானந்த சிவாபிநவ நரஸிம்மபாரதீ ஸ்வாமிகள் எங்க பரமகுருநாதர் ஸ்ரீசந்த்ரசேகரபாரதீ மகாஸ்வாமிகள் எங்கள குருநாதர் ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த மகாஸ்வாமிகள் இந்த சங்கர மடங்களெல்லாம் ஆங்காங்கு நிர்மாணம் செய்து ஜனங்களுக்கு மஹோபகாரம் செய்தார்கள். அதே த்ருஷ்டியிலே இந்த கல்லிடை குறிச்சி கிராமத்திலே சங்கர மடத்தை நிர்மாணம் செய்து இங்கே சாரதா சங்கரரை ப்ரதிஷ்டை செய்தார்கள். இங்கே இருக்கும் மகாஜனங்களுக்கு அத்யந்த உபகாரம் ஆகும். பரமானுக்ரஹம் ஆகும். அந்த ஒரு பாவத்தினாலே இங்கே சங்கர மடத்தை ஏற்படுத்தியது. அந்த சங்கரமட நிர்மாணத்துக்கு வாஸ்தவமாக இன்றைய தினம் குருபக்த ரத்னம் கிட்டாமணி ஐயரை நாம் நினைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவர் இந்த சங்கரமட நிர்மாணத்துக்கு காரணமானவர். அவருடைய முயற்சியினாலே இங்கே சாரதா சங்கரமடத்தின் நிர்மாணம், ப்ரதிஷ்டை, கும்பாபிஷேகம் மற்றும் சாரதா சங்கரருக்கு சேவை நடக்க வேண்டியதற்கு வ்யவஸ்தை எல்லாம் அவராலே நடந்தது.

ஊர்க்காரர்கள் எல்லோரும் அதில் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் சந்தேகமேயில்லை. உங்கள் எல்லோருக்கும் இருக்கிற ஒரேஒரு தீர்மானம் நமது குரு ச்ருங்கேரி ஜகத்குரு. அவர் என்ன சொன்னாலும் அதை நாம் செய்யவேண்டும் என்கிற ஒரே ஒரு தீர்மானம் உங்களுக்கு.

அந்தத் தீர்மானத்தில் இந்த சங்கரமட நிர்மாணத்திலேயும் நீங்கள் விசேஷமான ஓர் அபிமானத்தைக் காட்டினீர்கள். பகவத்பாதாள் சாரதா பரமேஸ்வரியுடைய ஸாந்நித்யம் இந்த இடத்தில் விசேஷமாக இருக்கிறது. அது உங்கள் எல்லோருக்கும் அத்யந்த பாக்யமான விஷயம்.

இந்த ஊருக்கு ‘கல்யாணபுரி’ என்கிற பெயர் எங்கள் பரமேஷ்டி குருநாதரால் கொடுக்கப்பட்டது. அந்த கல்யாணபுரி என்கிற பெயரை சார்த்தகமாக்கிக் கொண்டு நீங்கள் இந்தக் கிராமத்திலே வசித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஜகத்குருநாதர் எப்போது வந்தாலும் அவரை அத்யந்தமான பக்தி ஸ்ரத்தைகளுடன் சேவிக்கவேண்டும், வரவேற்க வேண்டும். அவருடைய அனுக்ரஹத்தை சம்பாதிக்க வேண்டும் என்கிற பரிபூர்ணமான பாவனையோடு இருக்கக்கூடியவர்கள் நீங்கள். நான் 17 வருஷத்திற்குப் பிறகு கல்லிடைகுறிச்சிக்கு வந்து இருக்கிறேன். உங்களையெல்லாம் பார்த்து மிகவும் சந்தோஷமடைகிறேன். உங்கள் எல்லோருக்கும் பரிபூர்ணமான ஆசிர்வாதம் செய்து சாரதாசங்கரரின் அனுக்ரஹம் பூர்ணமாக இருக்கட்டும் என்று சொல்லி இந்த பாஷணத்தை இங்கு முடிக்கிறேன்.

ஹர நம: பார்வதி பதயே
ஹர ஹர மகாதேவா