Wednesday, 19 February 2014



திறமையை நல்வழியில் செலவிடு:


உலகத்தில் பலவிதமான மனிதர்கள் இருக்கிறார்கள். சிலர் பணக்காரர்கள். சிலர் நற்பண்புடையவர்கள். சிலர் துணிச்சலானவர்கள். ஒவ்வொரு மனிதனிலும் இவற்றில் ஏதாவது ஒரு பண்பு மேலோங்கி இருக்கும். அதை நன்கு பயன்படுத்தினால், அவர்கள் இந்த உலகத்திலும், அடுத்த உலகத்திலும் நலமாக இருப்பார்கள்.

உதாரணமாக, பணக்காரர்கள் தகுதியுடையவர்களுக்குத் தானம் செய்யும் மனப்பான்மையுடைய ஸாத்வீக குணமுடையவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் இருந்தால் எவ்வளவு பணம் ஸம்பாதித்தாலும் அதனால் பயனில்லை. அதே போல நற்பண்புகள் நிறைந்த ஒருவன் பணிவுடனும் இருக்க வேண்டும். இல்லையென்றால் அது அஹங்காரத்தை வளர்த்து தேவையில்லாத பல முடிவுகளுக்கு இழுத்துச் செல்லும்.

சிலருக்கு அதிகாரமும், வலிமையும் இருக்கும். அவர்கள் அவற்றைத் தவறுதலாக பயன்படுத்தாமல் தர்மத்தைக் காப்பாற்றுவதற்காக பயன்படுத்த வேண்டும்.

ப்ராஹ்மணர்களுக்கு பொறுமைதான் பெரிய செல்வம். அவர்கள் ஒருபொழுதும் இந்தக் குணநலனைக் கைவிடக்கூடாது. எந்தச் சூழ்நிலையிலும் அவர்கள் பொறுமையுடனும், பகுத்தறியும் திறத்துடனும் நடந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு, மக்கள் தங்களிடம் இருக்கும் சிறந்த குணநலன்களை நல்ல கார்யங்கள் செய்வதற்கு உபயோகப்படுத்தினால், இந்த யுகம் க்ருதயுகம்போலாகும்.

அனைவரும் இதை நன்கு கருத்தில் கொண்டு, அவரவர் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

-
ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள்
There are many kinds of peoples in the world. Their lifestyle is formed in accordance with their own samskarams. Only the one who can show all of them the way to lead a righteous life can be called a JAGATHGURU. There is no doubt that Adhi Sankara was such a Jagathguru.

Sankara gave upadesa in jnana to those who wished to tread the path of knowledge. In his works, he has given extensive advice on jnana. For those people who could not go along the jnana marga, he taught Karma yoga.

His valuable advice to chant vedas daily and do the prescribed karmas was meant for those who following the path of duty. For those who are unable to follow this advice, he prescribed the way of bakthi.

As he said, such people will find it useful, to recite the gita and Vishnu Sahasranama and think of Hari at all times.

The paths of Karma, Bhakthi, and jnana are thus, conducive to man's welfare. Adisankara, who prescribed these various yogas, for all people is indeed, worshipful, The very rememberence of him is bound to bestow good to all.

- His Holiness Sri Sri Sri Bharathi theertha Mahaswamigal.

Tuesday, 18 February 2014



மனிதன் எப்பொழுதும் நல்லவர்களுடன் ஸம்பர்கம் (தொடர்பு) வைத்துக்கொள்ள வேண்டும். கெட்ட மனிதர்கள், அதாவது பிறருக்கு தீங்கு செய்யும் மனிதர்களோடு ஸம்பர்கம் வைத்துக்கொள்ளக் கூடாது. அதுபோன்ற மனிதர்களுடனான ஸஹவாஸம் (உடன் இருப்பது) நல்லவர்களையும் கெடுத்துவிடும். மஹாபாரதக் கதையில் வரும் கர்ணன் இயற்கையில் நல்லவனாக இருந்தாலும், துர்யோதனின் கெட்ட ஸஹவாஸத்தினால் துன்பத்தை அடைந்தான். நல்லவர்களுடைய ஸஹவாஸத்தால் நல்லதாகவும், கெட்டவர்களுடைய ஸஹவாஸத்தால் கெட்டதாகவும் மாறக்கூடியது மனது. ஆகையால், எல்லோரும் எப்பொழுதும் ஸத்ஸங்கத்திலேயே தான் இருக்க வேண்டும். ஸத்ஸங்கத்தினால் மனது பரிசுத்தமாக இருந்து நல்ல நல்ல விஷயங்களையே நினைக்கும். அதனால் நல்ல கார்யங்களே நடக்கும். அப்படி ஸத்ஸங்கத்திலிருப்பவன் எப்பொழுதும் எல்லோருக்கும் நல்லவனாகவே இருப்பான். நல்லவர்களுடனான ஸஹவாஸத்தை ஸத்ஸங்கம் என்றும், நல்லவர்களுடன் ஸஹவாஸம் வைத்திருப்பவனை ஸத்புருஷன் என்றும், நம் சாஸ்த்ரங்கள் கூறுகின்றன.

தெருவிலுள்ள தண்ணீர்கூட கங்கையின் சேர்க்கையால் பவித்ரமாகிவிடுவது போல ஸத்ஸங்கம் எல்லோரையும் பவித்ரமாக்கிவிடும்.

மஹாஜனஸ்ய ஸம்ஸர்க: கஸ்ய நோன்னதிகாரக:
ரத்யாம்பு ஜாஹ்னவீ ஸங்காத் த்ரிதசைரபிவந்ததே.


எல்லோரும் இதை நன்றாகப் புரிந்துகொண்டு வாழ்க்கையைப் பவித்ரமாக்கிக் கொள்ளவேண்டும் என்று ஆசீர்வதிக்கிறோம்.



- சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள்


"Do not derive satisfaction that you have done a Puja well simply because you have offered fragrant flowers, special perfumes and a variety of Naivedhya. Without offering one's mind, no amount of other offering will make the Puja complete."

- His Holiness Sri Sri Bharathi Theertha Mahaswamigal

ஸ்ரீமத் அபிநவ வித்யாதீர்த்த மஹிமா

ஸ்ரீமத் அபிநவ வித்யாதீர்த்த மஹிமா  (தொடர்ச்சி)

அவரது சிறு வயதில் ஒரு சமயம் அவர் தம் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது, “நீ பெரியவனானவுடன் என்ன செய்வாய்” என அவர்கள் இவரிடம் கேள்வி எழுப்ப, இவரோ, “நான் கடவுளைத் தரிசிக்க முயற்சி செய்வேன்” என பதிலளித்தார். “நீ ஏன் இந்த பதிலை ஒவ்வொரு முறையும் கூறுகிறாய்?” என அவர்கள் இவரைக் கேட்க, இவரும், “ஏனெனில், அதுதான் பெரும் நன்மை பயக்கும் விஷயம்” எனத் தீர்மானமாகக் கூறுவாராம்! அதே பால்ய வயதிலேயே மற்றொரு சமயம் நண்பன் ஒருவனுடன் பேசிக் கொண்டிருக்கும்போது ஆசார்யாள், “மனிதனானவன் மிருகங்களை வேட்டையாடுவது முறையற்ற செயல்” எனக் குறிப்பிட, உடனே நண்பனும், “இதர சக்தியற்ற விலங்குகளை இந்தக் கொடிய விலங்குகள் வேட்டையாடிக் கொல்கின்றன அல்லவா? அதனால் மனிதன் இவற்றை வேட்டையாடிக் கொல்வது நியாயம்தான்” என பதிலளித்தான். அதற்கு ஆசார்யாள், “மாம்ஸ பக்ஷிணிகளான விலங்குகளுக்கு இரையாக மற்ற பல விலங்குகளை இறைவனே இயற்கையில் சிருஷ்டி செய்திருக்கிறார். இயற்கையின் விதிப்படி நடக்கும் இந்த விஷயத்தில் மூக்கை நுழைத்து அவ்விலங்குகளைக் கொல்ல மனிதனுக்கு உரிமை இல்லை” என உறுதிபடக் கூறினாராம்! அந்தச் சிறு வயதிலேயே ஆசார்யாளுக்கு அப்பேர்ப்பட்ட சிந்தனைத் தெளிவு இருந்தது.

(The Crest Jewel of Yogis எனும் புத்தகத்திலிருந்து)

Monday, 17 February 2014

The need for mind control is quite obvious. Only he who has control over his mind can be successful in worldly pursuits and be happy. Such being the case what need be said about the need for mind control in the case of spiritual aspirants? To study, to work and even to play well the mind must be concentrated on the task in hand and this is possible only if one has control over the mind.

– Jagadguru Sri Sri Abhinava Vidhyatheertha Mahaswamigal.